
ஸ்ரீமந் நாதமுனிகள் அருளிச்செய்தவை
அவிதித விஷயாந் தரஶ்ஶடாரே
ருபநிஷதா முபகா நமாத்ரபோக: அபிசகுணவஶாத் ததேகஸேஷÖ மதுரகவிர் ஹ்ருதயே மமாவிரஸ்து. |
வேறொன்றும் நானறியேன் வேதம் தமிழ்செய்த,
மாறன் சடகோபன் வண்குருகூர்- ஏறு,எங்கள் வாழ்வாம் என்றேத்தும் மதுரகவியார் எம்மை ஆள்வார் அவரே அரண். |
ஸ்ரீ மதுரகவியாழ்வார் அருளிச்செய்த கண்ணி நுண்சிறுத்தாம்பு
937:##
கண்ணி நுண் சிறுத் தாம்பினால் *கட்டுண்ணப்-
பண்ணிய பெரு மாயன்,*என்னப்பனில்,*
நண்ணித் தென்குருகூர்* நம்பி என்றக்கால்,*
அண்ணிக்கும் அமுதூறும்* என் நாவுக்கே. (2) (1)
938:
நாவினால் நவிற்று *இன்பம் எய்தினேன்,*
மேவினேன்* அவன் பொன்னடி மெய்ம்மையே,*
தேவு மற்றறியேன் *குருகூர் நம்பி,*
பாவின் இன்னிசை* பாடித் திரிவனே. (2)
939:
திரி தந்தாகிலும்* தேவ பிரானுடை,*
கரிய கோலத்* திருவுருக் காண்பன் நான்,*
பெரிய வண்குருகூர்* நகர் நம்பிக்காள்-
உரியனாய்,* அடியேன்* பெற்ற நன்மையே. (3)
940:
நன்மையால் மிக்க* நான்மறை ஆளர்கள்,*
புன்மை ஆகக்* கருதுவர் ஆதலின்,*
அன்னையாய் அத்தனாய் *என்னை ஆண்டிடும்-
தன்மையான்,*சடகோபன்* என் நம்பியே. (4)
941:
நம்பினேன்* பிறர் நன்பொருள் தன்னையும்,*
நம்பினேன் *மட வாரையும் முன்னெல்லாம்,*
செம்பொன் மாடத்* திருக்குருகூர் நம்பிக்கு-
அன்பனாய்,*அடியேன்* சதிர்த்தேன் இன்றே. (5)
942:
இன்று தொட்டும்* எழுமையும் எம்பிரான்,*
நின்று தன்* புகழ் ஏத்த அருளினான்,*
குன்ற மாடத்* திருக்குகூர் நம்பி,*
என்றும் என்னை* இகழ்விலன் காண்மினே. (6)
943:
கண்டு கொண்டென்னைக்* காரி மாறப்பிரான்,*
பண்டை வல்வினை* பாற்றி அருளினான்,*
எண்திசையும் *அறிய இயம்புகேன்,*
ஒண்தமிழ் *சடகோபன் அருளையே. (7)
944:
அருள் கொண்டாடும் *அடியவர் இன்புற,*
அருளினான் *அவ்வருமறையின்பொருள்,*
அருள்கொண்டு* ஆயிரம் இன்தமிழ் பாடினான்,*
அருள்கண்டீர்* இவ்வுலகினில் மிக்கதே. (8)
945:
மிக்க வேதியர்* வேதத்தின் உட்பொருள்*
நிற்கப் பாடி* என் நெஞ்சுள் நிறுத்தினான்,*
தக்க சீர்* சடகோபன் என் நம்பிக்கு,*ஆட்-
புக்க காதல் *அடிமைப் பயனன்றே? (9)
946:##
பயனன்று ஆகிலும்* பாங்கலர் ஆகிலும்*
செயல் நன்றாகத் *திருத்திப் பணிகொள்வான்,*
குயில் நின்றார் பொழில் சூழ் *குருகூர் நம்பி,*
முயல்கின்றேன் *உன்தன் மொய்கழற்கு அன்பையே. (2) (10)
947:##
அன்பன் தன்னை* அடைந்தவர்க்கட்கு எல்லாம்-
அன்பன்,* தென்குருகூர் *நகர் நம்பிக்கு,*
அன்பனாய்* மதுரகவி சொன்னசொல்-
நம்பு வார்பதி,* வைகுந்தம் *காண்மினே. (2) (11)
ஸ்ரீ மதுகவியாழ்வார் திருவடிகளே சரணம்.