திருப்பள்ளியெழுச்சி தனியன்கள்
திருமலையாண்டான் அருளியது
தமேவமத்வா பரவாஸுதேவம் ரங்கேசயம் ராஜவதர்கணீயம் ப்ராபோதகீம் யோக்ருத ஸíக்திமாலாம் பக்தாங்க்ரி ரேணும் பகவந்த மீடே. |
மண்டங் குடியென்பர் மாமரையோர்,* மன்னியசீர்த் தொண்டரடிப்பொடி தொன்னகரம்,* – வண்டு திணர்த்தவயல் தென்னரங்கத்து அம்மானைப்,* பள்ளி உணர்த்தும் பிரானுதித்த வூர். |
தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்த திருப்பள்ளியெழுச்சி
917:##
கதிரவன் குணதிசைச் சிகரம் வந்தணைந்தான்*
கனவிருள் அகன்றது காலையம் பொழுதாய்,*
மதுவிரிந்து ஒழுகின மாமலர் எல்லாம்*
வானவர் அரசர்கள் வந்து வந்தீண்டி,*
எதிர்திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த*
இருங்களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும்,*
அதிர்தலில் அலைகடல் போன்றுளது எங்கும்*
அரங்கத்து அம்மா! பள்ளி எழுந்து அருளாயே. (2) (1)
918:
கொழுங்கொடி முல்லையின் கொழுமலர் அணவிக்*
கூர்ந்தது குணதிசை மாருதம் இதுவோ,*
எழுந்தன மலரணைப் பள்ளிகொள் அன்னம்*
ஈன்பனி நனைந்த தம் இருசிறகு உதறி,*
விழுங்கிய முதலையின் பிலம்புரை பேழ்வாய்*
வெள்ளெயிறுறவதன் விடத்தனுக்கு அனுங்கி,*
அழுங்கிய ஆனையின் அருந்துயர் கெடுத்த*
அரங்கத்து அம்மா!பள்ளி எழுந்து அருளாயே. (2)
919:
சுடரொளி பரந்தன சூழ்திசை எல்லாம்*
துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி,*
படரொளி பசுத்தனன் பனிமதி இவேனா*
பாயிறுள் அகன்றது பைம்பொழில் கமுகின்,*
மடலிடைக் கீறிவண் பாளைகள் நாற*
வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ,*
அடலொளி திகழ்தரு திகிரியந் தடக்கை*
அரங்கத்து அம்மா!பள்ளி எழுந்து அருளாயே. (3)
920:
மேட்டிள மேதிகள் தளைவிடும் ஆயர்கள்*
வேய்ங்குழல் ஓசையும் விடைமணிக் குரலும்,*
ஈட்டிய இசைதிசை பரந்தன வயலுள்*
இருந்தின சுரும்பினம் இலங்கையர் குலத்தை,*
வாட்டிய வரிசிலை வானவர் ஏறே!*
மாமுனி வேள்வியைக் காத்து,* அவ பிரதம்-
ஆட்டிய அடுதிறல் அயோத்தி எம் அரசே!*
அரங்கத்து அம்மா!பள்ளி எழுந்து அருளாயே. (4)
921:
புலம்பின புட்களும் பூம்பொழில்களின் வாய்*
போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி,*
கலந்தது குணதிசை கனைகடல் அரவம்*
களிவண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த,*
அலங்கலந் தொடையல் கொண்டடியிணை பணிவான்*
அமரர்கள் புகுந்தனர் ஆதலில் அம்மா*
இலங்கையர் கோன் வழிபாடு செய்கோயில்*
எம்பெருமான்!பள்ளி எழுந்து அருளாயே. (5)
922:
இரவியர் மணிநெடும் தேரொடும் இவரோ?*
இறையவர் பதினொரு விடையரும் இவரோ?*
மருவிய மயிலினன் அறுமுகன் இவேனா?*
மருதரும் வசுக்களும் வந்து வந்தீண்டி,*
புரவியோடு ஆடலும் பாடலும் தேரும்*
குமரதண்டம் புகுந் தீண்டிய வெள்ளம்,*
அருவரை அனைய நின் கோயில்முன் இவரோ?*
அரங்கத்து அம்மா!பள்ளி எழுந்து அருளாயே. (6)
923:
அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ?*
அருந்தவ முனிவரும் மருதரும் இவரோ?*
இந்திரன் ஆனையும் தானும் வந்து இவேனா?*
எம்பெருமான் உன் கோயிலின் வாசல்,*
சுந்தரர் நெருக்கவிச் சாதரர் நூக்க*
இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்,*
அந்தரம் பாரிடம் இல்லை மற்றிதுவோ?*
அரங்கத்து அம்மா!பள்ளி எழுந்து அருளாயே. (7)
924:
வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க*
மாநிதி கபிலையொண் கண்ணாடி முதலா,*
எம்பெருமான் படி மக்கலம் காண்டற்கு*
ஏற்பன வாயின கொண்டுநன் முனிவர்,*
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ?*
தோன்றினன் இரவியும் துலங்கொளி பரப்பி,*
அம்பரதலத்தில் நின்று அகல்கின்றது இருள்போய்*
அரங்கத்து அம்மா!பள்ளி எழுந்து அருளாயே. (8)
925:##
ஏதமில் தண்ணுமை யெக்கம்மத் தளியே*
யாழ்குழல் முழவமோடு இசைதிசை கெழுமி,*
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்*
கந்தரு வரவர் கங்குலுள் எல்லாம்,*
மாதவர் வானவர் சாரணர் இயக்கர்*
சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்,*
ஆதலில் அவர்க்கு நாளோலக்கம் அருள*
அரங்கத்து அம்மா!பள்ளி எழுந்து அருளாயே. (2) (9)
926:##
கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ?*
கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவேனா?*
துடியிடையார் சுரி குழல் பிழிந்துதறித்*
துகிலுடுத்து ஏறினர் சூழ்புனல் அரங்கா,*
தொடையொத்த துளவமும் கூடையும் பொலிந்து*
தோன்றிய தோள் தொண்டர் அடிப்பொடி என்னும்-
அடியனை,* அளியன் என்று அருளி உன் அடியார்க்கு-
ஆட்படுத்தாய்!* பள்ளி எழுந்து அருளாயே! (2) (10)
தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்.