பெரிய திருமொழி முதல் பத்து


முதல் பத்து

முதல் திருமொழி – வாடினேன் வாடி

 

948:##

வாடினேன்வாடி வருந்தினேன்மனத்தால்* பெருந்துயர் இடும்பையில் பிறந்து*

கூடினேன் கூடி இளையவர் தம்மோடு* அவர்த்தரும் கலவியேகருதி*

ஓடினேனோடி உய்வதோர்ப்பொருளால்* உணர்வெனும் பெரும்பதந்தெரிந்து*

நாடினேன்நாடி நான்கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம். (2)   1.1.1

 

949:##

ஆவியே! அமுதே! எனநினைந்துருகி* அவரவர் பணைமுலைதுணையா*

பாவியேன் உணராது எத்தனைபகலும்* பழுதுபோய் ஒழிந்தன நாள்கள்*

தூவிசேரன்னம் துணையொடும்புணரும்* சூழ்புனல் குடந்தையே தொழுது*

என் நாவினாலுய்ய நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம். (2)   1.1.2

 

950:

சேமமேவேண்டித் தீவினைபெருக்கித்* தெரிவைமார் உருவமேமருவி*

ஊமனார் கண்ட கனவிலும்பழுதாய்* ஒழிந்தன கழிந்த அந்நாள்கள்*

காமனார் தாதை நம்முடையடிகள்* தம்மடைந்தார் மனத்திருப்பர்*

நாமம் நானுய்ய நான்கண்டு கொண்டேன்* நாராயணா என்னும் நாமம்.    1.1.3

 

951:

வென்றியே வேண்டி வீழ்பொருட்கிரங்கி* வேற்கணார் கலவியே கருதி*

நின்றவா நில்லா நெஞ்சினையுடையேன்* என்செய்கேன்? நெடுவிசும்பணவும்*

பன்றியாய் அன்றுபாரகங்கீண்ட* பாழியான் ஆழியானருளே*

நன்று நானுய்ய நான்கண்டு கொண்டேன்* நாராயணா என்னும் நாமம்.    1.1.4

 

952:

கள்வனேனானேன் படிறுசெய்திருப்பேன்* கண்டவா திரிதந்தேனேலும்*

தெள்ளியேனானேன் செல்கதிக்கமைந்தேன்* சிக்கெனத் திருவருள்பெற்றேன்*

உள்ளெலாமுருகிக் குரல் தழுத்தொழிந்தேன்* உடம்பெலாம் கண்ணநீர்சோர*

நள்ளிருளளவும் பகலும் நானழைப்பன்* நாராயணா என்னும் நாமம்.  1.1.5

 

953:## 

எம்பிரான் எந்தை என்னுடைச்சுற்றம்* எனக்கரசு என்னுடைவாணாள்*

அம்பினால் அரக்கர் வெருக்கொளநெருக்கி* அவருயிர்செகுத்த எம்அண்ணல்*

வம்புலாம்சோலைமாமதிள்* தஞ்சை மாமணிக்கோயிலேவணங்கி*

நம்பிகாள்! உய்யநான் கண்டு கொண்டேன்* நாராயணா என்னும் நாமம். (2)  1.1.6

 

954:

இற்பிறப்பறியீர் இவரவரென்னீர்* இன்னதோர்த்தன்மை என்றுணரீர்*

கற்பகம்புலவர் களைகணென்று உலகில்* கண்டவா தொண்டரைப்பாடும்*

சொற்ÛபொருளாளÖர் சொல்லுகேன்வம்மின்* சூழ்புனல் குடந்தையேதொழுமின்*

நற்பொருள்காண்மின் பாடி நீருய்ம்மின்* நாராயணா என்னும் நாமம்.   1.1.7

 

955:

கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும்* கருத்துளே திருத்தினேன் மனத்தை*

பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை* பெருநிலத்தார் உயிர்க்கெல்லாம்*

செற்றமேவேண்டித் திரிதருவேன் தவிர்ந்தேன்* செல்கதிக்கு உய்யுமாறெண்ணி*

நல்துணையாகப்பற்றினேன் அடியேன்* நாராயணா என்னும் நாமம்.    1.1.8

   

956:##

குலம்தரும் செல்வம் தந்திடும்* அடியார் படுதுயராயினவெல்லாம்*

நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும்* அருளொடு பெருநிலமளிக்கும்*

வலந்தரும் மற்றுந்தந்திடும்* பெற்ற தாயினுமாயினசெய்யும்*

நலந்தருஞ்சொல்லை நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம். (2) 1.1.9

 

957:##

மஞ்சுலாஞ்சோலை வண்டறை மாநீர்* மங்கையார்வாள் கலிகன்றி*

செஞ்சொலாலெடுத்த தெய்வ நன்மாலை* இவைகொண்டு சிக்கெனத்தொண்டீர்!*

துஞ்சும்போது அழைமின் துயர்வரில் நினைமின்* துயரிலீர் சொல்லிலும் நன்றாம்*

நஞ்சுதான் கண்டீர் நம்முடைவினைக்கு* நாராயணா என்னும் நாமம். (2) 1.1.10

 

இரண்டாம் திருமொழி- வாலிமாவலத்து

 

958:##

வாலிமாவலத்து ஒருவனதுடல்கெட* வரிசிலைவளைவித்து*

அன்றுஏலநாறு தண்தடம்பொழில் இடம்பெற* இருந்தநல் இமயத்துள்*

ஆலிமாமுகில் அதிர்த்தர அருவரை* அகடுறமுகடேறி*

பீலிமாமயில்நடஞ்செயும்தடஞ்சுனைப்* பிரிதிசென்றடை நெஞ்சே. (2) 1.2.1

 

959:

கலங்கமாக்கடல் அரிகுலம்பணிசெய்ய* அருவரையணைகட்டி*

இலங்கைமாநகர் பொடிசெய்த அடிகள்தாம்* இருந்தநல் இமயத்து*

விலங்கல்போல் வனவிறல் இருஞ்சினத்தன* வேழங்கள்துயர்க்கூர*

பிலங்கொள்வாளெயிற்று அரியவைதிரிதரு* பிரிதிசென்றடை நெஞ்சே!    1.2.2

 

960:

துடிகொள்நுண்ணிடை சுரிகுழல் துளங்கெயிற்று* இளங்கொடிதிறத்து*

ஆயர் இடிகொள் வெங்குரலினவிடை அடர்த்தவன்* இருந்த நல்லிமயத்து*

கடிகொள்வேங்கையின் நறுமலரமளியின்* மணியறை மிசைவேழம்*

பிடியினோடு வண்டிசைசொலத் துயில்கொளும்* பிரிதிசென்றடை நெஞ்சே!    1.2.3

 

961:

மறங்கொளாளரி உருவென வெருவர* ஒருவனது அகல்மார்வம் திறந்து*

வானவர் மணிமுடி பணிதர* இருந்தநல் இமயத்து*

இறங்கியேனங்கள் வளைமருப்பிடந்திடக்* கிடந்தருகெரிவீசும்*

பிறங்குமா மணியருவியொடு இழிதரு* பிரிதிசென்றடை நெஞ்சே!    1.2.4

 

962:

கரைசெய்மாக் கடல்கிடந்தவன்*கனைகழல் அமரர்கள்தொழுதேத்த*

அரைசெய் மேகலை அலர்மகள் அவளொடும்* அமர்ந்தநல் இமயத்து*

வரைசெய்மாக்களிற் இளவெதிர் வளர்முளை* அளைமிகு தேன்தோய்த்து*

பிரசவாரிதன் இளம்பிடிக்கு அருள்செயும்* பிரிதிசென்றடை நெஞ்சே!   1.2.5

 

963:

பணங்களாயிரமுடய நல்லவரவணைப் பள்ளிகொள்* பரமாவென்று*

இணங்கிவானவர் மணிமுடிபணிதர* இருந்தநல் இமயத்து*

மணங்கொள்மாதவி நெடுங்கொடிவிசும்புற* நிமிர்ந்தவைமுகில்பற்றி*

பிணங்குபூம்பொழில் நுழைந்து வண்டிசைசொலும்* பிரிதிசென்றடை நெஞ்சே!  

  

964:

கார்கொள்வேங்கைகள் கனவரைதழுவிய* கறிவளர்க்கொடிதுன்னி*

போர்கொள்வேங்கைகள் புனவரைதழுவிய* பூம்பொழில் இமயத்துள்*

ஏர்கொள்பூஞ்சுனைத் தடம்படிந்து இனமலர்* எட்டுமிட்டிமையோர்கள்*

பேர்களாயிரம் பரவிநின்று அடிதொழும்* பிரிதிசென்றடை நெஞ்சே!    1.2.7

 

965:

இரவுகூர்ந்து இருள்பெருகிய வரைமுழை* இரும்பசி அதுகூர*

அரவமாவிக்கு மகன்பொழில்தழுவிய* அருவரையிமயத்து*

பரமனாதியெம் பனிமுகில் வண்ணனென்று* எண்ணிநின்று இமையோர்கள்*

பிரமேனாடு சென்றடிதொழும் பெருந்தகைப்* பிரிதிசென்றடை நெஞ்சே!   1.2.8

 

966:

ஓதியாயிரநாமங்கள் உணர்ந்தவர்க்கு* உறுதுயரடையாமல்*

ஏதமின்றி நின்றருளும் நம்பெருந்தகை* இருந்தநல் இமயத்து*

தாதுமல்கிய பிண்டிவிண்டு அலர்கின்ற* தழல்புரை எழில்நோக்கி*

பேதைவண்டுகள் எரியென வெருவரு* பிரிதிசென்றடை நெஞ்சே!     1.2.9

 

967:##

கரியமாமுகிற் படலங்கள் கிடந்து* அவைமுழங்கிட*

களிறென்று பெரியமாசுணம் வரையெனப்பெயர்தரு* பிரிதி எம்பெருமானை*

வரிகொள் வண்டறை பைம்பொழில் மங்கையர்* கலியனது ஒலிமாலை*

அரிய இன்னிசைபாடும் நல்லடியவர்க்கு* அருவினை அடையாவே*     1.2.10

 

 மூன்றாம் திருமொழி – முற்றமூத்து

 

968:##

முற்றமூத்துக் கோல்துணையா* முன்னடி நோக்கி வளைந்து*

இற்றகால்போல் தள்ளிமெள்ள * இருந்தங்கு இளையாமுன்*

பெற்றதாய்போல் வந்தபேய்ச்சி* பெருமுலையூடு*

உயிரை வற்றவாங்கியுண்டவாயான்* வதரிவணங்குதுமே.     1.3.1

 

969:

முதுகுபற்றிக் கைத்தலத்தால்* முன்னொருகோல் ஊன்றி*

விதிர்விதிர்த்துக் கண்சுழன்று* மேற்கிளை கொண்டிருமி*

இதுவென்னப்பர் மூத்தவாறென்று* இளையவர் ஏசாமுன்*

மதுவுண்வண்டு பண்கள்பாடும்* வதரிவணங்குதுமே.     1.3.2

 

970:

உறிகள்போல் மெய்நரம்பெழுந்து* ஊன்தளர்ந்து உள்ளமெள்கி*

நெறியைநோக்கிக் கண்சுழன்று* நின்றுநடுங்காமுன்*

அறிதியாகில் நெஞ்சம் அன்பால்* ஆயிரநாமம் சொல்லி*

வெறிகொள்வண்டு பண்கள்பாடும்* வதரிவணங்குதுமே.     1.3.3

 

971:

பீளைசோரக் கண்இடுங்கிப்* பித்தெழ மூத்திருமி*

தாள்கள்நோவ தம்மில்முட்டித்* தள்ளி நடவாமுன்*

காளையாகிக் கன்றுமேய்த்துக்* குன்றெடுத்துஅன்றுநின்றான்*

வாளைபாயும்தண்தடஞ்சூழ்* வதரிவணங்குதுமே.     1.3.4

 

972:

பண்டு காமரானவாறும்* பாவையர் வாயமுதம் உண்டவாரும்*

வாழ்ந்த வாரும்* ஒக்கவுரைத்திருமி*

தண்டுகாலா ஊன்றியூன்றித்* தள்ளிநடவாமுன்*

வண்டுபாடும் தண்துழாயான்* வதரிவணங்குதுமே.     1.3.5

 

973:

எய்த்தசொல்லோடு இளைத்து ஏங்கி* இருமியிளைத்து*

உடலம் பித்தர்ப்போல சித்தம் வேறாய்ப்* பேசியயராமுன்*

அத்தன் எந்தை ஆதிமூர்த்தி* ஆழ்கடலைக் கடைந்த*

மைத்தசோதி எம்பெருமான்* வதரிவணங்குதுமே.     1.3.6

 

974:

பப்பவப்பர் மூத்தவாறு* பாழ்ப்பது சீத்திரளையொப்ப*

ஐக்கள்போத உந்த* உன்தமர் காண்மினென்று*

செப்புநேர்மென் கொங்கை நல்லார்* தாம்சிரியாத முன்னம்*

வைப்பும் நங்கள் வாழ்வுமானான்* வதரிவணங்குதுமே.    1.3.7

 

975:

ஈசிபோமின் ஈங்கிரேன்மின்* இருமியிளைத்தீர்*

உள்ளம் கூசியிட்டீர் என்றுபேசும்* குவளையங் கண்ணியர்ப்பால்*

நாசமான பாசம் விட்டு* நன்னெறி நோக்கலுறில்*

வாசம் மல்கு தண்துழாயான்* வதரிவணங்குதுமே.     1.3.8

 

976:

புலன்கள்நைய மெய்யில்மூத்துப்* போந்திருந்து உள்ளமெள்கி*

கலங்கவைக்கள் போதவுந்திக்* கண்ட பிதற்றாமுன்*

அலங்கலாய தண்துழாய்கொண்டு* ஆயிரநாமம் சொல்லி*

வலங்கொள் தொண்டர் பாடியாடும்* வதரிவணங்குதுமே.    1.3.9

 

977:##

வண்டு தண்தேன் உண்டுவாழும்* வதரிநெடுமாலை*

கண்டல்வேலி மங்கைவேந்தன்* கலியன் ஒலிமாலை*

கொண்டு தொண்டர் பாடியாடக்* கூடிடில் நீள்விசும்பில்*

அண்டமல்லால் மற்றவர்க்கு* ஓராட்சி அறியோமே.      1.3.10

 

நான்காம் திருமொழி – ஏனமுனாகி

 

978:##

ஏனமுனாகி இருநிலமிடந்து* அன்றிணையடி இமையவர்வணங்க*

தானவனாகம் தரணியில்புரளத்* தடஞ்சிலைகுனித்த என்தலைவன்*

தேனமர்சோலைக் கற்பகம்பயந்த* தெய்வநன் நறுமலர்க்கொணர்ந்து*

வானவர்வணங்கும் கங்கையின்கரைமேல்* வதரியாச்சிராமத்துள்ளானே.  1.4.1

 

979:

கானிடையுருவைச் சுடுசரம்துரந்து* கண்டுமுன் கொடுந்தொழிலுரவோன்*

ஊனுடையகலத்து அடுகணைகுளிப்ப* உயிர்க்கவர்ந்துகந்த எம்மொருவன்*

தேனுடைக்கமலத்து அயனொடுதேவர்* சென்றுசென்று இறைஞ்சிட*

பெருகுவானிடைமுதுநீர்க் கங்கையிங்கரைமேல்* வதரியாச்சிராமத்துள்ளானே.  

 

980:

இலங்கையும்கடலும் அடலருந்துப்பின்* இருநிதிக்கிறைவனும்*

அரக்கர் குலங்களும் கெடமுன் கொடுந்தொழில்புரிந்த கொற்றவன் *கொழுஞ்சுடர்சுழன்ற*

விலங்கலில் உரிஞ்சிமேல்நின்றவிசும்பில்* வெண்துகிற்கொடி எனவிரிந்து*

வலந்தருமணிநீர்க் கங்கையின் கரைமேல்* வதரியாச்சிராமத்துள்ளானே. 1.4.3

 

 

981:

துணிவினி உனக்குச் சொல்லுவன்மனமே!* தொழுதெழு தொண்டர்கள்தமக்கு*

பிணியொழித்தமரர் பெருவிசும்பருளும்* பேரருளாளன் எம்பெருமான்*

அணிமலர்க்குழலார் அரம்பையர்த்துகிலும்* ஆரமும்வாரிவந்து*

அணிநீர் மணிகொழித்திழிந்த கங்கையின்கரைமேல்* வதரியாச்சிராமத்துள்ளானே.

 

982:

பேயிடைக்கிருந்துவந்த மற்றவள்தன்* பெருமுலைசுவைத்திட*

பெற்றதாயிடைக்கு இருத்தலஅஞ்சுவனென்று தளர்ந்திட* வளர்ந்தவெந்தலைவன்*

சேய்முகட்டு உச்சியண்டமுஞ்சுமந்த* செம்பொன்செய் விலங்கலி இலங்கு,*

வாய்முகட்டிழிந்த கங்கையின்கரைமேல்* வதரியாச்சிராமத்துள்ளானே.  1.4.5

 

983:

தேரணங்கல்குல் செழுங்கையற்கண்ணி திறத்து* ஒருமறத்தொழில்புரிந்து*

பாரணங்கிமிலேறு ஏழுமுன்னடர்த்த* பனிமுகில்வண்ணன் எம்பெருமான்*

காரணந்தன்னால் கடும்புனல்கயத்த* கருவரை பிளவெழக்குத்தி*

வாரணங்கொணர்ந்த கங்கையின்கரைமேல்* வதரியாச்சிராமத்துள்ளானே.  1.4.6

 

984:

வெந்திறல்களிறும் வேலைவாயமுதும்* விண்ணொடு விண்ணவர்க்கரசும்*

இந்திரற்கருளி எமக்குமீந்தருளும்* எந்தையெம்மடிகள் எம்பெருமான்*

அந்தரத்தமரர் அடியிணைவணங்க* ஆயிரமுகத்தினாலருளி*

மந்தரத்திழிந்த கங்கையின்கரைமேல்* வதரியாச்சிராமத்துள்ளானே. 1.4.7

 

985:

மான்முனிந்தொருகால் வரிசிலைவளைத்த* மன்னவன் பொன்னிறத்துரவோன்*

ஊன்முனிந்த அவனதுடல்இருபிளவா* உகிர்நுதிமடுத்து*

அயனரனைத் தான்முனிந்திட்ட* வெந்திறல்சாபம் தவிர்த்தவன்*

தவம்புரிந்துயர்நட மாமுனிகொணர்ந்த கங்கையின்கரைமேல்* வதரியாச்சிராமத்துள்ளானே.  

 

986:

கொண்டல்மாருதங்கள் குலவரைதொகுநீர்க்கு* உரைகடல் உலகுடன் அனைத்தும்*

உண்ட மாவயிற்றோன் ஒண்சுடரேய்ந்த* உம்பரும் ஊழியுமானான்*

அண்டமூடறுத்து அன்றந்தரத்திழிந்து* அங்கவனியாள் அலமர*

பெருகும்மண்டுமாமணிநீர்க் கங்கையின் கரைமேல்* வதரியாச்சிராமத்துள்ளானே.  

 

987:##

வருந்திரை மணிநீர்க் கங்கையின் கரைமேல்* வதரியாச்சிராமத்துள்ளானை*

கருங்கடல்முந்நீர் வண்ணனையெண்ணிக்* கலியன்வாய் ஒலி செய்த பனுவல்*

வரஞ்செய்த ஐந்துமைந்தும்வல்லார்கள்* வானவர் உலகுடன் மருவி*

இருங்கடல் உலகமாண்டு வெண்குடைக்கீழ்* இமையவர் ஆகுவர்தாமே.    1.4.10

 

ஐந்தாம் திருமொழி – கலையும் கரியும்

 

988:##

கலையும்கரியும் பரிமாவும்* திரியும்கானம் கடந்துபோய்*

சிலையும்கணையும் துணையாகச்சென்றான்* வென்றிச்செறுக்களத்து*

மலைகொண்டு அலைநீரணைகட்டி* மதிள்நீரிலங்கை வாளரக்கர் தலைவன்*

தலைபத்தறுத்துகந்தான்* சாளக்கிராமம் அடைநெஞ்சே!  1.5.1

 

989:

கடம்சூழ்கரியும் பரிமாவும்* ஒலிமாந்தேரும் காலாளும்*

உடஞ்சூழ்ந்தெழுந்த கடியிலங்கை* பொடியவடிவாய்ச் சரம்துரந்தான்*

இடம்சூழ்ந்தெங்கும் இருவிசும்பில்* இமையோர்வணங்க மணம்கமழும்*

தடம்சூழ்ந்தெங்கும் அழகாய* சாளக்கிராமம் அடைநெஞ்சே!    1.5.2

 

 

990:

உலவுதிரையும் குலவரையும்* ஊழிமுதலா எண்திக்கும்*

நிலவும்சுடரும் இருளுமாய் நின்றான்* வென்றிவிறலாழி வலவன்*

வானோர் தம்பெருமான்* மருவாவரக்கர்க்கு எஞ்ஞான்றும் சலவன்*

சலம்சூழ்ந்தழகாய* சாளக்கிராமம் அடைநெஞ்சே!    1.5.3

 

991:

ஊராங்குடந்தை உத்தமன்* ஒருகாலிருகால் சிலைவளைய*

தேராவரக்கர் தேர்வெள்ளம் செற்றான்* வற்றாவருபுனல்சூழ் பேரான்*

பேராயிரமுடையான்* பிறங்குசிறை வண்டறைகின்ற தாரான்*

தாராவயல்சூழ்ந்த* சாளக்கிராமம் அடைநெஞ்சே!    1.5.4

 

992:

அடுத்தார்த்தெழுந்தாள் பிலவாய்விட்டலற* அவள்மூக்கு அயில்வாளால் விடுத்தான்*

விளங்குசுடராழி* விண்ணோர்ப்பெருமான் நண்ணார்முன்*

கடுத்தார்த்தெழுந்த பெருமழையைக்* கல்லொன்றேந்தி இனநிரைக்காத்தடுத்தான்*

தடம்சூழ்ந்தழகாய* சாளக்கிராமம் அடைநெஞ்சே!  1.5.5

 

993:

தாயாய்வந்த பேயுயிரும்* தயிரும்விழுதும் உடனுண்ட வாயான்*

தூயஅரியுருவிற் குறளாய்ச்சென்று* மாவலையை ஏயானிரப்ப*

மூவடிமண் இன்றே தாவென்று* உலகேழும் தாயான்*

காயாமலர்வண்ணன்* சாளக்கிராமம் அடைநெஞ்சே!     1.5.6

 

994:

ஏேனார் அஞ்ச வெஞ்சமத்துள்* அரியாய்ப் பரியவிரணியனை*

ஊனாரகலம் பிளவெடுத்த* ஒருவன்தானே இருசுடராய்*

வானாய்த் தீயாய் மாருதமாய்* மலையாய் அலைநீருலகனைத்தும் தானாய்*

தானுமானான்தன்* சாளக்கிராமம் அடைநெஞ்சே!     1.5.7

 

995:

வெந்தார் என்பும் சுடுநீறும்* மெய்யில்பூசிக் கையகத்து*

ஓர்சந்தார் தலைகொண்டு உலகேழும் திரியும்* பெரியோன்தாஞ்சென்று*

என்எந்தாய்! சாபம்தீரென* இலங்கமுதநீர்த் திருமார்பில் தந்தான்*

சந்தார் பொழில்சூழ்ந்த* சாளக்கிராமம் அடைநெஞ்சே!  1.5.8

 

996:

தொண்டாமினமும் இமையோரும்* துணைநூல்மார்பின் அந்தணரும்*

அண்டா எமக்கே அருளாய்என்று* அணையும்கோயில் அருகெல்லாம்*

வண்டார்ப்பொழிலின் பழனத்து* வயலின் அயலே கயல்பாய*

தண்டாமரைகள் முகமலர்த்தும்* சாளக்கிராமம் அடைநெஞ்சே!    1.5.9

 

997:##

தாராவாரும் வயல்சூழ்ந்த* சாளக்கிராமத்து அடிகளை*

காரார்ப்புறவின் மங்கைவேந்தன்* கலியனொலி செய்தமிழ்மாலை*

ஆரார் உலகத்து அறிவுடையார்* அமரர்நன்னாட்டு அரசாள*

பேராயிரமும் ஓதுமின்கள்* அன்றி இவையே பிதற்றுமினே.       1.5.10

 

 

ஆறாம் திருமொழி – வாணிலாமுறுவல்

 

998:##

வாணிலாமுறுவல் சிறுநுதல் பெருந்தோள்* மாதரார் வனமுலைப் பயனே பேணினேன்*

அதனைப் பிழையெனக்கருதிப்* பேதையேன் பிறவிநோயறுப்பான்*

ஏணிலேன் இருந்தேன் எண்ணினேன் எண்ணி* இளையவர்க்கலவியின் திறத்தை நாணினேன்*

வந்துஉன்திருவடியடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்!  1.6.1

 

999:

சிலம்படியுருவிற் கருநெடுங்கண்ணார்* திறத்தனாய்!அறத்தையேமறந்து*

புலம்படிந்துண்ணும் போகமேபெருக்கிப்* போக்கினேன் பொழுதினைவாளா*

அலம்புரிதடக்கை ஆயனே!மாயா!* வானவர்க்கரசனே!*

வானோர் நலம்புரிந்திறைஞ்சும் திருவடியடைந்தேன்* நைமிசாரணியத்துளெந்தாய்!   

 

1000:

சூதினைப்பெருக்கிக் களவினைத் துணிந்து* சுரிகுழல் மடந்தையர்திறத்து*

காதலேமிகுத்துக்கண்டவா* திரிந்ததொண்டனேன் நமன்தமர்செய்யும்*

வேதனைக்கு ஒடுங்கிநடுங்கினேன்* வேலைவெண்திரை அலமரக்கடைந்த நாதனே*

வந்துஉன் திருவடியடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்!  1.6.3

 

1001:

வம்புலாங்கூந்தல் மனைவியைத்துறந்து* பிறர்பொருள் தாரம் என்றிவற்றை*

நம்பினார் இறந்தால்* நமன்தமர்ப்பற்றி எற்றிவைத்து*

எரிஎழுகின்ற செம்பினால்இயன்ற பாவையைப்* பாவீ! தழுவெனமொழிவதற்க்குஅஞ்சி*

நம்பனே! வந்துஉன்திருவடியடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்!  1.6.4

 

1002:

இடும்பையால் அடர்ப்புண்டு இடுமினோதுஉற்றென்னு* இரந்தவர்க்கு இல்லையேயென்று*

நெடுஞ்சொலால்மறுத்த நீசனேன்அந்தோ!* நினைக்கிலேன் வினைப்பயன் தன்னை*

கடுஞ்சொலார் கடியார் காலனார் தமரால்* படுவதோர் கொடுமிறைக்குஅஞ்சி*

நடுங்கிநான்வந்துஉன்திருவடியடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்! 1.6.5

 

1003:

கோடியமனத்தால் சினத்தொழில்புரிந்து* திரிந்துநாயினத்தொடுந்திளைத்திட்டு*

ஓடியும்உழன்றும் உயிர்களேகொன்றேன்* உணர்விலேன் ஆதலால்*

நமனார்ப்பாடியைப்பெரிதும் பரிசழித்திட்டேன்* பரமனே! பாற்கடல்கிடந்தாய்!*

நாடிநான்வந்து உன்திருவடியடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்!  1.6.6

 

1004:

நெஞ்சினால்நினைந்தும் வாயினால்மொழிந்தும்* நீதியல்லாதன செய்தும்*

துஞ்சினார்செல்லும் தொல்நெறிகேட்டே* துளங்கினேன் விளங்கனிமுனிந்தாய்!*

வஞ்சனேன் அடியேன் நெஞ்சினில்பிரியா* வானவா! தானவர்க்கென்றும் நஞ்சனே!*

வந்துஉன்திருவடியடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்! 1.6.7

 

1005:

ஏவினார்க்கலியார் நலிகவென்று* என்மேல் எங்ஙனே வாழுமாறு?*

ஐவர்கோவினார்செய்யும் கொடுமையைமடித்தேன்* குறுங்குடி நெடுங்கடல்வண்ணா!*

பாவினார்இஞ்சொல் பன்மலர்க்கொண்டு* உன்பாதமேபரவி நான்பணிந்து*

என்நாவினால்வந்துஉன்திருவடியடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்!  1.6.8

 

1006:

ஊனிடைச்சுவர்வைத்து என்புதூண்நாட்டி* உரோமம்வேய்ந்து ஒன்பதுவாசல்*

தானுடைக்குரம்பைப் பிரியும்போது* உந்தன்சரணமேசரணம் என்றுஇருந்தேன்*

தேனுடைக்கமலத் திருவினுக்கரசே!* திரைகொள்மா நெடுங்கடற்கிடந்தாய்!*

நானுடைத் தவத்தால் திருவடியடைந்தேன்* நைமிசாரணியத்துளெந்தாய்! 1.6.9

 

1007:##

ஏதம்வந்து அணுகா வண்ணநாமெண்ணி* எழுமினோ தொழுதுமென்று*

இமையோர் நாதன்வந்துஇறைஞ்சும்* நைமிசாரணியத்தெந்தையைச் சிந்தையுள்வைத்து*

காதலேமிகுத்த கலியன்வாயொலிசெய்* மாலைதாம் கற்றுவல்லார்கள்*

ஓதநீர்வையகம்ஆண்டு வெண்குடைக்கீழ்* உம்பரும்ஆகுவர் தாமே.    1.6.10

 

ஏழாம் திருமொழி – அங்கண்ஞலமஞ்ச

 

1008:##

அங்கண் ஞாலமஞ்ச* அங்கோராளரியாய்*

அவுணன் பொங்கவாகம் வள்ளுகிரால்* போழ்ந்த புனிதனிடம்*

பைங்கணானைக் கொம்புகொண்டு* பத்திமையால்*

அடிக்கீழ்ச் செங்கணாளியிட்டிறைஞ்சும்* சிங்கவேள்குன்றமே.     1.7.1

 

1009:

அலைத்தபேழ்வாய்* வாளெயிற்றோர்க் கோளரியாய்*

அவுணன் கொலைக்கையாளன் நெஞ்சிடந்த* கூருகிறாளனிடம்*

மலைத்தசெல்சாத்தெறிந்தபூசல்* வன்துடிவாய்கடுப்ப*

சிலைக்கைவேடர் தெழிப்பறாத* சிங்கவேள்குன்றமே.     1.7.2

 

1010:

ஏய்ந்தபேழ்வாய்* வாளெயிற்றோர்க்கோளரியாய்*

அவுணன் வாய்ந்தவாகம் வள்ளுகிரால்* வகிர்ந்தவம்மானதனிடம்*

ஓய்ந்தமாவும் உடைந்தகுன்றும்* அன்றியும் நின்றழலால்*

தேய்ந்தவேயுமல்லதில்லாச்* சிங்கவேள்குன்றமே.     1.7.3

 

1011:

எவ்வும் வெவ்வேல் பொன்பெயரோன்& ஏதலினின்னுயிரை வவ்வி*

ஆகம்வள்ளுகிரால்* வகிர்ந்தவம்மானதிடம்*

கவ்வுநாயும்கழுகும்* உச்சிபோதொடுகால்சுழன்று*

தெய்வமல்லால் செல்லவொண்ணாச்* சிங்கவேள்குன்றமே.     1.7.4

 

1012:

மென்றபேழ்வாய்* வாளெயிற்றோர்க்கோளரியாய்*

அவுணன் பொன்றவாகம்வள்ளுகிரால்* போழ்ந்த புனிதனிடம்*

நின்றசெந்தீ மொண்டுசூறை* நீள்விசும்பூடிரிய*

சென்றுகாண்டற்கரியகோயில்* சிங்கவேள்குன்றமே.      1.7.5

 

1013:

எரிந்தபைங்கணிலங்குபேழ்வாய்* எயிற்றொடுஇதுஎவ்வுருவென்று*

இரிந்துவானோர் கலங்கியோட* இருந்தவம்மானதிடம்*

நெரிந்தவேயின் முழையுள்நின்று* நீணெறிவாயுழுவை*

திரிந்தவானைச்சுவடுபார்க்கும்* சிங்கவேள்குன்றமே.    1.7.6

 

1014:

முனைத்தசீற்றம் விண்சுடப்போய்* மூவுலகும் பிறவும்*

அனைத்துமஞ்சஆளரியாய்* இருந்தவம்மானதிடம்*

கனைத்ததீயும் கல்லுமல்லா* வில்லுடைவேடருமாய்*

தினைத்தனையும் செல்லவொண்ணாச்* சிங்கவேள்குன்றமே.    1.7.7

 

 

1015:

நாத்தழும்ப நான்முகனும்* ஈசனுமாய் முறையால் ஏத்த*

அங்கோராளரியாய்* இருந்தவம்மானதிடம்*

காய்த்தவாகை நெற்று ஒலிப்பக்* கல்லதர்வேய்ங்கழைபோய்*

தேய்த்ததீயால் விண்சிவக்கும்* சிங்கவேள்குன்றமே.     1.7.8

 

1016:

நல்லைநெஞ்சே!  நாம் தொழுதும்* நம்முடை நம்பெருமான்*

அல்லிமாதர் புல்கநின்ற* ஆயிரம் தோளனிடம்,

நெல்லிமல்கிக் கல்லுடைப்பப்* புல்லிலையார்த்து*

அதர்வாய்ச் சில்லிசில்லென்று ஒல்லறாத* சிங்கவேள்குன்றமே.      1.7.9

 

1017:##

செங்கணாளி இட்டிறைஞ்சும்* சிங்கவேள்குன்றுடைய*

எங்களÖசன் எம்பிரானை* இருந்தமிழ் நூற்புலவன்*

மங்கையாளன் மன்னுதொல்சீர்* வண்டறைதார்க் கலியன்*

செங்கையாளன் செஞ்சொல்மாலை* வல்லவர் தீதிலரே.    1.7.10

 

எட்டாம் திருமொழி-கொங்கலர்ந்த

 

1018:##

கொங்கலர்ந்த மலர்க்குருந்தம் ஒசித்த* கோவலன் எம்பிரான்*

சங்குதங்கு தடங்கடல் * துயில்கொண்ட தாமரைக் கண்ணினன்*

பொங்குபுள்ளினை வாய்பிளந்த* புராணர் தம்மிடம்*

பொங்குநீர்ச் செங்கயல் திளைக்கும்சுனைத்* திருவேங்கடம் அடை நெஞ்சமே!    1.8.1

 

1019:##

பள்ளியாவது பாற்கடல்அரங்கம்* இரங்கவன்பேய்முலை*

பிள்ளையாய்உயிருண்ட எந்தை* பிரானவன் பெருகுமிடம்*

வெள்ளியான் கரியான்* மணிநிறவண்ணன் என்றெண்ணி*

நாடொறும் தெள்ளியார்வணங்கும்மலை* திருவேங்கடம் அடைநெஞ்சமே!     1.8.2

 

1020:

நின்றமாமருது இற்றுவீழ* நடந்த நின்மலன் நேமியான்*

என்றும்வானவர் கைதொழும்* இணைத்தாமரையடி எம்பிரான்*

கன்றிமாரி பொழிந்திடக்* கடிதானிரைக்கு இடர்நீக்குவான்*

சென்றுகுன்றமெடுத்தவன்* திருவேங்கடம் அடைநெஞ்சமே!      1.8.3

 

1021:

பார்த்தற்காய் அன்றுபாரதம் கைசெய்திட்டு* வென்றபரஞ்சுடர்*

கோத்துஅங்குஆயர்தம்பாடியில்* குரவைபிணைந்த எம்கோவலன்*

ஏத்துவார் தம்மனத்துள்ளான்* இடவெந்தைமேவிய எம்பிரான்*

தீர்த்தநீர்த் தடஞ்சோலைசூழ்* திருவேங்கடம் அடைநெஞ்சமே!   1.8.4

 

1022:

வண்கையான் அவுணர்க்குநாயகன்* வேள்வியில்சென்றுமாணியாய்*

மண்கையால் இரந்தான்* மராமரமேழும் எய்தவலத்தினான்*

எண்கையான் இமயத்துள்ளான்* இருஞ்சோலை மேவியவெம்பிரான்*

திண்கைம்மா துயர்த்தீர்த்தவன்* திருவேங்கடம் அடைநெஞ்சமே!    1.8.5

 

1023:

எண்திசைகளும் ஏழுலகமும் வாங்கிப்* பொன்வயிற்றில்பெய்து*

பண்டுஓராலிலைப் பள்ளிகொண்டவன்* பான்மதிக்கு இடர்த்தீர்த்தவன்*

ஒண்திறல் அவுணன் உரத்துகிர் வைத்தவன்* ஒள்ளெயிற்றொடு*

திண்திறலரியாயவன்* திருவேங்கடம் அடைநெஞ்சமே!      1.8.6

 

1024:

பாருநீர் எரிகாற்றினொடு* ஆகாசமும் இவையாயினான்*

பேருமாயிரம் பேசநின்ற* பிறப்பிலி பெருகுமிடம்*

காரும்வார் பனிநீள்விசும்பிடைச்* சோருமா முகில்தோய்தர*

சேரும்வார்ப்பொழில்சூழ்* எழில்திருவேங்கடம் அடைநெஞ்சமே!     1.8.7

 

1025:

அம்பரமனல் கால்நிலம்* சலமாகிநின்ற அமரர்க்கோன்*

வம்புலா மலர்மேல்* மலிமடமங்கை தன்கொழுநன்அவன்*

கொம்பினன்ன இடைமடக்குறமாதர்* நீளிதணந்தொறும்*

செம்புநம்மவைகாவல்கொள்* திருவேங்கடம் அடைநெஞ்சமே!      1.8.8

 

1026:##

பேசுமின்திருநாமம்எட்டெழுத்தும்* சொல்லிநின்று பின்னரும்*

பேசுவார்த்தம்மை உய்யவாங்கிப்* பிறப்பறுக்கும் பிரானிடம்*

வாசமாமலர் நாறுவார்ப்பொழில்* சூழ்தரும் உலகுக்கெல்லாம்*

தேசமாய்த் திகழும்மலை* திருவேங்கடம் அடைநெஞ்சமே! (2)    1.8.9

 

1027:##

செங்கயல் திளைக்கும் சுனைத்* திருவேங்கடத்துறைசெல்வனை*

மங்கையர்த்தலைவன் கலிகன்றி* வண்தமிழ்ச் செஞ்சொல்மாலைகள்*

சங்கையின்றித்தரித்து உரைக்கவல்லார்கள்* தஞ்சமதாகவே*

வங்கமாகடல்வையம் காவலராகி* வானுலகாள்வரே!      1.8.10

 

ஒன்பதாம் திருமொழி – தாயேதந்தை

 

1028:##

தாயேதந்தையென்றும்* தாரமே கிளைமக்களென்றும்*

நோயேபட்டொழிந்தேன்* உன்னைக்காண்பதோர் ஆசையினால்*

வேயேய்பூம்பொழில்சூழ்* விரையார் திருவேங்கடவா!*

நாயேன் வந்துஅடைந்தேன்* நல்கிஆளென்னைக்கொண்டருளே.    1.9.1

 

1029:

மானேய் கண்மடவார்* மயக்கில்பட்டு மாநிலத்து*

நானே நானாவித* நரகம்புகும் பாவம்செய்தேன்*

தேனேய் பூம்பொழில்சூழ்* திருவேங்கடமாமலை*

என்ஆனாய் வந்தடைந்தேன்* அடியேனைஆட்கொண்டருளே.     1.9.2

 

1030:

கொன்றேன் பல்லுயிரைக்* குறிக்கோள் ஒன்றிலாமையினால்*

என்றேனும் இரந்தார்க்கு* இனிதாக உரைத்தறியேன்*

குன்றேய் மேகமதிர்* குளிர்மாமலை வேங்கடவா!*

அன்றே வந்தடைந்தேன்* அடியேனைஆட்கொண்டருளே.      1.9.3

 

1031:

குலந்தானெத்தனையும்* பிறந்தே இறந்தெய்த்தொழிந்தேன்*

நலந்தான்ஒன்றுமிலேன்* நல்லதோர்அறம்செய்துமிலேன்*

நிலம்தோய் நீள்முகில்சேர்* நெறியார் திருவேங்கடவா!*

அலந்தேன் வந்தடைந்தேன்* அடியேனை ஆட்கொண்டருளே.    1.9.4

 

 

1032:

எப்பாவம்பலவும்* இவையேசெய்து இளைத்தொழிந்தேன்*

துப்பா! நின்னடியே* தொடர்ந்தேத்தவும் கிற்கின்றிலேன்*

செப்பார் திண்வரைசூழ்* திருவேங்கடமாமலை*

என்அப்பா! வந்தடைந்தேன்* அடியேனைஆட்கொண்டருளே.     1.9.5

 

1033:

மன்னாய் நீரெரிகால்* மஞ்சுலாவும் ஆகாசமுமாம்*

புண்ணாராக்கைதன்னுள்* புலம்பித்தளர்ந்து எய்த்தொழிந்தேன்*

விண்ணார் நீள்சிகர* விரையார் திருவேங்கடவா!*

அண்ணா! வந்தடைந்தேன்* அடியேனைஆட்கொண்டருளே.     1.9.6

 

1034:

தெரியேன் பாலகனாய்ப்* பலதீமைகள் செய்துமிட்டேன்*

பெரியேனாயினபின்* பிரர்க்கே உழைத்துஏழையானேன்*

கரிசேர் பூம்பொழில்சூழ்* கனமாமலை வேங்கடவா!,*

அரியே! வந்தடைந்தேன்* அடியேனைஆட்கொண்டருளே.     1.9.7

 

1035:

நோற்றேன் பல்பிறவி* உன்னைக்காண்பதோர் ஆசையினால்*

ஏற்றேன் இப்பிறப்பே* இடருற்றனன் எம்பெருமான்!*

கோல்தேன் பாய்ந்தொழுகும்* குளிர்சோலைசூழ் வேங்கடவா!*

ஆற்றேன் வந்தடைந்தேன்* அடியேனை ஆட்கொண்டருளே.     1.9.8

 

1036:

பற்றேல் ஒன்றுமிலேன்* பாவமேசெய்து பாவியானேன்*

மற்றேல் ஒன்றரியேன்* மாயனே! எங்கள்மாதவனே!*

கல்தேன் பாய்ந்தொழுகும்* கமலச்சுனை வேங்கடவா!,

அற்றேன் வந்தடைந்தேன்* அடியேனைஆட்கொண்டருளே.     1.9.9

 

1037:

##

கண்ணாய் ஏழுலகுக்கு உயிராய* எங்கார்வண்ணனை*

விண்ணோர்த்தாம்பரவும்* பொழில்வேங்கட வேதியனை*

திண்ணார்மாடங்கள்சூழ்* திருமங்கையர்க்கோன்கலியன்*

பண்ணார்ப்பாடல்பத்தும்* பயில்வார்க்கில்லை பாவங்களே.    1.9.10

 

பத்தாம் பத்து – கண்ணார்கடல்சூழ்

 

1038:##

கண்ணார் கடல்சூழ்* இலங்கைக்கு இறைவன்தன்*

திண்ணாகம் பிளக்கச்* சலம்செல உய்த்தாய்!*

விண்ணோர்த்தொழும்* வேங்கட மாமலைமேய*

அண்ணா! அடியேன்* இடரைக்களையாயே.    1.10.1

 

1039:

இலங்கைப்பதிக்கு* அன்றுஇறையாய*

அரக்கர்க்குலம்கெட்டு அவர்மாளக்* கொடிப்புள்திரித்தாய்!*

விலங்கல்குடுமித்* திருவேங்கடம்மேய*

அலங்கல் துளபமுடியாய்!* அருளாயே.    1.10.2

 

1040:

நீரார்க்கடலும்* நிலனும் முழுதுண்டு*

ஏராலம்இளந்தளிர்மேல்* துயில் எந்தாய்!*

சீரார்* திருவேங்கடமாமலைமேய*

ஆராவமுதே!* அடியேற்கருளாயே.     1.10.3

 

1041:

உண்டாய் உறிமேல்* நறுநெய் அமுதாக*

கொண்டாய் குறலாய்* நிலம்ஈரடியாலே*

விண்தோய் சிகரத்* திருவேங்கடம்மேய,

அண்டா!* அடியேனுக்கு அருள்புரியாயே.    1.10.4

 

1042:

தூணாய் அதனூடு* அரியாய்வந்துதோன்றி*

பேணாஅவுணன்உடலம்* பிளந்திட்டாய்!*

சேணார் திருவேங்கட* மாமலைமேய,*

கோணாகணையாய்!* குறிக்கொள் எனைநீயே.   1.10.5

 

1043:

மன்னா* இம்மனிசப்பிறவியை நீக்கி*

தன்னாகித்* தன்னினருள் செய்யும்தலைவன்*

மின்னார் முகில்சேர்* திருவேங்கடம்மேய*

என்னானை என்னப்பன்* என்னெஞ்சிலுளானே.    1.10.6

 

1044:

மானே மடநோக்கி* திறத்து எதிர்வந்த*

ஆனேழ்விடைசெற்ற* அணிவரைத்தோளா!*

தேனே!* திருவேங்கடமாமலை மேய*

கோனே! என்மனம்* குடிகொண்டிருந்தாயே.    1.10.7

 

1045:

சேயன்அணியன்* எனசிந்தையுள் நின்றமாயன்*

மணிவாளொளி* வெண்டரளங்கள்*

வேய்விண்டுதிர்* வேங்கடமாமலைமேய*

ஆயனடிஅல்லது* மற்றுஅறியேனே.     1.10.8

 

1046:

வந்தாய் என்மனம் புகுந்தாய்* மன்னிநின்றாய்*

நந்தாத கொழுஞ்சுடரே* எங்கள் நம்பீ!*

சிந்தாமணியே* திருவேங்கடம்மேய எந்தாய்!*

இனியான் உன்னை* என்றும் விடேனே.   1.10.9

 

1047:##

வில்லார்மலி* வேங்கடமாமலைமேய*

மல்லார் திரள்தோள்* மணிவண்ணனம்மானை*

கல்லார் திரள்தோள்* கலியன் சொன்னமாலை,*

வல்லாரவர்* வானவராகுவர்த்தாமே.    1.10.10