மூன்றாம் பத்து


திருவாய் மொழி மூன்றாம் பத்து

 

முதல் திருமொழி

 

3013:##

முடிச்சோதியாய்* உனது முகச்சோதி மலந்ததுவோ,*

அடிச்சோதி நீநின்ற* தாமரையாய் அலர்ந்ததுவோ*,

படிச்சோதி ஆடையொடும்* பல்கலனாய்,* நின்பைம்பொன்

கடிச்சோதி கலந்ததுவோ?* திருமாலே! கட்டுரையே. (2)        3.1.1.

 

3014:

கட்டுரைக்கில் தாமரை* நின் கண்பாதம் கையொவ்வா,*

சுட்டுரைத்த நன்பொன்* உன் திருமேனி ஒளி ஒவ்வாது,*

ஒட்டுரைத்து இவ்வுலகு உன்னை* புகழ்வெல்லாம் பெரும்பாலும்,*

பட்டுரையாய்ப் புற்கென்றே* காட்டுமால் பரஞ்சோதீ!           3.1.2.

 

3015:

பரஞ்சோதி! நீபரமாய்* நின்னிகழ்ந்து பின்,* மற்றோர்

பரஞ்சோதி இன்மையின்* படியோவி நிகழ்கின்ற,*

பரஞ்சோதி நின்னுள்ளே* படருலகம் படைத்த,* எம்

பரஞ்சோதி கோவிந்தா!* பண்புரைக்க மாட்டேனே.    3.1.3.

 

3016:

மாட்டாதே ஆகிலும்* இம் மலர்தலை மாஞாலம்,*நின்

மாட்டாய மலர்ப்புரையும்* திருவுருவும் மனம்வைக்க*

மாட்டாத பலசமய* மதிகொடுத்தாய், மலர்த்துழாய்*

மாட்டேநீ மனம்வைத்தாய்* மாஞாலம் வருந்தாதே?    3.1.4.

 

3017:

வருந்தாத அருந்தவத்த* மலர்க்கதிரின் சுடர் உடம்பாய்,*

வருந்தாத ஞானமாய்* வரம்பின்றி முழுதியன்றாய்,*

வருங்காலம் நிகழ்காலம்* கழிகாலமாய்,*உலகை

ஒருங்காக அளிப்பாய் சீர்* எங்கு உலக்க ஓதுவனே?   3.1.5.

 

3018:

ஓதுவார் ஓத்தெல்லாம்* எவ்வுலகத்து எவ்வெவையும்,*

சாதுவாய் நின்புகழின்* தகையல்லால் பிறிதில்லை,*

போதுவாழ் புனந்துழாய்* முடியினாய்,* பூவின்மேல்

மாதுவாழ் மார்பினாய்!* என்சொல்லியான் வாழ்த்துவனே?            3.1.6.

 

3019:

வாழ்த்துவார் பலராக* நின்னுள்ளே நான்முகனை,*

மூழ்த்த நீர் உலகெல்லாம்* படையென்று முதல்படைத்தாய்*

கேழ்த்தசீர் அரன்முதலாக்* கிளர்தெய்வமாய்க் கிளர்ந்து,*

சூழ்த்த அமரர் துதித்தால்* உன் தொல்புகழ் மாசூணாதே?   3.1.7.

 

3020:

மாசூணாச் சுடர் உடம்பாய்* மலராது குவியாது,*

மாசூணா ஞானமாய்* முழுதுமாய் முழுதியன்றாய்,*

மாசூணாவான்கோலத்து* அமரர்க்கோன் வழிபட்டால்,*

மாசூணா உன்பாத* மலர்சோதி மழுங்காதே?    3.1.8.

 

3021:

மழுங்காத வைந்நுதிய* சக்கரநல் வலத்தையாய்,*

தொழுங்காதல் களிறளிப்பான்* புள்ðர்ந்து தோன்றினையே,*

மழுங்காத ஞானமே* படையாக, மலர் உலகில்*

தொழும்பாயார்க்கு அளித்தால்* உன் சுடர்ச்சோதி மறையாதே?            3.1.9.

 

3022:

மறையாய நால்வேதத்துள் நின்ற* மலர்சுடரே,*

முறையால் இவ்வுலகெல்லாம்* படைத்திடந்துண்டு உமிழ்ந்தளந்தாய்,*

பிறையேறு சடையானும்* நான்முகனும் இந்திரனும்*

இறையாதல் அறிந்தேத்த* வீற்றிருத்தல் இதுவியப்பே?         3.1.10.

 

3023:##

வியப்பாய வியப்பில்லா* மெய்ஞ்ஞான வேதியனை,*

சயப்புகழார் பலர்வாழும்* தடங்குருகூர் சடகோபன்,*

துயக்கின்றித் தொழுதுரைத்த* ஆயிரத்துள் இப்பத்தும்,*

உயக்கொண்டு பிறப்பறுக்கும்* ஒலிமுந்நீர் ஞாலத்தே. (2)    3.1.11

 

இரண்டாம் திருமொழி

 

3024:##

முந்நீர் ஞாலம் படைத்த* எம் முகில்வண்ணனே,*

அந்நாள் நீ தந்த* ஆக்கையின் வழி உழல்வேன்,*

வெந்நாள் நோய் வீய* வினைகளை வேரறப்பாய்ந்து,*

எந்நாள் யான் உன்னை* இனிவந்து கூடுவனே? (2)      3.2.1.

 

3025:

வன்மா வையம் அளந்த* எம் வாமனா,* நின்

பன்மா மாயப்* பல்பிறவியில் படிகின்றயான்,*

தொன்மா வல்வினைத்* தொடர்களை முதலரிந்து,*

நின் மாதாள் சேர்ந்து* நிற்பது எஞ்ஞான்றுகொலோ? 3.2.2.

 

3026:

கொல்லா மாக்கோல்* கொலைசெய்து பாரதப்போர்,*

எல்லாச் சேனையும்* இருநிலத்து அவித்த எந்தாய்,*

பொல்லாவாக்கையின்* புணர்வினை அறுக்கலறா,*

சொல்லாய் யான் உன்னைச்* சார்வதோர் சூழ்ச்சியே.           3.2.3.

 

3027:

சூழ்ச்சி ஞானச்* சுடரொளி யாகி,* என்றும்

ஏழ்ச்சிக் கேடின்றி* எங்கணும் நிறைந்த எந்தாய்,*

தாழ்ச்சி மற்றெங்கும் தவிர்ந்து* நின் தாளிணக்கீழ்

வாழ்ச்சி,* யான் சேரும்* வகையருளாய் வந்தே.           3.2.4.

 

3028:

வந்தாய்போலே* வந்தும் என்மனத்தினைநீ,*

சிந்தாமல் செய்யாய்* இதுவே இதுவாகில்,*

கொந்தார் காயாவின்* கொழுமலர்த் திருநிறத்த

எந்தாய்,* யான் உன்னை* எங்குவந்தணுகிற்பனே?      3.2.5.

 

3029:

கிற்பன் கில்லேன்* என்றிலன் முனநாளால்,*

அற்ப சாரங்கள் அவை* சுவைத்த கன்றொழிந்தேன்,*

பற்பல்லாயிரம்* உயிர்செய்த பரமா,* நின்

நற்பொன் சோதித்தாள்* நணுகுவது எஞ்ஞான்றே?      3.2.6.

 

3030:

எஞ்ஞான்று நாம் இருந்திருந்து* இரங்கி நெஞ்சே!*

மெய்ஞ்ஞானமின்றி* வினையியல் பிறப்பழுந்தி,*

எஞ்ஞான்றும் எங்கும்* ஒழிவற நிறைந்துநின்ற,*

மெய்ஞ்ஞானச்சோதிக்* கண்ணனை மேவுதுமே?         3.2.7.

 

3031:

மேவு துன்ப வினைகளை* விடுத்துமிலேன்,*

ஓவுதலின்றி* உன்கழல் வணங்கிற்றிலேன்,*

பாவுதொல் சீர்க்கண்ணா!* என் பரஞ்சுடரே,*

கூவுகின்றேன் காண்பான்* எங்கெயிதக் கூவுவனே?   3.2.8.

 

3032:

கூவிக்கூவிக்* கொடுவினைத் தூற்றுள் நின்று*

பாவியேன் பலகாலம்* வழிதிகைத்து அலமர்க்கின்றேன்,*

மேவியன்றாநிரைகாத்தவன்* உலகமெல்லாம்,*

தாவிய அம்மானை* எங்கு இனித் தலைப்பெய்வனே?            3.2.9.

 

3033:

தலைப்பெய் காலம்* நமன்தமர் பாசம்விட்டால்,*

அலைப்பூணுண்ணும்* அவ்வல்லல் எல்லாம் அகல,*

கலைப்பல் ஞானத்து* என் கண்ணனைக் கண்டுகொண்டு,*

நிலைப்பெற்று என் நெஞ்சம் பெற்றது* நீடுயிரே.         3.2.10.

 

3034:##

உயிர்களெல்லா* உலகம் உடையவனை,*

குயில்கொள் சோலைத்* தென்குருகூர்ச் சடகோபன்,*

செயிரில் சொலிசைமாலை* ஆயிரத்துள் இப்பத்தும்,*

உயிரின் மேலாக்கை* ஊனிடை ஒழிவிக்குமே. (2)        3.2.11

 

மூன்றாம் திருமொழி

 

3035:##

ஒழிவில் காலமெல்லாம்* உடனாய் மன்னி,*

வழுவிலா* அடிமை செய்ய வேண்டும் நாம்,*

தெழிகுரல் அருவித்* திருவேங்கடத்து,*

எழில்கொள் சோதி* எந்தைதந்தை தந்தைக்கே (2)      3.3.1

 

3036:

எந்தை தந்தை தந்தை* தந்தை தந்தைக்கும்

முந்தை,* வானவர்* வானவர்க்கோனொடும்,*

சிந்துபூ மகிழும்* திருவேங் கடத்து,*

அந்த மில்புகழ்க்* காரெழில் அண்ணலே.            3.3.2

 

3037:

அண்ணல் மாயன்* அணிகொள் செந்தாமரைக்

கண்ணன்,* செங்கனி வாய்க்* கருமாணிக்கம்,*

தெண்ணிறைச்சுனை நீர்த்* திரு வேங்கடத்து,*

எண்ணில் தொல்புகழ்* வானவர் ஈசனே. 3.3.3

 

3038:

ஈசன் வானவர்க்கு* என்பன் என்றால்,* அது

தேசமோ* திரு வேங்கடத் தானுக்கு?,*

நீசனேன்* நிறைவொன்றுமிலேன்,* என்கண்

பாசம் வைத்த* பரஞ்சுடர்ச் சோதிக்கே.     3.3.4

 

3039:

சோதியாகி* எல்லாவுலகும் தொழும்,*

ஆதி மூர்த்தியென்றால்* அளவாகுமோ?,*

வேதியர்* முழு வேதத்தமுதத்தை,*

தீதில் சீர்த்* திரு வேங்கடத் தானையே.     3.3.5

 

3040:

வேங்கடங்கள்* மெய்ம்மேல்வினை முற்றவும்,*

தாங்கள் தங்கட்கு* நல்லனவே செய்வார்,*

வேங்கடத்து உறைவார்க்கு* நமவென்ன

லாம்கடமை,* அதுசுமந்தார்க்கட்கே.           3.3.6

 

3041:

சுமந்து மாமலர்* நீர்சுடர் தீபம்கொண்டு,*

அமர்ந்து வானவர்* வானவர் கோனொடும்,*

நமன்றெழும்* திருவேங்கடம் நங்கட்கு,*

சமன்கொள் வீடுதரும்* தடங்குன்றமே.      3.3.7

 

3042:##

குன்றம் ஏந்திக்* குளிர்மழை காத்தவன்,*

அன்று ஞாலம்* அளந்த பிரான்,* பரன்

சென்று சேர்* திரு வேங்கட மாமலை,*

ஒன்றுமேதொழ* நம்வினை ஓயுமே. (2)     3.3.8

 

3043:

ஓயும் மூப்புப்* பிறப்பு இறப்புப்பிணி,*

வீயுமாறு செய்வான்* திரு வேங்கடத்து

ஆயன்,* நாள்மலராம்* அடித் தாமரை,*

வாயுள்ளும்மனத்துள்ளும்* வைப்பார்கட்கே.      3.3.9

 

3044:

வைத்த நாள்வரை* எல்லை குறுகிச்சென்று,*

எய்த்திளைப்பதன்* முன்னம் அடைமினோ,*

பைத்த பாம்பணையான்* திரு வேங்கடம்,*

மொய்த்த சோலை* மொய்பூந்தடம் தாழ்வரே.   3.3.10

 

3045:##

தாள் பரப்பி* மண் தாவிய ஈசனை,*

நீள்பொழில்* குருகூர்ச் சடகோபன்சொல்,*

கேழில் ஆயிரத்து* இப்பத்தும் வல்லவர்,

வாழ்வர் வாழ்வெய்தி* ஞாலம் புகழவே. (2)        3.3.11

 

நான்காம் திருமொழி

 

3046:##

புகழும் நல் ஒருவன் என்கோ!*  பொருவில்சீர்ப் பூமி என்கோ,*

திகழும்தண் பரவை என்கோ!*  தீயென்கோ! வாயுவென்கோ,*

நிகழும் ஆகாசம் என்கோ!*  நீள்சுடர் இரண்டும் என்கோ,*

இகழ்வில் இவ்வனைத்தும் என்கோ*  கண்ணனைக் கூவுமாறே! (2)            3.4.1

 

3047:

கூவுமாறறிய மாட்டேன்*  குன்றங்கள் அனைத்தும் என்கோ,*

மேவுசீர் மாரி என்கோ!*  விளங்கு தாரகைகள் என்கோ,*

நாவியல் கலைகள் என்கோ!*  ஞானநல்லாவி என்கோ,*

பாவுசீர்க் கண்ணன் எம்மான்*  பங்கயக் கண்ணனையே!   3.4.2

 

3048:

பங்கையக் கண்ணன் என்கோ!*  பவளச்செவ்வாயன் என்கோ,*

அங்கதிர் அடியன் என்கோ!*  அஞ்சன வண்ணன் என்கோ,*

செங்கதிர் முடியன் என்கோ!*  திருமறு மார்வன் என்கோ,*

சங்குசக்கரத்தன் என்கோ!*  சாதிமாணிக்கத்தையே!             3.4.3

 

3049:

சாதிமாணிக்கம் என்கோ!*  சவிகோள்பொன் முத்தம் என்கோ,*

சாதிநல்வயிரம் என்கோ,*  தவிவில்சீர் விளக்கம் என்கோ,*

ஆதியஞ் சோதி என்கோ!*  ஆதியம் புருடன் என்கோ,*

ஆதுமில் காலத்து எந்தை*  அச்சுதன் அமலனையே!   3.4.4

 

3050:

அச்சுதன் அமலன் என்கோ,*  அடியவர் வினைகெடுக்கும்,*

நச்சுமா மருந்தம் என்கோ!*  நலங்கடல் அமுதம் என்கோ,*

அச்சுவைக் கட்டி என்கோ!*  அறுசுவை அடிசில் என்கோ,*

நெய்ச்சுவைத் தேறல் என்கோ!*  கனியென்கோ! பாலெங்கேனோ!            3.4.5

 

3051:

பாலென்கோ!* நான்கு வேதப்  பயனென்கோ,* சமய நீதி

நூலென்கோ!* நுடங்கு கேள்வி  இசையென்கோ!* இவற்றுள் நல்ல

மேலென்கோ,* வினையின் மிக்க  பயனென்கோ,* கண்ணன் என்கோ!-

மாலென்கோ! மாயன் என்கோ*  வானவர் ஆதியையே!        3.4.6

 

3052:

வானவர் ஆதி என்கோ!*  வானவர் தெய்வம் என்கோ,*

வானவர் போகம் என்கோ!*  வானவர் முற்றும் என்கோ,*

ஊனமில் செல்வம் என்கோ!*  ஊனமில் சுவர்க்கம் என்கோ,*

ஊனமில் மோக்கம் என்கோ!*  ஒளிமணி வண்ணனையே!  3.4.7

 

3053:

ஒளிமணி வண்ணன் என்கோ!*  ஒருவனென்றேத்த நின்ற*

நளிர்மதிச் சடையன் என்கோ!*  நான்முகக் கடவுள் என்கோ,*

அளிமகிழ்ந்து உலகமெல்லாம்*  படைத்தவை ஏத்த நின்ற,*

களிமலர்த் துளவன் எம்மான்*  கண்ணனை மாயனையே!  3.4.8

 

3054:

கண்ணனை மாயன் தன்னைக்*  கடல்கடைந்து அமுதங் கொண்ட,*

அண்ணலை அச்சுதனை*  அனந்தனை அனந்தன் தன்மேல்,*

நண்ணிநங்கு உறைகின்றானை*  ஞாலம் உண்டுமிழ்ந்த மாலை,*

எண்ணுமாறு அறிய மாட்டேன்,*  யாவையும் யவரும் தானே.            3.4.9

 

3055:

யாவையும் யவரும் தானாய்*  அவரவர் சமயந் தோறும்,*

தோய்விலன் புலன் ஐந்துக்கும்*  சொலப்படான் உணர்வின் மூர்த்தி,*

ஆவிசேர் உயிரின் உள்ளால்*  அதுமோர் பற்றி லாத,*

பாவனை அதனைக் கூடில்*  அவனையும் கூட லாமே.            3.4.10

 

3056:##

கூடிவண்டறையும் தண்தார்க்* கொண்டல்போல் வண்ணன் தன்னை*

மாடலர் பொழில்* குருகூர் வண்சடகோபன் சொன்ன,*

பாடலோர் ஆயிரத்துள்* இவையுமோர் பத்தும் வல்லார்,*

வீடில போக மெய்தி* விரும்புவர் அமரர் மொய்த்தே (2)        3.4.11

 

ஐந்தாம் திருமொழி

 

3057:##

மொய்ம்மாம் பூம்பொழில் பொய்கை*  முதலைச் சிறைப்பட்டு நின்ற,*

கைம்மாவுக்கு அருள் செய்த*  கார்முகில் போல்வண்ணன் கண்ணன்,*

எம்மானைச் சொல்லிப் பாடி*  எழுந்தும் பறந்தும் துள்ளாதார்,*

தம்மால் கருமமென் சொல்லீர்*  தண்கடல் வட்டத்துள்ளÖரே! (2)            3.5.1

 

3058:

தண்கடல் வட்டத்துள்ளாரைத்*  தமக்கிரையாத் தடிந் துண்ணும்,*

திண்கழற்கால் அசுரர்க்குத்*  தீங்கிழைக்கும் திருமாலை,*

பண்கள் தலைக்கொள்ளப் பாடிப்*  பறந்தும் குனித்துழலாதார்,*

மண்கொள் உலகில் பிறப்பார்*  வல்வினை மோத மலைந்தே.            3.5.2

 

3059:

மலையை எடுத்துக் கல்மாரி  காத்துப்* பசுநிரை தன்னை,*

தொலைவு தவிர்த்த பிரானைச்*  சொல்லிச்சொல்லி நின்று எப்போதும்,*

தலையினோடாதனம் தட்டத்*  தடுகுட்டமாய்ப் பறவாதார்,*

அலைகொள் நரகத்தழுந்திக்*  கிடந்து உழைக்கின்ற அம்பரே.            3.5.3

 

3060:

வம்பவிழ் கோதை பொருட்டா*  மால்விடையேழும் அடர்த்த,*

செம்பவளத் திரள் வாயன்*  சிரீதரன் தொல்புகழ் பாடி,*

கும்பிடு நட்டமிட்டாடிக்*  கோகுகட்டுண்டு உழலாதார்,*

தம்பிறப்பால் பயனென்னே*  சாது சனங்களிடையே?            3.5.4

 

3061:

சாது சனத்தை நலியும்*  கஞ்சனைச் சாதிப்பதற்கு,*

ஆதியஞ் சோதியுருவை*  அங்குவைத்து இங்குப் பிறந்த,*

வேத முதல்வனைப் பாடி*  வீதிகள் தோறும் துள்ளாதார்,*

ஓதியுணர்ந்தவர் முன்னா*  என்சவிப்பார் மனிசரே?  3.5.5

 

3062:

மனிசரும் மற்றும் முற்றுமாய்*  மாயப் பிறவி பிறந்த,*

தனியன் பிறப்பிலி தன்னைத்*  தடங்கடல் சேர்ந்த பிரானை,*

கனியைக் கரும்பினின் சாற்றைக்*  கட்டியைத் தேனை அமுதை,*

முனிவின்றி ஏத்திக் குனிப்பார்*  முழுதுணர் நீர்மையினாரே.            3.5.6

 

3063:

நீர்மையில் நூற்றுவர் வீய*  ஐவர்க்கு அருள்செய்து நின்று,*

பார்மல்கு சேனை அவித்த*  பரஞ்சுடரை நினைந் தாடி.*

நீர்மல்கு கண்ணினராகி*  நெஞ்சம் குழைந்து நையாதே,*

ஊர்மல்கி மோடு பருப்பார்*  உத்தமர்க்கட்கு என்செய்வாரே?            3.5.7

 

3064:

வார்புனல் அந்தணருவி*  வடதிருவேங்கடத்து எந்தை,*

பேர்பல சொல்லிப் பிதற்றிப்*  பித்தர் என்றே பிறர்க்கூற,*

ஊர்பல புக்கும் புகாதும்*  உலகோர் சிரிக்க நின்றாடி,*

ஆர்வம் பெருகிக் குனிப்பார்*  அமரர் தொழப்படுவாரே.      3.5.8

 

3065:

அமரர் தொழப்படுவானை*  அனைத்துலகுக்கும் பிரானை,*

அமரர் மனத்தினுள் யோகு புணர்ந்து* அவன் தன்னோடு ஒன்றாக,*

அமரத் துணிய வல்லார்கள்  ஒழிய* அல்லாதவர் எல்லாம்,*

அமர நினைந்தெழுந்தாடி*  அலற்றுவதே கருமமே.     3.5.9

 

3066:

கருமமும் கருமபலனும்  ஆகிய* காரணன் தன்னை,*

திருமணி வண்ணனைச் செங்கண்  மாலினைத்* தேவ பிரானை,*

ஒருமை மனத்தினுள் வைத்து*  உள்ளங்குழைந்து எழுந்தாடி,*

பெருமையும் நாணும் தவிர்ந்து*  பிதற்றுமின் பேதமை தீர்ந்தே.            3.5.10

 

3067:

தீர்ந்த அடியவர் தம்மைத்* திருத்திப் பணிகொள்ளவல்ல,*

ஆர்ந்த புகழ் அச்சுதனை* அமரர் பிரானை எம்மானை,*

வாய்ந்த வளவயல்சூழ்* தண் வளன் குருகூர்ச்சடகோபன்,*

நேர்ந்த ஓராயிரத்து இப்பத்து* அருவினை நீறு செய்யுமே. (2)            3.5.11

 

ஆறாம் திருமொழி

 

3068:##

செய்ய தாமரைக் கண்ணனாய்* உலகு  ஏழும் உண்ட அவன்கண்டீர்,*

வையம் வானம் மனிசர் தெய்வம்*  மற்றும் மற்றும் மற்றும் முற்றுமாய்,*

செய்யசூழ் சுடர் ஞானமாய்* வெளிப்  பட்டிவை படைத்தான்* பின்னும்,

மொய்கொள் சோதியோடு ஆயினான்* ஒரு  மூவராகிய மூர்த்தியே. (2)       3.6.1

 

3069:

மூவராகிய மூர்த்தியை* முதல்  மூவர்க்கும் முதல்வன் தன்னை,*

சாவ முள்ளன நீக்கு வானைத்*  தடங்கடல் கிடந்தான் தன்னைத்,*

தேவ தேவனைத் தென்னிலங்கை*  எரியெழச்செற்ற வில்லியை,*

பாவ நாசனைப் பங்கயத்தடங்  கண்ணனைப்* பரவுமினோ.            3.6.2

 

3070:

பரவி வானவரேத்த நின்ற*  பரமனைப் பரஞ் சோதியை,*

குரவை கோத்த குழகனை* மணி  வண்ணனைக் குடக் கூத்தனை,*

அரவமேறி அலைகடல் அமரும்*  துயில்கொண்ட அண்ணலை,*

இரவும் நன்பகலும் விடாது* என்றும்  ஏத்துதல் மனம் வைம்மினோ.            3.6.3

 

3071:

வைம்மின் நும்மனத்தென்று* யானுரைக்கின்ற மாயவன் சீர்மையை*

எம்மேனார்கள் உரைப்பதென்?* அது  நிற்க நாள்தொறும்,* வானவர்

தம்மை யாளும் அவனும்* நான்முகனும் சடைமுடி அண்ணலும்,*

செம்மையால் அவன் பாத பங்கயம்*  சிந்தித்து ஏத்தி திரிவரே.            3.6.4

 

3072:

திரியும் காற்றோடு அகல்விசும்பு*  திணிந்த மண்கிடந்த கடல்,*

எரியும் தீயோடு இருசுடர் தெய்வம்,*  மற்றும் மற்றும் முற்றுமாய்,*

கரிய மேனியன் செய்ய தாமரைக்  கண்ணன்* கண்ணன் விண்ணோரிறை,*

சுரியும் பல்கருங்குஞ்சி* எங்கள்  சுடர்முடியண்ணல் தோற்றமே.            3.6.5

 

3073:

தோற்றக் கேடவையில்லவனுடையான்* அவன் ஒரு மூர்த்தியாய்,*

சீற்றத்தோடு அருள் பெற்றவனடிக்கீழ்ப்*புகநின்ற செங்கண்மால்,*

நாற்றத் தோற்றச் சுவையொலி* உறலாகி நின்ற,*

எம் வானவர் ஏற்றையேயன்றி* மற்றொருவரை  யானிலேன் எழுமைக்குமே.      3.6.6

 

3074:

எழுமைக்கும் எனதாவிக்கு* இன்னமுதத்தினை ஏனதாருயிர்,*

கெழுமிய கதிர்ச் சோதியை* மணி  வண்ணனைக் குடக்கூத்தனை,*

விழுமிய அமரர் முனிவர் விழுங்கும்* கன்னற் கனியினை,*

தொழுமின் தூய மனத்தராய்* இறையும்நில்லா துயரங்களே.            3.6.7

 

3075:

துயரமேதரு துன்ப இன்ப  வினைகளாய்* அவை அல்லனாய்,*

உயர நின்றதோர் சோதியாய்* உலஏழுமுண்டுமிழ்ந்தான் தன்னை,*

அயர வாங்கு நமன் தமர்க்கு* அரு  நஞ்சினை அச்சுதன்தன்னை,*

தயரதற்கு மகன்தன்னை அன்றி*  மற்றிலேன் தஞ்சமாகவே.            3.6.8

 

3076:

தஞ்ச மாகிய தந்தை தாயொடு*  தானுமாய் அவை அல்லனாய்,*

எஞ்சலில் அமரர் குலமுதல்*  மூவர் தம்முள்ளும் ஆதியை,*

அஞ்சி நீருலகத்துள்ளÖர்கள்!*  அவன் இவனென்று கூழேன்மின்,*

நெஞ்சினால் நினைப்பான் யவன்* அவன்  ஆகும் நீள்கடல் வண்ணனே.           3.6.9

 

3077:

கடல்வண்ணன் கண்ணன்* விண்ணவர் கரு  மாணிக்கம் எனதாருயிர்*

படவரவினணைக் கிடந்த*  பரஞ்சுடர் பண்டு நூற்றுவர்,*

அடவரும் படை மங்க* ஐவர்க்கட்  காகி வெஞ்சமத்து,* அன்றுதேர்

கடவிய பெருமான்* கனைகழல்  காண்பது என்றுகொல் கண்களே?            3.6.10

 

3078:##

கண்கள் காண்டற்கரியனாய்க்* கருத்துக்கு நன்றும் எளியனாய்,*

மண்கொள் ஞாலத்து உயிர்க்கெல்லாம் அருள்  செய்யும்* வானவர் ஈசனை,*

பண்கொள் சோலை வழுதி நாடன்*  குருகைக்கோன் சடகோபன் சொல்,*

பண்கொள் ஆயிரத்து இப்பத்தால்* பத்தராகக் கூடும் பயலுமினே. (2)       3.6.11

 

ஏழாம் திருமொழி

 

3079:##

பயிலும் சுடரொளி மூர்த்தியைப்* பங்கயக் கண்ணனை,*

பயில இனிய* நம் பாற்கடல் சேர்ந்த பரமனை,*

பயிலும் திருவுடையார்* யவரேலும் அவர் கண்டீர்,*

பயிலும் பிறப்பிடைதோறு* எம்மை ஆளும் பரமரே. (2)          3.7.1

 

3080:

ஆளும் பரமனைக் கண்ணனை* ஆழிப் பிரான்தன்னை,*

தோளும் ஓர் நான்குடைத்* தூமணி வண்ணன் எம்மான்தன்னை*

தாளும் தடக்கையும் கூப்பிப்* பணியும் அவர் கண்டீர்,*

நாளும் பிறப்பிடை தோறு* எம்மையாளுடை நாதரே. 3.7.2

 

3081:

நாதனை ஞாலமும் வானமும்  ஏத்தும்* நறுந்துழாய்ப்

போதனை,* பொன்னெடுஞ் சக்கரத்து*  எந்தை பிரான்தன்னை*

பாதம் பணிய வல்லாரைப்*  பணியும் அவர் கண்டீர்,*

ஓதும் பிறப்பிடை தோறு* எம்மை ஆளுடையார்களே. 3.7.3

 

3082:

உடையார்ந்த வாடையன்* கண்டிகையன்உடை நாணினன்*

புடையார் பொன்னூலினன்* பொன்முடியன்மற்றும் பல்கலன்,*

நடையாவுடைத் திருநாரணன்*  தொண்டர் தொண்டர் கண்டீர்,*

இடையார் பிறப்பிடைதோறு* எமக்கு எம் பெருமக்களே.       3.7.4

 

3083:

பெருமக்கள் உள்ளவர் தம் பெருமானை,* அமரர்கட்கு*

அருமையொழிய* அன்று ஆரமுதூட்டிய அப்பனை,*

பெருமை பிதற்ற வல்லாரைப்*  பிதற்றும் அவர் கண்டீர்,*

வருமையும் இம்மையும்* நம்மை  அளிக்கும் பிராக்களே.      3.7.5

 

3084:

அளிக்கும் பரமனை கண்ணனை*  ஆழிப் பிரான்தன்னை,*

துளிக்கும் நறுங்கண்ணித்* தூமணி  வண்ணன் எம்மான்தன்னை,*

ஒளிக்கொண்ட சோதியை* உள்ளத்துக்  கொள்ளும் அவர்க்கண்டீர்,*

சலிப்பின்றி யாண்டெம்மைச்* சன்ம சன்மாந்தரங் காப்பரே.            3.7.6

 

3085:

சன்ம சன்மாந்தரங் காத்து* அடியார்களைக் கொண்டுபோய்,*

தன்மை பெறுத்தித் தன் தாளிணைக்  கீழ்*கொள்ளும் அப்பனை,*

தொன்மை பிதற்றவல்லாறைப்*  பிதற்றும் அவர்கண்டீர்,*

நம்மை பெறுத்து எம்மை* நாளுய்யக்  கொள்கின்ற நம்பரே.            3.7.7

 

3086:

நம்பனை ஞாலம் படைத்தவனைத்* திரு மார்பனை,*

உம்பர் உலகினில் யார்க்கும்*உணர்வரியான்தன்னைக்,*

கும்பி நரகர்கள் ஏத்துவரேலும்*அவர்கண்டீர்,*

எம்பல் பிறப்பிடை தோறு*எம்தொழுகுலம் தாங்களே.           3.7.8

 

3087:

குவலந்தாங்கு சாதிகள்* நாலிலும்  கீழிழிந்து,* எத்தனை

நலந்தானிலாத* சண்டாளசண்டாளர்களாகிலும்,*

வலந்தாங்கு சக்கரத் தண்ணல்*  மணிவண்ணற்காளென்று உள்

கலந்தார்,* அடியார் தம் அடியார் எம்மடிகளே.   3.7.9

 

3088:

அடியார்ந்த வையமுண்டு* ஆலிலை  அன்ன வசஞ்செய்யும்,*

படியாதுமில் குழவிப்படி*  எந்தைபிரான் தனக்கு,*

அடியார் அடியார் தம்* அடியார் அடியார் தமக்கு*

அடியார் அடியார் தம்,*அடியார் அடியோங்களே.          3.7.10

 

3089:##

அடியோங்கு நூற்றவர் வீய* அன்று ஐவர்க்கு அருள்செய்த

நெடியோனை,* தென்குருகூர் சடகோபன் குற்றேவல்கள்,*

அடியார்ந்த ஆயிரத்துள்* இவை  பத்து அவன் தொண்டர்மேல்

முடிவு,* ஆரக்கற்கிற்கில்* சன்மம் செய்யாமை முடியுமே. (2)            3.7.11

 

எட்டாம் திருமொழி

 

3090:##

முடியானே! மூவுலகும் தொழுதேத்தும்* சீர்

அடியானே,* ஆழ்கடலைக் கடைந்தாய்!* புள்ðர்

கொடியானே,* கொண்டல்வண்ணா!* அண்டத்து உம்பரில்

நெடியானே!,* என்று கிடக்கும் என்னெஞ்சமே. (2)         3.8.1

 

3091:

நெஞ்சமே! நீள்நகராக* இருந்த என்

தஞ்சனே,* தண்ணிலங்கைக்கிறையைச் செற்ற

நஞ்சனே,* ஞாலங்கொள்வான்* குறளாகிய

வஞ்சனே,* என்னும் எப்போதும்* என்வாசகமே. 3.8.2

 

3092:

வாசகமே ஏத்த அருள்செய்யும்* வானவர்தம்

நாயகனே,* நாளிளந் திங்களைக்* கோள்விடுத்து,*

வேயகம் பால்வெண்ணெய்* தொடுவுண்ட ஆனாயர்

தாயவனே,* என்று தடவும்* என் கைகளே. 3.8.3

 

3093:

கைகளால் ஆரத்* தொழுது தொழுது உன்னை,*

வைகலும் மாத்திரைப்* போதும் ஓர் வீடின்றி,*

பைகொள் பாம்பேறி* உறைபரனே,* உன்னை

மெய்கொள்ளக்காண* விரும்பும் என் கண்களே.           3.8.4

 

3094:

கண்களால் காண* வருங்கொல்? என்று ஆசையால்,*

மண்கொண்ட வாமனன்* ஏற மகிழ்ந்துசெல்,*

பண்கொண்ட புள்ளின்* சிறகொலி பாவித்து,*

திண்கொள்ள ஓர்க்கும்* கிடந்து என்செவிகளே.            3.8.5

 

3095:

செவிகளாலார* நின் கீர்த்திக் கனியென்னும்

கவிகளே* காலப்பண்தேன்* உறைப்பத்துற்று,*

புவியின்மேல்* பொன்னெடுஞ் சக்கரத் துன்னையே*

அவிவின்றி ஆதரிக்கும்* எனதாவியே.       3.8.6

 

3096:

ஆவியே! ஆரமுதே!* என்னை ஆளுடை,*

தூவியம் புள்ளுடையாய்!* சுடர் நேமியாய்,*

பாவியேன் நெஞ்சம்* புலம்பப் பலகாலும்,*

கூவியும் காணப்பெறேன்* உனகோலமே.            3.8.7

 

3097:

கோலமே! தாமரைக் கண்ணதோர்* அஞ்சன

நீலமே,* நின்று எனதாவியை* ஈர்கின்ற

சீலமே,* சென்றுசெல்லாதன* முன்நிலாம்

காலமே,* உன்னை என்னாள் கண்டு கொள்வனே?       3.8.8

 

3098:

கொள்வன்நான் மாவலி* மூவடி தாஎன்ற

கள்வனே,* கஞ்சனை வஞ்சித்து* வாணனை

உள்வன்மை தீர,* ஓராயிரம் தோள்துணித்த*

புள்வல்லாய்,* உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே?            3.8.9

 

3099:

பொருந்திய மாமருதினிடை போய* எம்

பெருந்தகாய்,* உன்கழல்* காணிய பேதுற்று,*

வருந்திநான்* வாசக மாலைகொண்டு* உன்னையே

இருந்திருந்து* எத்தனை காலம் புலம்புவனே.    3.8.10

 

3100:##

புலம்புசீர்ப்* பூமி அளந்த பெருமானை,*

நலங்கொள்சீர்* நன்குருகூர்ச் சடகோபன்,* சொல்

வலங்கொண்ட ஆயிரத்துள்* இவையும் ஓர்ப்பத்து,

இலங்குவான்* யாவரும் ஏறுவர் சொன்னாலே. (2)        3.8.11

 

ஒன்பதாம் திருமொழி

 

3101:##

சொன்னால் விரோதமிது* ஆகிலும் சொல்லுவேன் கேண்மினோ,*

என்னாவில் இன்கவி* யானொருவர்க்கும் கொடுக்கிலேன்,*

தென்னா தெனாவென்று* வண்டு முரல் திருவேங்கடத்து,*

என்னானை என்னப்பன்* எம்பெருமான் உளனாகவே.           3.9.1

 

3102:

உளனாகவே எண்ணித்* தன்னை ஒன்றாகத்தன் செல்வத்தை*

வளனா மதிக்கும்* இம் மானிடத்தைக் கவி பாடியென்,*

குளனார் கழனிசூழ்* கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே,*

உளனாய எந்தையை* எந்தைபெம்மானை ஒழியவே?            3.9.2

 

3103:

ஒழிவொன்றில்லாத* பல்லூழிதோறூழி நிலாவ,* போம்

வழியைத் தரும் நங்கள்* வானவர் ஈசனை நிற்கப்போய்,*

கழிய மிகநல்லவான்* கவி கொண்டு புலவீர்காள்,*

இழியக் கருதி* ஓர் மானிடம் பாடல் என்னாவதே.         3.9.3

 

3104:

என்னாவது எத்தெனை நாளைக்குப் போதும்* புலவீர்காள்,*

மன்னா மனிசரைப் பாடிப்* படைக்கும் பெரும்பொருள்?,*

மின்னார் மணிமுடி* விண்ணவர் தாதையைப் பாடினால்,*

தன்னாகவே கொண்டு* சன்மம்செய்யாமை கொள்ளுமே.   3.9.4

 

3105:

கொள்ளும் பயனில்லைக்* குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை,*

வள்ளல் புகழ்ந்து* நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்,*

கொள்ளக் குறைவிலன்* வேண்டிற்றெல்லாம் தரும் கோதில்,* என்

வள்ளல் மணிவண்ணன் தன்னைக்* கவி சொல்லவம்மினோ.            3.9.5

 

3106:

வம்மின் புலவீர்!* நும் மெய்வருத்திக்கை செய்து உய்ம்மினோ,*

இம்மன்னுலகில்* செல்வர் இப்போதில்லை நோக்கினோம்,*

நும் இன் கவிகொண்டு* நும்நும் இட்டாதெய்வம் ஏத்தினால்,*

செம்மின் சுடர்முடி* என்திருமாலுக்குச் சேருமே.           3.9.6

 

3107:

சேரும் கொடைபுகழ்* எல்லையிலானை,* ஓராயிரம்

பேரும் உடைய பிரானையல்லால்* மற்று யான்கிலேன்,*

மாரி யனையகை* மால்வரையொக்கும் திண் தோளென்று,*

பாரிலோர் பற்றையைப்* பச்சைப்பசும்பொய்கள் பேசவே.            3.9.7

 

3108:

வேயின் மலிபுரை தோளி* பின்னைக்கு மணாளனை,*

ஆய பெரும்புகழ்* எல்லையிலாதன பாடிப்போய்,*

காயம் கழித்து* அவன் தாளிணைக்கீழ்ப் புகும் காதலன்,*

மாய மனிசரை* என்சொல்லவல்லேன் என் வாய்கொண்டே?            3.9.8

 

3109:

வாய்கொண்டு மானிடம் பாடவந்த* கவியேன் அல்லேன்,*

ஆய்கொண்ட சீர்வள்ளல்* ஆழிப்பிரான் எனக்கே உளன்,*

சாய்கொண்ட இம்மையும் சாதித்து* வானவர் நாட்டையும்,*

நீகண்டு கொள்என்று* வீடும் தரும்நின்று நின்றே!    3.9.9

 

3110:

நின்றுநின்று பல நாள் உய்க்கும்* இவ்வுடல் நீங்கிப்போய்,*

சென்று சென்றாகிலும் கண்டு* சன்மம் கழிப்பான் எண்ணி,*

ஒன்றியொன்றி உலகம் படைத்தான்* கவியாயினேற்கு,*

என்றுமென்றும் இனி* மற்றொருவர் கவி ஏற்குமே?     3.9.10

 

3111:##

ஏற்கும் பெரும்புகழ்* வானவர் ஈசன் கண்ணன் தனக்கு,*

ஏற்கும் பெரும்புகழ்* வண்குருகூர்ச் சடகோபன் சொல்,*

ஏற்கும் பெரும்புகழ்* ஆயிரத்துள் இவையும் ஓர்பத்து*

ஏற்கும் பெரும்புகழ்* சொல்லவல்லார்க்கு இல்லை சன்மமே.            3.9.11

 

பத்தாம் திருமொழி

 

3112:##

சன்மம் பலபல செய்து வெளிப்பட்டுச்*  சங்கொடு சக்கரம்வில்,*

ஒண்மை உடைய உலக்கை ஒள்வாள்* தண்டு  கொண்டு புள்ðர்ந்து,* உலகில்

வன்மை உடைய அரக்கர்* அசுரரை  மாளப் படைபொருத,*

நன்மை உடையவன் சீர் பரவப்பெற்ற*  நான் ஓர் குறைவிலனே. (2)            3.10.1

 

3113:

குறைவில் தடங்கடல் கோளர வேறித்* தன்  கோலச் செந்தாமரைக்கண்,*

உறைபவன் போல ஓர் யோகு புணர்ந்த*  ஒளிமணி வண்ணன் கண்ணன்,*

கறையணி மூக்குடைப் புள்ளிக் கடாவி*  அசுரரைக் காய்ந்த அம்மான்,*

நிறைபுகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும்*  யான் ஒரு முட்டிலனே.            3.10.2

 

3114:

முட்டில்பல் போகத்து ஒருதனி நாயகன்*  மூவுலகுக் உரிய,*

கட்டியைத் தேனை அமுதை* நன்பாலைக்  கனியைக் கரும்புதன்னை,*

மட்டவிழ் தண்ணந்துழாய் முடியானை  வணங்கி* அவன் திறத்துப்

பட்டபின்னை* ,இறையாகிலும்* யான் என்  மனத்துப் பரிவிலனே.            3.10.3

 

3115:

பரிவின்றி வாணனைக் காத்தும்‘* என்றன்று  படையொடும் வந்தெதிர்ந்த*

திரிபுரம் செற்றவனும் மகனும்* பின்னும்  அங்கியும் போர்தொலைய,*

பொருசிறைப் புள்ளைக் கடாவிய மாயனை*  ஆயனைப் பொற்சக்கரத்து

அரியினை,* அச்சுதனைப்பற்றி* யான் இறையேனும் இடரிலனே.            3.10.4

 

3116:

இடர் இன்றியே ஒரு நாளொரு போழ்தில்* எல்லா உலகும் அழிய,*

படர்புகழ்ப் பார்த்தனும் வைதிகனும்* உடன்  ஏறத் திண்தேர்க்கடவி,*

சுடரொளியாய் நின்ற தன்னுடைச் சோதியில்*  வைதிகன் பிள்ளைகளை,*

உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி*  ஒன்றும் துயரிலனே.            3.10.5

 

3117:

துயரில் சுடரொளி தன்னுடைச் சோதி*  நின்ற வண்ணம் நிற்கவே,*

துயரில் மலியும் மனிசர் பிறவியில்*  தோன்றிக்கண் காணவந்து,*

துயரங்கள் செய்து தன் தெய்வ நிலையுலகில்*  புக உய்க்கும் அம்மான்,*

துயரமில் சீர்க்கண்ணன் மாயன் புகழ்துற்ற*  யான் ஓர் துன்பமிலனே.       3.10.6

 

3118:

துன்பமும் இன்பமுமாகிய* செய்வினையாய் உலகங்களுமாய்,*

இன்பமில் வெந்நரகாகி* இனிய நல்வான் சுவர்க்கங்களுமாய்,*

மன்பல் உயிர்களும் ஆகிப்* பலபல  மாய மயக்குகளால்,*

இன்புரும் இவ்விளையாட்டுடையானைப் பெற்று*ஏதும் அல்லலிலனே.       3.10.7

 

3119:

அல்லலில் இன்பம் அளவிறந்து எங்கும்*  அழகமர் சூழொளியன்,*

அல்லி மலர்மகள் போக மயக்குகள்*  ஆகியும் நிற்கும் அம்மான்,*

எல்லையில் ஞானத்தன் ஞானமஃதேகொண்டு* எல்லாக் கருமங்களும்செய்,*

எல்லையில் மாயனைக் கண்ணனைத் தாள்பற்றி*  யான் ஓர் துக்கம் இலனே.    3.10.8

 

3120:

துக்கமில் ஞானச் சுடரொளி மூர்த்தி*  துழாய் அலங்கல் பெருமான்,*

மிக்க பல் மாயங்களால் விகிர்தம் செய்து*  வேண்டும் உருவு கொண்டு,*

நக்க பிரானோடு அயன் முதலாக* எல்லாரும் எவையும்,* தன்னுள்

ஒக்க வொடுங்க விழுங்க வல்லானைப்பெற்று* ஒன்றும் தளர்விலனே.         3.10.9

 

3121:

தளர்வின்றியே என்றும் எங்கும் பரந்த*  தனிமுதல் ஞானமொன்றாய்,*

அளவுடைய இம்புலங்கள் அறியாவகையால்*அருவாகி நிற்கும்,*

வளரொளி ஈசனை மூர்த்தியைப்* பூதங்கள் ஐந்தை இருசுடரை,*

கிளரொளி மாயனைக் கண்ணனைத் தாள்பற்றி*  யானென்றும் கேடிலனே. 3.10.10

 

3122:##

கேடில் விழுப்புகழ்க் கேசவனைக்* குருகூர்ச் சடகோபன் சொன்ன,*

பாடல் ஓர் ஆயிரத்துள்* இவையும் ஓர் பத்தும்  பயிற்ற வல்லார்கட்கு,* அவன்

நாடும் நகரமும் நன்குடன் காண*  நலனிடை ஊர்தி பண்ணி,*

வீடும் பெறுத்தித்தன் மூவுலகுக்கும் தரும்* ஒரு நாயகமே. (2)            3.10.11