கண்ணிநுண் சிறுத்தாம்பு


கண்ணி நிண்சிறுத்தாம்புத் தனியன்கள்

ஸ்ரீமந் நாதமுனிகள் அருளிச்செய்தவை

அவிதித விஷயாந் தரஶ்ஶடாரே

ருபநிஷதா முபகா நமாத்ரபோக:

அபிசகுணவஶாத் ததேகஸேஷÖ

மதுரகவிர் ஹ்ருதயே மமாவிரஸ்து.

வேறொன்றும் நானறியேன் வேதம் தமிழ்செய்த,

மாறன் சடகோபன் வண்குருகூர்- ஏறு,எங்கள்

வாழ்வாம் என்றேத்தும் மதுரகவியார் எம்மை

ஆள்வார் அவரே அரண்.

ஸ்ரீ மதுரகவியாழ்வார் அருளிச்செய்த கண்ணி நுண்சிறுத்தாம்பு

937:##

கண்ணி நுண் சிறுத் தாம்பினால் *கட்டுண்ணப்-

பண்ணிய பெரு மாயன்,*என்னப்பனில்,*

நண்ணித் தென்குருகூர்* நம்பி என்றக்கால்,*

அண்ணிக்கும் அமுதூறும்* என் நாவுக்கே. (2)  (1)

 

938:

நாவினால் நவிற்று *இன்பம் எய்தினேன்,*

மேவினேன்* அவன் பொன்னடி மெய்ம்மையே,*

தேவு மற்றறியேன் *குருகூர் நம்பி,*

பாவின் இன்னிசை* பாடித் திரிவனே.  (2)

 

939:

திரி தந்தாகிலும்* தேவ பிரானுடை,*

கரிய கோலத்* திருவுருக் காண்பன் நான்,*

பெரிய வண்குருகூர்* நகர் நம்பிக்காள்-

உரியனாய்,* அடியேன்* பெற்ற நன்மையே.  (3)

 

940:

நன்மையால் மிக்க* நான்மறை ஆளர்கள்,*

புன்மை ஆகக்* கருதுவர் ஆதலின்,*

அன்னையாய் அத்தனாய் *என்னை ஆண்டிடும்-

தன்மையான்,*சடகோபன்* என் நம்பியே.  (4)

 

941:

நம்பினேன்* பிறர் நன்பொருள் தன்னையும்,*

நம்பினேன் *மட வாரையும் முன்னெல்லாம்,*

செம்பொன் மாடத்* திருக்குருகூர் நம்பிக்கு-

அன்பனாய்,*அடியேன்* சதிர்த்தேன் இன்றே.  (5)

 

942:

இன்று தொட்டும்* எழுமையும் எம்பிரான்,*

நின்று தன்* புகழ் ஏத்த அருளினான்,*

குன்ற மாடத்* திருக்குகூர் நம்பி,*

என்றும் என்னை* இகழ்விலன் காண்மினே.  (6)

 

943:

கண்டு கொண்டென்னைக்* காரி மாறப்பிரான்,*

பண்டை வல்வினை* பாற்றி அருளினான்,*

எண்திசையும் *அறிய இயம்புகேன்,*

ஒண்தமிழ் *சடகோபன் அருளையே.  (7)

 

944:

அருள் கொண்டாடும் *அடியவர் இன்புற,*

அருளினான் *அவ்வருமறையின்பொருள்,*

அருள்கொண்டு* ஆயிரம் இன்தமிழ் பாடினான்,*

அருள்கண்டீர்* இவ்வுலகினில் மிக்கதே.  (8)

 

945:

மிக்க வேதியர்* வேதத்தின் உட்பொருள்*

நிற்கப் பாடி* என் நெஞ்சுள் நிறுத்தினான்,*

தக்க சீர்* சடகோபன் என் நம்பிக்கு,*ஆட்-

புக்க காதல் *அடிமைப் பயனன்றே?  (9)

 

946:##

பயனன்று ஆகிலும்* பாங்கலர் ஆகிலும்*

செயல் நன்றாகத் *திருத்திப் பணிகொள்வான்,*

குயில் நின்றார் பொழில் சூழ் *குருகூர் நம்பி,*

முயல்கின்றேன் *உன்தன் மொய்கழற்கு அன்பையே. (2)  (10)

 

947:##

அன்பன் தன்னை* அடைந்தவர்க்கட்கு எல்லாம்-

அன்பன்,* தென்குருகூர் *நகர் நம்பிக்கு,*

அன்பனாய்* மதுரகவி சொன்னசொல்-

நம்பு வார்பதி,* வைகுந்தம் *காண்மினே. (2)  (11)

ஸ்ரீ மதுகவியாழ்வார் திருவடிகளே சரணம்.