தனியன்கள்


திருவாய்மொழித் தனியன்கள்
நாதமுனிகள் அருளிச்செய்தது
பக்தாம்ருதம் விஶ்வ ஜனானு மோதனம்*

ஸர்வார்த்ததம் ஸ்ரீஶடகோப வாங்க்மயம்*

ஸகஶ்ர ஶாகோப நிஷத்ஸமாகமம்*

நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.*

ஈச்வரமுனிகள் அருளிச்செய்தது
திருவழுதி நாடென்றும் தென்குருகூர் என்றும்,*

மருவினிய வண்பொரு நலென்றும்,* – அருமறைகள்

அந்தாதி செய்தான் அடியிணையே* எப்பொழுதும்,

சிந்தியாய் நெஞ்சே! தெளிந்து.

சொட்டை நம்பிகள் அருளிச்செய்தது
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்*

இனத்தாரையல்லா திறைஞ்சேன்,* – தனத்தாலும்

ஏதும் குறைவிலேன்* எந்தை சடகோபன்,

பாதங்கள் யாமுடைய பற்று.

அனந்தாழ்வான் அருளிச்செய்த்து
ஏய்ந்தபெருங்கீர்த்தி இராமானுசமுனிதன்*

வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன்,* – ஆய்ந்தபெருஞ்ச்

சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம்தரிக்கும்,*

பேராத உள்ளம் பெற.

பட்டர் அருளிச்செய்தவை
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்*

ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும்,* – ஈன்ற

முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த*

இதத்தாய் இராமுனுசன்.

 

மிக்க விறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,*

தக்க நெறியும் தடையாகித் – தொக்கியலும்,*

ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,*

யாழினிசை வேதத் தியல்.