முதல் திருமொழி
2791:##
உயர்வற உயர்நலம்* உடையவன் எவன்? அவன்*
மயர்வற மதிநலம்* அருளினன் எவன்? அவன்*
அயர்வறும் அமரர்கள்* அதிபதி எவன்? அவன்*
துயரறு சுடரடி* தொழுதெழு என்மனனே! (2) 1.1.1
2792:
மனனகமலமற* மலர்மிசை எழுதரும்*
மனனுணர் வளவிலன்,* பொறியுணர் வவையிலன்*
இனனுணர், முழுநலம்,* எதிர்நிகழ் கழிவினும்*
இனனிலன் எனன்உயிர்,* மிகுநரை யிலனே. 1.1.2
2793:
இலனது உடையனிது* எனநினை அரியவன்*
நிலனிடை விசும்பிடை* உருவினன் அருவினன்*
புலனொடு புலனலன்,* ஒழிவிலன், பரந்த* அந்
நலனுடை ஒருவனை* நணுகினம் நாமே.* 1.1.3
2794:
நாமவன் இவன்உவன்,* அவள்இவள் உவளெவள்*
தாமவர் இவர்உவர்,* அதுவிது வுதுவெது*
வீமவையிவையுவை,* அவைநலம், தீங்கவை*
ஆமவை, ஆயவை ஆய்* நின்ற அவரே.* 1.1.4
2795:
அவரவர் தமதமது* அறிவறி வகைவகை*
அவரவர் இறையவர்* எனஅடி அடைவர்கள்*
அவரவர் இறையவர்* குறைவிலர்; இறையவர்*
அவரவர் விதிவழி* அடைய நின்றனரே. 1.1.5
2796:
நின்றனர் இருந்தனர்* கிடந்தனர் திரிந்தனர்*
நின்றிலர் இருந்திலர்* கிடந்திலர் திரிந்திலர்*
என்றுமொர் இயல்வினர்* எனநினை வரியவர்*
என்றுமொர் இயல்வொடு* நின்றவெந்திடரே. 1.1.6
2797:
திடவிசும் பெரிவளி* நீர்நிலம் இவைமிசை*
படர்பொருள் முழுவதுமாய்* அவை அவைதொறும்*
உடல்மிசை உயிரெனக்* கரந்தெங்கும் பரந்துளன்*
சுடர்மிகு சுருதியுள்* இவையண்ட சுரனே. 1.1.7
2798:
சுரரறி வருநிலை* விண்முதல் முழுவதும்*
வரன் முதலாயவை* முழுதுண்ட பரபரன்*
புரமொரு மூன்றெரித்து* அமரர்க்கு அறிவியந்து*
அரனயன் என* உலகழித்தமைத் துளனே. 1.1.8
2799:
உளனெனில் உளன்அவன்* உருவம்இவ்வுருவுகள்*
உளனலனெனில், அவன்* அருவமிவ்வருவுகள்*
உளனென இலனென* இவைகுண முடைமையில்*
உளன்இரு தகைமையொடு* ஒழிவிலன் பரந்தே. 1.1.9
2800:
பரந்ததண் பரவையுள்* நீர்தொறும் பரந்துளன்*
பரந்த அண்டமிதென:* நிலவிசும் பொழிவற*
கரந்த சிலிடந்தொறும்* இடந்திகழ் பொருள்தொறும்*
கரந்தெங்கும் பரந்துளன்:* இவையுண்ட கரனே. 1.1.10
2801:##
கரவிசும் பெரிவளி* நீர்நில மிவைமிசை*
வரனவில் திறல்வலி* அளிபொறையாய் நின்ற*
பரன்அடி மேல்* குருகூர்ச் சடகோபஞ்சொல்*
நிரல் நிறை ஆயிரத்து* இவைபத்தும் வீடே. (2) 1.1.11
இரண்டாம் திருமொழி
2802:##
வீடுமின் முற்றவும்* வீடுசெய்து* உம்முயிர்
வீடுடை யானிடை* வீடுசெய்ம்மினே. (2) 1.2.1
2803:
மின்னின் நிலையில* மன்னுயிர் ஆக்கைகள்*
என்னு மிடத்து* இறை உன்னுமின் நீரே. 1.2.2
2804:
நீர்நுமது என்றிவை* வேர்முதல் மாய்த்து* இறை
சேர்மின் உயிர்க்கு* அதன் நேர்நிறை யில்லே. 1.2.3
2805:
இல்லதும் உள்ளதும்* அல்லது அவனுரு*
எல்லையில் அந்நலம்* புல்குபற்றற்றே. 1.2.4
2806:
அற்றதுபற்றெனில்* உற்றது வீடுஉயிர்*
செற்றது மன்னுறில்* அற்றிறை பற்றே. 1.2.5
2807:
பற்றிலன் ஈசனும்* முற்றவும் நின்றனன்*
பற்றிலையாய்* அவன் முற்றி லடங்கே. 1.2.6
2808:
அடங்கெழில் சம்பத்து* அடங்கக்கண்டு* ஈசன்
அடங்கெழில் அஃதென்று* அடங்குக உள்ளே. 1.2.7
2809:
உள்ளம் உரை செயல்* உள்ள இம்மூன்றையும்*
உள்ளிக் கெடுத்து* இறை யுள்ளிலொடுங்கே. 1.2.8
2810:
ஒடுங்க அவன்கண்* ஒடுங்கலும் எல்லாம்*
விடும்; பின்னும் ஆக்கை* விடும்பொழுது எண்ணே. 1.2.9
2811:
எண்பெருக்கு அந்நலத்து* ஒண்பொருள் ஈறில*
வண்புகழ் நாரணன்* திண்கழல் சேரே. (2) 1.2.10
2812:##
சேர்த்தடத்* தென்குரு கூர்ச் சடகோபன் சொல்*
சீர்த்தொடை ஆயிரத்து* ஓர்த்தஇப்பத்தே. (2) 1.2.11
மூன்றாம் திருமொழி
2813:##
பத்துடை அடியவர்க்கு எளியவன்;* பிறர்களுக்கு அரிய
வித்தகன்* மலர்மகள்விரும்பும்* நம் அரும்பெறல் அடிகள்*
மத்துறு கடைவெண்ணெய்* களவினில் உரவிடையாப் புண்டு*
எத்திறம், உரலினோடு* இணைந்திருந்து ஏங்கிய எளிவே! (2) 1.3.1
2814:
எளிவரும் இயல்வினன்* நிலைவரம் பிலபல பிறப்பாய்*
ஒளிவரு முழுநலம்* முதலில கேடில வீடாம்*
தெளிதரும் நிலைமையது ஒழிவிலன்* முழுவதும்; இறையோன்*
அளிவரும் அருளினோடு* அகத்தனன் புறத்தனன் அமைந்தே. 1.3.2
2815:
அமைவுடை அறநெறி* முழுவதும் உயர்வற உயர்ந்து*
அமைவுடை முதல்கெடல்* ஒடிவிடையற நிலமதுவாம்*
அமைவுடை அமரரும்* யாவையும் யாவரும் தானாம்*
அமைவுடை நாரணன்* மாயையை அறிபவர் யாரே? 1.3.3
2816:
யாரும் ஓர் நிலைமையனென* அறிவரிய எம்பெருமான்*
யாரும் ஓர் நிலைமையனென* அறிவெளிய எம்பெருமான்*
பேரும் ஓராயிரம்* பிறபல உடைய எம்பெருமான்*
பேரும் ஓர் உருவமும்* உளதில்லை இலதில்லை பிணக்கே. 1.3.4
2817:
பிணக்கற அறுவகைச் சமயமும்* நெறியுள்ளி உரைத்த*
கணக்கறு நலத்தனன்* அந்தமில் ஆதியம் பகவன்*
வணக்குடைத் தவநெறி* வழிநின்று புறநெறி களைகட்டு*
உணக்குமின், பசையற!* அவனுடை உணர்வு கொண்டுணர்ந்தே. 1.3.5
2818:
உணர்ந்துணர்ந்திழிந்தகன்று* உயர்ந்துருவியந்த இந்நிலைமை*
உணர்ந்துணர்ந்துணரிலும்* இறைநிலை உணர்வரிது உயிர்காள்!*
உணர்ந்துணர்ந்துரைத்துரைத்து* அரியயனரனென்னும் இவரை*
உணர்ந்துணர்ந்துரைத்துரைத்து* இறைஞ்சுமின் மனப்பட்டதொன்றே. 1.3.6
2819:
ஒன்றெனப்பலவென* அறிவரும் வடிவினுள் நின்ற*
நன்றெழில் நாரணன்* நான்முகன் அரனென்னும் இவரை*
ஒன்றநும் மனத்துவைத்து* உள்ளிநும் இருபசை அறுத்து*
நன்றென நலஞ்செய்வது* அவனிடை நம்முடை நாளே. 1.3.7
2820:
நாளும் நின்றடுநமபழமை* அங்கொடு வினையுடனே
மாளும்* ஓர் குறைவில்லை;* மனனக மலமறக் கழுவி*
நாðம் நம் திருவுடை அடிகள்தம்* நலங்கழல் வணங்கி*
மாளும் ஓரிடத்திலும்* வணக்கொடு மாள்வது வலமே. 1.3.8
2821:
வலத்தனன் திரிபுரம் எரித்தவன்,* இடம்பெறத் துந்தித்
தலத்து* எழு திசைமுகன் படைத்த* நல்லுலகமும் தானும்
புலப்பட* பின்னும் தன்னுலகத்தில்* அகத்தனன் தானே
சொலப்புகில்* இவைபின்னும் வயிற்றுள;* இவை அவன் துயக்கே. 1.3.9
2822:
துயக்கறு மதியில்நல் ஞானத்துள்* அமரரைத் துயக்கும்*
மயக்குடை மாயைகள்* வானிலும் பெரியன வல்லன்*
புயற்கரு நிறத்தனன்;* பெருநிலம் கடந்த நல் அடிப்போது*
அயர்ப்பிலன் அலற்றுவன்* தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே. 1.3.10
2823:##
அமரர்கள் தொழுதெழ* அலைகடல் கடைந்தவன் தன்னை*
அமர்பொழில் வளங்குருகூர்ச்* சடகோபன் குற்றேவல்கள்*
அமர்சுவை ஆயிரத்து* அவற்றினுள் இவை பத்தும் வல்லார்*
அமரரோடு உயர்வில்சென்று* அறுவர்தம் பிறவியஞ் சிறையே. (2) 1.3.11
நான்காம் திருமொழி
2824:##
அஞ்சிறைய மடநாராய்! *அளியத்தாய்!* நீயும்நின்
அஞ்சிறைய சேவலுமாய்* ஆவா என்று எனக்கருளி*
வெஞ்சிறைப்புள்ளுயர்த்தார்க்கு* என் விடுதூதாய்ச் சென்றக்கால்*
வன்சிறையில் அவன்வைக்கில்* வைப்புண்டால் என்செய்யுமோ? (2) 1.4.1
2825:
என்செய்ய தாமரைக்கண்* பெருமானார்க்கு என்தூதாய்*
என்செய்யும் உரைத்தக்கால்?* இனக்குயில்காள்! நீரலிரே?*
முன்செய்த முழுவினையால்* திருவடிக்கீழ்க் குற்றேவல்*
முன்செய்ய முயலாதேன்* அகல்வதுவோ? விதியினமே. 1.4.2
2826:
விதியினால் பெடைமணக்கும்* மென்னடைய அன்னங்காள்!*
மதியினால் குறள்மாணாய்* உலகிரந்த கள்வற்கு*
மதியிலேன் வல்வினையே* மாளாதோ? என்று ஒருத்தி*
மதியெல்லாம் உள்கலங்கி* மயங்குமால்‘ என்னீரே! 1.4.3
2827:
என்நீர்மை கண்டிரங்கி* இதுதகாது என்னாத*
என்நீல முகில்வண்ணற்கு* என்சொலியான் சொல்லுகேனோ?*
நன்னீர்மை இனியவர் கண்* தங்காதென்று ஒருவாய்ச்சொல்*
நன்னீல மகன்றில்காள்!* நல்குதிரோ? நல்கீரோ? 1.4.4
2828:
நல்கித்தான் காத்தளிக்கும்* பொழிலேழும்; வினையேற்கே*
நல்கத்தான் ஆகாதோ?* நாரணனைக் கண்டக்கால்*
மல்குநீர்ப் புனற்படப்பை* இரைதேர்வண் சிறுகுருகே!*
மல்குநீர்க் கண்ணேற்கு ஓர்* வாசகங்கொண்டு அருளாயே. 1.4.5
2829:
அருளாத நீரருளி* அவராவி துவராமுன்*
அருளாழிப் புட்கடவீர்* அவர்வீதி ஒருநாள்‘ என்று*
அருளாழியம்மானைக்* கண்டக்கால் இதுசொல்லி*
அருள் ஆழி வரிவண்டே!* யாமும் என் பிழைத்தோமே? 1.4.6
2830:
என்பிழைக் கோப்பதுபோலப்* பனிவாடை ஈர்கின்றது*
என்பிழையே நினைந்தருளி* அருளாத திருமாலார்க்கு*
என்பிழைத்தாள் திருவடியின்* தகவினுக்கு என்று ஒருவாய்ச்சொல்*
என்பிழைக்கும்? இளங்கிளியே!* யான்வளர்த்த நீயலையே? 1.4.7
2831:
நீயலையே? சிறுபூவாய்!* நெடுமாலார்க்கு என்தூதாய்*
நோயெனது நுவலென்ன,* நுவலாதே இருந்தொழிந்தாய்*
சாயலொடு மணிமாமை* தளர்ந்தேன் நான்* இனி உனது
வாயலகில் இன்னடிசில்* வைப்பாரை நாடாயே. 1.4.8
2832:
நாடாத மலர்நாடி* நாள்தோறும் நாரணன் தன்*
வாடாத மலரடிக்கீழ்* வைக்கவே வகுக்கின்று*
வீடாடி வீற்றிருத்தல்* வினையற்றது என் செய்வதோ?*
ஊடாடு பனிவாடாய்!* உரைத்தீராய் எனதுடலே. 1.4.9
2833:
உடலாழிப் பிறப்புவீடு* உயிர்முதலா முற்றுமாய்*
கடலாழி நீர்தோற்றி* அதனுள்ளே கண்வளரும்*
அடலாழி அம்மானைக்* கண்டக்கால் இதுசொல்லி*
விடல் ஆழி மடநெஞ்சே!* வினையோ ஒன்றாமளவே. 1.4.10
2834:##
அளவியன்ற ஏழுலகத்து* அவர்பெருமான் கண்ணனை*
வளவயல்சூழ் வண்குருகூர்ச்* சடகோபன் வாய்ந்துரைத்த*
அளவியன்ற அந்தாதி* ஆயிரத்துள் இப்பத்தின்*
வளவுரையால் பெறலாகும்* வானோங்கு பெருவளமே. (2) 1.4.11
ஐந்தாம் திருமொழி
2835:##
வளவேழ் உலகின் முதலாய* வானோர் இறையை* அருவினையேன்
‘களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட* கள்வா!‘ என்பன்; பின்னையும்*
‘தளவேழ் முறுவல் பின்னைக்காய்* வல்லான் ஆயர் தலைவனாய்*
இளவேறேழும் தழுவிய* எந்தாய்!‘ என்பன் நினைந்துநைந்தே. (2) 1.5.1
2836:
நினைந்துனைந்து உள்கரைந்துருகி,* இமையோர் பலரும் முனிவரும்*
புனைந்த கண்ணி நீர்சாந்தம்* புகையோடு ஏந்தி வணங்கினால்*
நினைந்த எல்லாப் பொருள்கட்கும்* வித்தாய், முதலில் சிதையாமே*
மனஞ்செய் ஞானத்து உன்பெருமை* மாசூணாதோ? மாயோனே! 1.5.2
2837:
மாயோனிகளாய் நடைகற்ற* வானோர் பலரும் முனிவரும்*
‘நீயோனிகளைப் படை‘ என்று* நிறைநான் முகனைப் படைத்தவன்*
சேயோன் எல்லா அறிவுக்கும்;* திசைகள் எல்லாம் திருவடியால்
தாயோன்* எல்லா எவ்வுயிர்க்கும் தாயோன்* தானோர் உருவனே. 1.5.3
2838:
தானோ ருருவே தனிவித்தாய்த்* தன்னில் மூவர் முதலாய*
வானோர் பலரும் முனிவரும்* மற்றும் மற்றும் முற்றுமாய்*
தானோர் பெருநீர் தன்னுள்ளே தோற்றி* அதனுள் கண்வளரும்*
வானோர் பெருமான் மாமாயன்* வைகுந்தன் எம் பெருமானே. 1.5.4
2839:
மானேய் நோக்கி மடவாளை* மார்வில் கொண்டாய்! மாதவா!*
கூனே சிதைய உண்டைவில்* நிறத்தில் தெறித்தாய்! கோவிந்தா!*
வானார் சோதி மணிவண்ணா!* மதுசூதா! நீ அருளாய்* உன்
தேனே மலரும் திருப்பாதம்* சேரு மாறு வினையேனே. 1.5.5
2840:
வினையேன் வினைதீர் மருந்தானாய்!* விண்ணோர் தலைவா! கேசவா!*
மனைசேர் ஆயர் குலமுதலே!* மா மாயனே! மாதவா!*
சினையேய் தழைய மராமரங்கள்* ஏழும் எய்தாய்! சிரீதரா!*
இனையாய்! இனைய பெயரினாய்!* என்று நைவன் அடியேனே. 1.5.6
2841:
அடியேன் சிறிய ஞானத்தன்;* அறிதல் ஆர்க்கும் அரியானை*
கடிசேர் தண்ணந் துழாய்க்* கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை*
செடியார் ஆக்கை அடியாரைச்* சேர்தல் தீர்க்கும் திருமாலை*
அடியேன் காண்பான் அலற்றுவன்;* இதனில் மிக்கோர் அயர்வுண்டே? 1.5.7
2842:
உண்டாய் உலகேழ் முன்னமே;* உமிழ்ந்து மாயையால் புக்கு*
உண்டாய் வெண்ணெய் சிறுமனிசர்* உவலை ஆக்கை நிலையெய்தி*
மண்தான் சோர்ந்ததுண்டேலும்* மனிசர்க் காகும் பீர்* சிறிதும்
அண்டா வண்ணம் மண்கரைய* நெய்யூண் மருந்தோ? மாயோனே! 1.5.8
2843:
மாயோம் தீயவலவலைப்* பெருமா வஞ்சப் பேய்வீய*
தூய குழவியாய் விடப்பால் அமுதா* அமுது செய்திட்ட
மாயன்* வானோர் தனித்தலைவன்* மலராள் மைந்தன் எவ்வுயிர்க்கும்
தாயோன்* தம்மான் என்னம்மான்* அம்மா மூர்த்தியைச் சார்ந்தே. 1.5.9
2844:
சார்ந்த இருவல் வினைகளும் சரித்து* மாயப் பற்றறுத்து*
தீர்ந்து தன்பால் மனம்வைக்கத்* திருத்தி, வீடு திருத்துவான்*
ஆர்ந்த ஞானச் சுடராகி* அகலம் கீழ்மேல் அளவிறந்து*
நேர்ந்த உருவாய் அருவாகும்* இவற்றின் உயிராம் நெடுமாலே! 1.5.10
2845:##
‘மாலே! மாயப் பெருமானே!* மா மாயனே!‘ என்றென்று*
மாலே ஏறி மாலருளால்* மன்னு குருகூர்ச் சடகோபன்*
பாலேய் தமிழர் இசைகாரர்* பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே* பட்ட இவைபத்தும்* வல்லார்க்கு இல்லை பரிவதே. 1.5.11
ஆறாம் திருமொழி
2846:##
பரிவதில் ஈசனைப் பாடி* விரிவது மேவலுறுவீர்!*
பிரிவகையின்றி நன்னீர்தூய்* புரிவதுவும் புகை பூவே. (2) 1.6.1
2847:
மதுவார் தண்ணந் துழாயான்* முதுவேத முதல்வனுக்கு*
எதுவே? என்பணி? என்னாது* அதுவே ஆட்செய்யு மீடே. 1.6.2
2848:
ஈடும் எடுப்பும் இல் ஈசன்* மாடு விடாது என் மனனே*
பாடும் என் நா அவன் பாடல்* ஆடும் என் அங்கம் அணங்கே. 1.6.3
2849:
அணங்கென ஆடும் எனங்கம்* வணங்கி வழிபடும் ஈசன்*
பிணங்கி அமரர் பிதற்றும்* குணங்கெழு கொள்கையினானே. 1.6.4
2850:
கொள்கை கொளாமை இலாதான்* எள்கல் இராகம் இலாதான்*
விள்கை விள்ளாமை விரும்பி* உள்கலந்தார்க்கு ஓரமுதே. 1.6.5
2851:
அமுதம் அமரகட் கீந்த* நிமிர் சுடர் ஆழி நெடுமால்*
அமுதிலும் ஆற்ற இனியன்* நிமிர்திரை நீள்கடலானே. 1.6.6
2852:
நீள்கடல்சூழ் இலங்கைக்கோன்* தோள்கள் தலைதுணி செய்தான்*
தாள்கள் தலையில் வணங்கி* நாள் கடலைக் கழிமினே. 1.6.7
2853:
கழிமின் தொண்டீர்கள் கழித்து* தொழுமின் அவனைத் தொழுதால்*
வழிநின்ற வல்வினை மாள்வித்து* அழிவின்றி ஆக்கம் தருமே. 1.6.8
2854:
தரும வரும் பயனாய* திருமகளார் தனிக் கேள்வன்*
பெருமை உடைய பிரானார்* இருமை வினைகடிவாரே. 1.6.9
2855:
கடிவார் தீய வினைகள்* நொடியாரும் அளவைக்கண்*
கொடியா அடுபுள் உயர்த்த* வடிவார் மாதவனாரே. 1.6.10
2856:##
மாதவன் பால் சடகோபன்* தீதவம் இன்றி உரைத்த*
ஏதமில் ஆயிரத்து இப்பத்து* ஓதவல்லார் பிறவாரே. 1.6.11
ஏழாம் திருமொழி
2857:##
பிறவித்துயரற* ஞானத்துள்நின்று,*
துறவிச்சுடர்விளக்கம்* தலைப்பெய்வார்,*
அறவனை* ஆழிப்படை அந்தணனை,*
மறவியையின்றி* மனத்துவைப்பாரே. 1.7.1
2858:
வைப்பாம்மருந்தாம்* அடியரை, வல்வினைத்*
துப்பாம்புலனைந்தும்* துஞ்சக்கொடான் அவன்,*
எப்பால்யவர்க்கும்* நலத்தாலுயர்ந்துயர்ந்து,*
அப்பாலவன் எங்கள்* ஆயர்க்கொழுந்தே. 1.7.2
2859:
ஆயர் கொழுந்தாய்* அவரால் புடையுண்ணும்,*
மாயப்பிரானை* என் மாணிக்கச்சோதியை,*
தூய அமுதை* பருகிப்பருகி,* என்
மாயப்பிறவி *மயர்வறுத்தேனே. 1.7.3
2860:
மயர்வற என்மனத்தே* மன்னினான் தன்னை,*
உயர்வினையேதரும்* ஒண்சுடர்க்கற்றையை,*
அயர்வில் அமரர்கள்* ஆதிக்கொழுந்தை,* என்
இசைவினை* என்சொல்லி யான்விடுவேனே. 1.7.4
2861:
விடுவேனோ? என்விளக்கை* என்னாவியை,*
நடுவேவந்து* உய்யக்கொள்கின்ற நாதனை,*
தொடுவேசெய்து* இளவாய்ச்சியர் கண்ணினுள்,*
விடவேசெய்து* விழிக்கும்பிரானையே. 1.7.5
2862:
பிரான்* பெருநிலங்கீண்டவன்,* பின்னும்
விராய்* மலர்த்துழாய் வேய்ந்தமுடியன்,*
மராமரம் எய்த மாயவன்,* என்னுள்
இரானெனில்* பின்னையானொட்டுவேனோ? 1.7.6
2863:
யானொட்டியென்னுள்* இருத்துவமென்றிலன்,*
தானொட்டிவந்து* என்தனி நெஞ்சை வஞ்சித்து,*
ஊனொட்டிநின்று* என் உயிரில்கலந்து,* இயல்
வானொட்டுமோ?* இனி என்னை நெகிழ்க்கவே. 1.7.7
2864:
என்னைநெகிழ்க்கிலும்* என்னுடைய்நல்னெஞ்சந்
தன்னை,* அகல்விக்கத் தானும்*கில்லான் இனி,*
பின்னைநெடும்பணைத் தோள்* மகிழ்பீடுடை,*
முன்னை அமரர்* முழுமுதலானே. 1.7.8
2865:
அமரர்முழுமுதல்* ஆகிய ஆதியை,*
அமரர்க்கு அமுதீந்த* ஆயர்க்கொழுந்தை,*
அமரவழும்பத்* துழாவி என்னாவி,*
அமரர்த்தழுவிற்று* இனி அகலுமோ. 1.7.9
2866:
அகலில் அகலும்* அணுகில் அணுகும்,*
புகலும் அரியன்* பொருவல்லன் எம்மான்,*
நிகரில் அவன் புகழ்* பாடி எய்ளைப்பிலம்,*
பகலும் இரவும்* படிந்து குடைந்தே. 1.7.10
2867:##
குடைந்துவண்டுண்ணும்* துழாய்முடியானை,*
அடைந்த தென்குருகூர்ச்* சடகோபன்,*
மிடைந்த சொல்தொடை* ஆயிரத்து இப்பத்து,*
உடைந்து நோய்களை* ஓடுவிக்குமே. 1.7.11
எட்டாம் திருமொழி
2868:##
ஓடும்புள்ளேறி,* சூடும் தண் துழாய்,*
நீடுநின்றவை,* ஆடும் அம்மானே. 1.8.1
2869:
அம்மானாய்ப்பின்னும்,* எம்மாண்பும் ஆனான்,*
வெம்மாவாய்கீண்ட,* செம்மா கண்ணனே. 1.8.2
2870:
கண்ணாவானென்றும்,* மண்ணோர்விண்ணோர்க்கு,*
தண்ணார்வேங்கட,* விண்ணோர்வெற்பனே. 1.8.3
2871:
வெற்பையொன்றெடுத்து,* ஒற்கமின்றியே,*
நிற்கும் அம்மான்சீர்,* கற்பன்வைகலே. 1.8.4
2872:
வைகலும்வெண்ணெய்,* கைகலந்துண்டான்,*
பொய்கலவாது,* என் மெய்கலந்தானே. 1.8.5
2873:
கலந்து என்னாவி,* நலங்கொள்நாதன்,*
புலங்கொள்மாணாய்,* நிலம்கொண்டானே. 1.8.6
2874:
கொண்டான் ஏழ்விடை,* உண்டான் ஏழ்வையம்,*
தண்தாமம்செய்து,* என் எண்தானானானே. 1.8.7
2875:
ஆனானானாயன்,* மீனோடேனமும்;*
தானானானென்னில்,* தானாயசங்கே. 1.8.8
2876:
சங்குசக்கரம்,* அங்கையில்கொண்டான்,*
எங்கும்தானாய,* நங்கள்நாதனே. 1.8.9
2877:
நாதன்ஞாலங்கொள்* பாதன், என்னம்மான்,*
ஓதம்போல்கிளர்,* வேதநீரனே. 1.8.10
2878:##
நீர்புரைவண்ணன்,* சீர்ச்சடகோபன்,*
நேர்தலாயிரத்து,* ஓர்தலிவையே. 1.8.11
ஒன்பதாம் திருமொழி
2879:##
இவையும் அவையும் உவையும்* இவரும் அவரும் உவரும்,*
யவையும் யவரும் தன்னுள்ளே* ஆகியும் ஆக்கியும் காக்கும்,*
அவையுள் தனிமுதல் எம்மான்* கண்ணபிரான் என்னமுதம்,*
சுவையன் திருவின்மணாளன்* என்னுடைச் சூழலுளானே. 1.9.1
2880:
சூழல்பலபலவல்லான்* தொல்லையங்காலத்து உலகை*
கேழல் ஒன்றாகியிடந்த* கேசவன் என்னுடைய அம்மான்,*
வேழமருப்பையொசித்தான்* விண்ணவர்க்கு எண்ணலரியான்*
ஆழநெடுங்கடல்சேர்ந்தான்* அவனென்னருகலிலானே. 1.9.2
2881:
அருகலிலாயபெருஞ்சீர்* அமரர்களாதிமுதல்வன்,*
கருகிய நீல நன் மேனி வண்ணன்* செந்தாமரைக்கண்ணன்,*
பொருசிறைப்புள்ளுவந்தேறும்* பூமகளார்தனிக்கேள்வன்,*
ஒருகதியின் சுவைதந்திட்டு* ஒழிவிலன் என்னோடு உடனே. 1.9.3
2882:
உடனமர்க்காதல்மகளிர்* திருமகள் மண்மகள் ஆயர்
மடமகள்,* என்றிவர்மூவர் ஆளும்* உலகமும் மூன்றே,*
உடனவையொக்கவிழுங்கி* ஆலிலைச் சேர்ந்தவன் எம்மான்,*
கடல்மலி மாயப் பெருமான்* கண்ணன் என் ஒக்கலை யானே. 1.9.4
2883:
ஒக்கலை வைத்து முலைப்பால் உண்ணென்று* தந்திடவாங்கி,*
செக்கஞ்செக அன்றவள்பால்* உயிர்செகவுண்டபெருமான்,*
நக்கபிரானோடு அயனும் *இந்திரனும் முதலாக,*
ஒக்கவும் தோற்றிய ஈசன்* மாயன் என்னெஞ்சினுளானே. 1.9.5
2884:
மாயன் என்னெஞ்சினுள்ளான்* மற்றும்யவர்க்கும் அதுவே,*
காயமும் சீவனும் தானே* காலும் எரியும் அவனே,*
சேயன் அணியன்யவர்க்கும்* சிந்தைக்கும் கோசரமல்லன்,*
தூயன் துயக்கன் மயக்கன்* என்னுடைத் தோளிணையானே. 1.9.6
2885:
தோளிணைமேலும் நன்மார்பின்மேலும்* சுடர்முடிமேலும்,*
தாளிணைமேலும் புனைந்த* தண்ணந்துழாயுடையம்மான்*
கேளிணையொன்றுமிலாதான்* கிளரும் சுடர் ஒளி மூர்த்தி,*
நாளணைந்தொன்றும் அகலான்* என்னுடைநாவினுளானே. 1.9.7
2886:
நாவினுள் நின்று மலரும்* ஞானக் கலைகளுக் கெல்லாம்,*
ஆவியும் ஆக்கையும்தானே* அழிப்போடு அளிப்பவன் தானே,*
பூவியல்நால்தடந்தோளன்* பொருபடை ஆழி சங்கேந்தும்,*
காவி நன் மேனிக் கமலக்கண்ணன்* என்கண்ணினுளானே. 1.9.8
2887:
கமலக்கண்ணன் என்கண்ணினுள்ளான்* காண்பன் அவன்கண்களாலே,*
அமலங்களாகவிழிக்கும்* ஐம்புலனும் அவன் மூர்த்தி,*
கமலத்தயன்நம்பிதன்னைக்* கண்ணுதலானொடும்தோற்றி*
அமலத் தெய்வத்தோடு உலகமாக்கி* என்நெற்றியுளானே. 1.9.9
2888:
நெற்றியுள் நின்று என்னையாளும்* நிரைமலர்ப் பாதங்கள்சூடி,*
கற்றைத்துழாய்முடிக்கோலக்* கண்ணபிரானைத்தொழுவார்,*
ஒற்றைப்பிறையணிந்தானும்* நான்முகனும் இந்திரனும்,*
மற்றைய அமரரும் எல்லாம் வந்து* எனது உச்சியுளானே. 1.9.10
2889:##
உச்சியுள்ளே நிற்கும் தேவதேவற்குக்* கண்ணபிராற்கு,*
இச்சையுள் செல்ல உணர்த்தி* வண்குருகூர்ச்சடகோபன்,*
இச்சொன்னவாயிரத்துள்* இவையும் ஓர்பத்து எம்பிராற்கு,*
நிச்சலும் விண்ணப்பம் செய்ய* நீள்கழல்சென்னிபொருமே. 1.9.11
பத்தாம் திருமொழி
2890:##
பொருமாநீள்படை* ஆழிசங்கத்தொடு,*
திருமாநீள்கழல்* ஏழுலகும்தொழ,*
ஒருமாணிக்குறளாகி*நிமிர்ந்த,* அக்
கருமாணிக்கம்* என் கண்ணுளதாகுமே. 1.10.1
2891:
கண்ணுள்ளே நிற்கும்* காதன்மையால்தொழில்,*
எண்ணிலும்வரும்* என் இனிவேண்டுவம்?*
மண்ணும் நீரும்* எரியும்நல்வாயுவும்,*
விண்ணுமாய் விரியும்* எம்பிரானையே. 1.10.2
2892:
எம்பிரானை* எந்தை தந்தை தந்தைக்கும்
தம்பிரானை,* தண்தாமரைக்கண்ணனை,*
கொம்பராவு* நுண்ணேரிடைமார்வனை,*
எம்பிரானைத்தொழாய்* மடநெஞ்சமே. 1.10.3
2893:
நெஞ்சமே நல்லை நல்லை* உன்னைப்பெற்றால்
என்செய்யோம்?* இனியென்னகுறைவினம்?*
மைந்தனை மலராள்* மணவாளனை,*
துஞ்சும்போதும்* விடாது தொடர் கண்டாய். 1.10.4
2894:
கண்டாயே நெஞ்சே* கருமங்கள்வாய்க்கின்று,* ஓர்
எந்தானுமின்றியே* வந்தியலுமாறு,*
உண்டானை* உலகேழும் ஓர் மூவடி
கொண்டானை,* கண்டு கொண்டனைநீயுமே. 1.10.5
2895:
நீயும் நானும்* இந் நேர்நிற்கில்,* மேல்மற்றோர்,
நோயும்சார்க்கொடான்* நெஞ்சமே சொன்னேன்,*
தாயும்தந்தையுமாய்* இவ்வுலகினில்,*
வாயும் ஈசன்* மணிவண்ணன் எந்தையே. 1.10.6
2896:
எந்தையேயென்றும்* எம்பெருமானென்றும்,*
சிந்தையுள்வைப்பன்* சொல்லுவன்பாவியேன்,*
எந்தை எம்பெருமான் என்று* வானவர்,*
சிந்தையுள் வைத்துச்* சொல்லும் செல்வனையே. 1.10.7
2897:
செல்வ நாரணனென்ற* சொல் கேட்டலும்,*
மல்கும்கண்பனி* நாடுவன்மாயமே,*
அல்லும் நன்பகலும்* இடைவீடின்றி,*
நல்கி என்னை விடான்* நம்பி நம்பியே. 1.10.8
2898:##
நம்பியைத்* தென் குறுங்குடிநின்ற,* அச்
செம்பொனேதிகழும்* திருமூர்த்தியை,*
உம்பர் வானவர்* ஆதியஞ்சோதியை,*
எம்பிரானை* என் சொல்லி மறப்பேனா?. 1.10.9
2899:
மறப்பும்ஞானமும்* நான் ஒன்று உணர்ந்திலன்,*
மறக்குமென்று* செந்தாமரைக்கண்ணொடு,*
மறப்பற என்னுள்ளே* மன்னினான் தன்னை,*
மறப்பேனா? இனி* யான் என் மணியையே. 1.10.10
2900:##
மணியை வானவர் கண்ணனைத்* தன்னதோர்-
அணியை,* தென்குருகூர்ச்சடகோபன்,* சொல்
பணிசெயாயிரத்துள்* இவைபத்துடன்,*
தணிவிலர் கற்பரேல்* கல்விவாயுமே. 1.10.11