அமலனாதிபிரான் தனியன்கள்
பெரிய நம்பிகள் அருளியது
ஆபாத சூடமநுபூய ஹரிம்ஸயாநம் மத்த்யேகவேர துஹிதுர்முதிதாந்தராத்மா அத்ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்தராணாம் யோநிச்சிகாயமநவைமுநிவாஹநந்தம். |
திருமலை நம்பிகள் அருளியது
காட்டவே கண்ட பாத கமலம்நல் லாடை யுந்தி, தேட்டரு முதர பந்தம் திருமார்பு கண்டம் செவ்வாய், வாட்டமில் கண்கள் மேனி முனியேறித் தனிபு குந்து, பாட்டினால் கண்டு வாழும் பாணர்தாள் பரவி னோமே. |
திருப்பாணாழ்வார் அருளிச் செய்த அமலனாதிபிரான்
927 | அமல னாதிபிரா னடியார்க் கென்னை யாட்படுத்த விமலன், விண்ணவர் கோன்விரை யார்பொழில் வேங்கடவன், நிமலன் நின்மலன் நீதி வானவன், நீள்மதி ளரங்கத் தம்மான், திருக் கமல பாதம்வந் தென்கண்ணி னுள்ளன வொக்கின்றதே. |
1 |
928 | உவந்த வுள்ளத்தனா யுலகமளந் தண்டமுற, நிவந்த நீள்முடியன் அன்று நேர்ந்த நிசாசரரை, கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார்பொழில் அரங்கத் தம்மான், அரைச் சிவந்த ஆடையின் மேல்சென்ற தாமென் சிந்தனையே. |
2 |
929 | மந்தி பாய்வட வேங்கட மாமலை, வானவர்கள், சந்தி செய்ய நின்றா னரங்கத் தரவி னணையான், அந்தி போல்நிறத் தாடையு மதன்மேல் அயனைப் படைத்த தோரெழில் உந்தி மேலதன் றோஅடி யேனுள்ளத் தின்னுயிரே. |
3 |
930 | சதுரமா மதிள்சூழ் ழிலங்கைக் கிறைவன் தலைபத்து உதிர வோட்டி,ஓர் வெங்கணை யுய்த்தவ னோத வண்ணன் மதுரமா வண்டு பாட மாமயி லாடரங்கத் தம்மான்,திருவயிற் றுதரபந் தனமென் னுள்ளத்துள்நின் றுலாகின்றதே. |
4 |
931 | பாரமாய பழவினை பற்றறுத்து, என்னைத்தன் வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி யென்னுள் புகுந்தான், கோர மாதவம் செய்தனன்கொ லறியே னரங்கத் தம்மான்,திரு வார மார்பதன் றோஅடி யேனை யாட்கோண்டதே. |
5 |
932 | துண்ட வெண்பிறை யான்துயர் தீர்த்தவன், அஞ்சிறைய வண்டுவாழ் பொழில்சூ ழரங்கநகர் மேய வப்பன் அண்ட ரண்டபகி ரண்டத்தொரு மாநிலம் எழுமால்வரை, முற்றும் உண்ட கண்டங்கண் டீரடி யேனை யுய்யக்கொண்டதே. |
6 |
933 | கையி னார்சுரி சங்கன லாழியர், நீள்வரைபோல் மெய்யனார் துளப விரையார் கமழ்நீள் முடியெம் ஐயனார், அணியரங்கனா ரரவி னணைமிசை மேய மாயனார், செய்யவா யையோ. என்னைச் சிந்தை கவர்ந்ததுவே. |
7 |
934 | பரிய னாகி வந்த அவுண னுடல்கீண்ட, அமரர்க்கு அரிய ஆதிபிரா னரங்கத் தமலன் முகத்து, கரிய வாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி, நீண்டவப் பெரிய வாய கண்க ளென்னைப் பேதைமை செய்தனவே. |
8 |
935 | ஆலமா மரத்தி னிலைமே லொருபாலகனாய், ஞால மேழு முண்டா னரங்கத் தரவி னணையான், கோல மாமணி யாரமும் முத்துத் தாமமும் முடிவில்ல தோரெழில் நீல மேனி யையோ. நிறை கொண்டதென் நெஞ்சினையே. |
9 |
936 | கொண்டல் வண்ணனைக் கோவல னாய்வெண்ணெய் உண்ட வாயன்என்னுள்ளம் கவர்ந்தானை, அண்டர் கோனணி யரங்கன்என் னமுதினைக் கண்ட கண்கள்,மற் றொன்றினைக் காணாவே. |
10 |
திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம் .