திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி
தனியன்கள்
திருக்கோட்டியூர் நம்பி அருளிச்செய்தது
கலயாமி கலித்வம்சம்* கவிம் லோகதிவாகரம்*
யஸ்ய கோபி: ப்ரகாஸாபி:* ஆவித்யம் நிஹதம்தம:* . |
எம்பெருமானார் அருளிச்செய்தது
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்* வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்* மங்கையர்க்கோன் தூயோன் சுடர்மானவேல். |
ஆழ்வான் அருளிச்செய்தது
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ் நன்னூல் துறைகள்* அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்* பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே. |
எம்பார் அருளிச்செய்தது
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா* பொங்குபுகழ் மங்கையர்க்கோனீந்த மறையாயிரமனைத்தும்* தங்குமனம் நீயெனக்குத் தா. |