பெரிய திருமொழி தனியன்கள்


திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி

 

தனியன்கள்

திருக்கோட்டியூர் நம்பி அருளிச்செய்தது

கலயாமி கலித்வம்சம்* கவிம் லோகதிவாகரம்*

யஸ்ய கோபி: ப்ரகாஸாபி:* ஆவித்யம் நிஹதம்தம:*

.

எம்பெருமானார் அருளிச்செய்தது

வாழிபரகாலன் வாழிகலிகன்றி*

வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*

வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*

மங்கையர்க்கோன் தூயோன் சுடர்மானவேல்.

ஆழ்வான் அருளிச்செய்தது

நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*

நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ் நன்னூல் துறைகள்*

அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*

பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.

எம்பார் அருளிச்செய்தது

எங்கள்கதியே! இராமானுசமுனியே!*

சங்கைகெடுத்தாண்ட தவராசா*

பொங்குபுகழ் மங்கையர்க்கோனீந்த மறையாயிரமனைத்தும்*

தங்குமனம் நீயெனக்குத் தா.