திருமாலை தனியன்
திருவங்கப்பெருமாளரையர் அருளிச்செய்தது
மற்றொன்றும் வேண்டா மனமே. மதிளரங்கர், கற்றினம் மேய்த்த கழலிணைக்கீழ்,- உற்ற திருமாலை பாடும்சீர்த் தொண்டரடிப்பொடியெம் பெருமானை, எப்பொழுதும் பேசு. |
ஸ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்த திருமாலை
872 | காவலிற் புலனை வைத்துக் கலிதனைக் கடக்கப் பாய்ந்து, நாவலிட் டுழிதரு கின்றோம் நமன்தமர் தலைகள் மீதே, மூவுல குண்டு மிழ்ந்த முதல்வ.நின் நாமம் கற்ற, ஆவலிப் புடைமை கண்டாய் அரங்கமா நகரு ளானே. |
1 |
873 | பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா. அமர ரேறே. ஆயர்தம் கொழுந்தே. என்னும், இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும், அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே. |
2 |
874 | வேதநூல் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவ ரேலும், பாதியு முறங்கிப் போகும் நின்றதில் பதினை யாண்டு, பேதைபா லகன தாகும் பிணிபசி மூப்புத் துன்பம், ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகரு ளானே. |
3 |
875 | மொய்த்தவல் வினையுள் நின்று மூன்றெழுத் துடைய பேரால், கத்திர பந்து மன்றே பராங்கதி கண்டு கொண்டான், இத்தனை யடிய ரானார்க் கிரங்கும்நம் மரங்க னாய பித்தனைப் பெற்று மந்தோ. பிறவியுள் பிணங்கு மாறே. |
4 |
876 | பெண்டிரால் சுகங்க ளுய்ப்பான் பெரியதோ ரிடும்பை பூண்டு உண்டிராக் கிடக்கும் போது உடலுக்கே கரைந்து நைந்து, தண்டுழாய் மாலை மார்பன் தமர்களாய்ப் பாடி யாடி, தொண்டுபூண் டமுத முண்ணாத் தொழும்பர்சோ றுகக்கு மாறே. |
5 |
877 | மறம்சுவர் மதிளெ டுத்து மறுமைக்கே வெறுமை பூண்டு, புறம்சுவ ரோட்டை மாடம் புரளும்போ தறிய மாட்டீர், அறம்சுவ ராகி நின்ற அரங்கனார்க் காட்செய் யாதே, புறம்சுவர் கோலஞ் செய்து புள்கவ்வக் கிடக்கின் றீரே. |
6 |
878 | புலையற மாகி நின்ற புத்தொடு சமண மெல்லாம், கலையறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்ப ரோதாம், தலையறுப் புண்டும் சாவேன் சத்தியங் காண்மின் ஐயா, சிலையினா லிலங்கை செற்ற தேவனே தேவ னாவான். |
7 |
879 | வெறுப்பொடு சமணர் முண்டர் விதியில்சாக் கியர்கள், நின்பால் பொறுப்பரி யனகள் பேசில் போவதே நோய தாகி குறிப்பெனக் கடையு மாகில் கூடுமேல் தலையை ஆங்கே, அறுப்பதே கருமங் கண்டாய் அரங்கமா நகரு ளானே. |
8 |
880 | மற்றுமோர் தெய்வ முண்டே மதியிலா மானி டங்காள், உற்றபோ தன்றி நீங்கள் ஒருவனென் றுணர மாட்டீர், அற்றமே லொன்ற றீயீர் அவனல்லால் தெய்வ மில்லை, கற்றினம் மேய்த்த வெந்தை கழலிணை பணிமி னீரே. |
9 |
881 | நாட்டினான் தெய்வ மெங்கும் நல்லதோ ரருள்தன் னாலே, காட்டினான் திருவ ரங்கம் உய்பவர்க் குய்யும் வண்ணம், கேட்டிரே நம்பி மீர்காள். கெருடவா கனனும் நிற்க, சேட்டைதன் மடிய கத்துச் செல்வம்பார்த் திருக்கின் றீரே. |
10 |
882 | ஒருவில்லா லோங்கு முந்நீர் அனைத்துல கங்க ளுய்ய, செருவிலே யரக்கர் கோனைச் செற்றநம் சேவ கனார், மருவிய பெரிய கோயில் மதிள்திரு வரங்க மென்னா, கருவிலே திருவி லாதீர். காலத்தைக் கழிக்கின் றீரே. |
11 |
883 | நமனும்முற் கலனும் பேச நரகில்நின் றார்கள் கேட்க, நரகமே சுவர்க்க மாகும் நாமங்க ளுடைய நம்பி, அவனதூ ரரங்க மென்னாது அயர்த்துவீழ்ந் தளிய மாந்தர், கவலையுள் படுகின் றாரென் றதனுக்கே கவல்கின் றேனே. |
12 |
884 | எறியுநீர் வெறிகொள் வேலை மாநிலத் துயிர்க ளெல்லாம், வெறிகொள்பூந் துளவ மாலை விண்ணவர் கோனை யேத்த, அறிவிலா மனித ரெல்லாம் அரங்கமென் றழைப்ப ராகில், பொறியில்வாழ் நரக மெல்லாம் புல்லெழுந் தொழியு மன்றே? |
13 |
885 | வண்டின முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை, கொண்டல்மீ தணவும் சோலை குயிலினம் கூவும் சோலை, அண்டர்கோ னமரும் சோலை அணிதிரு வரங்க மென்னா, மிண்டர்பாய்ந் துண்ணும் சோற்றை விலக்கிநாய்க் கிடுமி னீரே. |
14 |
886 | மெய்யர்க்கே மெய்ய னாகும் விதியிலா வென்னைப் போல, பொய்யர்க்கே பொய்ய னாகும் புட்கொடி யுடைய கோமான், உய்யப்போ முணர்வி னார்கட் கொருவனென் றுணர்ந்த பின்னை, ஐயப்பா டறுத்துத் தோன்றும் அழகனூ ரரங்க மன்றே? |
15 |
887 | சூதனாய்க் கள்வ னாகித் தூர்த்தரோ டிசைந்த காலம், மாதரார் கயற்க ணென்னும் வலையுள்பட் டழுந்து வேனை, போதரே யென்று சொல்லிப் புந்தியில் புகுந்து, தன்பால் ஆதரம் பெருக வைத்த அழகனூ ரரங்க மன்றே? |
16 |
888 | விரும்பிநின் றேத்த மாட்டேன் விதியிலேன் மதியொன் றில்லை, இரும்புபோல் வலிய நெஞ்சம் இறையிறை யுருகும் வண்ணம் சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்ட, கரும்பினைக் கண்டு கொண்டேன் கண்ணிணை களிக்கு மாறே. |
17 |
889 | இனிதிரைத் திவலை மோத எறியும்தண் பரவை மீதே, தனிகிடந் தரசு செய்யும் தாமரைக் கண்ண னெம்மான், கனியிருந் தனைய செவ்வாய்க் கண்ணணைக் கண்ட கண்கள், பனியரும் புதிரு மாலோ எஞ்செய்கேன் பாவி யேனே. |
18 |
890 | குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி, வடதிசை பின்பு காட்டித் தென்திசை யிலங்கை நோக்கி, கடல்நிறக் கடவு ளெந்தை அரவணைத் துயிலு மாகண்டு, உடலெனக் குருகு மாலோ எஞ்செய்கே னுலகத் தீரே. |
19 |
891 | பாயுநீ ரரங்கந் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொண்ட, மாயனார் திருநன் மார்பும் மரகத வுருவும் தோளும், தூய தாமரைக் கண்களும் துவரிதழ் பவள வாயும், ஆயசீர் முடியும் தேசும் அடியரோர்க் ககல லாமே? |
20 |
892 | பணிவினால் மனம தொன்றிப் பவளவா யரங்க னார்க்கு, துணிவினால் வாழ மாட்டாத் தொல்லைநெஞ் சே.நீ சொல்லாய், அணியனார் செம்பொ னாய அருவரை யனைய கோயில், மணியனார் கிடந்த வாற்றை மனத்தினால் நினைக்க லாமே? |
21 |
893 | பேசிற்றே பேச லல்லால் பெருமையொன் றுணர லாகாது, ஆசற்றார் தங்கட் கல்லால் அறியலா வானு மல்லன், மாசற்றார் மனத்து ளானை வணங்கிநா மிருப்ப தல்லால், பேசத்தா னாவ துண்டோ ? பேதைநெஞ் சே.நீ சொல்லாய். |
22 |
894 | கங்கயிற் புனித மாய காவிரி நடுவு பாட்டு, பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழி லரங்கந் தன்னுள், எங்கள்மா லிறைவ னீசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும், எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையே னேழை யேனே. |
23 |
895 | வெள்ளநீர் பரந்து பாயும் விரிபொழி லரங்கந் தன்னுள், கள்ளனார் கிடந்த வாறும் கமலநன் முகமும் கண்டு உள்ளமே. வலியை போலும் ஒருவனென் றுணர மாட்டாய், கள்ளமே காதல் செய்துன் கள்ளத்தே கழிக்கின் றாயே. |
24 |
896 | குளித்துமூன் றனலை யோம்பும் குறிகொளந் தணமை தன்னை, ஒளித்திட்டே னென்க ணில்லை நின்கணும் பத்த னல்லேன், களிப்பதென் கொண்டு நம்பீ. கடல்வண்ணா. கதறு கின்றேன், அளித்தெனக் கருள்செய் கண்டாய் அரங்கமா நகரு ளானே. |
25 |
897 | போதெல்லாம் போது கொண்டுன் பொன்னடி புனைய மாட்டேன், தீதிலா மொழிகள் கொண்டுன் திருக்குணம் செப்ப மாட்டேன், காதலால் நெஞ்ச மன்பு கலந்திலே னதுதன் னாலே, ஏதிலே னரங்கர்க்கு எல்லே. எஞ்செய்வான் தோன்றி னேனே. |
26 |
898 | குரங்குகள் மலையை தூக்கக் குளித்துத்தாம் புரண்டிட் டோ டி, தரங்கநீ ரடைக்க லுற்ற சலமிலா அணிலம் போலேன், மரங்கள்போல் வலிய நெஞ்சம் வஞ்சனேன் நெஞ்சு தன்னால், அரங்கனார்க் காட்செய் யாதே அளியத்தே னயர்க்கின் றேனே. |
27 |
899 | உம்பரா லறிய லாகா ஒளியுளார் ஆனைக் காகி, செம்புலா லுண்டு வாழும் முதலைமேல் சீறி வந்தார், நம்பர மாய துண்டே? நாய்களோம் சிறுமை யோரா, எம்பிராற் காட்செய் யாதே எஞ்செய்வான் தோன்றி னேனே. |
28 |
900 | ஊரிலேன் காணி யில்லை உறவுமற் றொருவ ரில்லை, பாரில்நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி, காரொளி வண்ண னே.(என் கண்ணனே. கதறு கின்றேன், ஆருளர்க் களைக் ணம்மா. அரங்கமா நகரு ளானே. |
29 |
901 | மனத்திலோர் தூய்மை யில்லை வாயிலோ ரிஞ்சொ லில்லை, சினத்தினால் செற்றம் நோக்கித் தீவிளி விளிவன் வாளா, புனத்துழாய் மாலை யானே. பொன்னிசூழ் திருவ ரங்கா, எனக்கினிக் கதியென் சொல்லாய் என்னையா ளுடைய கோவே. |
30 |
902 | தவத்துளார் தம்மி லல்லேன் தனம்படத் தாரி லல்லேன், உவர்த்தநீர் போல வென்றன் உற்றவர்க் கொன்று மல்லேன், துவர்த்தசெவ் வாயி னார்க்கே துவக்கறத் துரிச னானேன், அவத்தமே பிறவி தந்தாய் அரங்கமா நகரு ளானே. |
31 |
903 | ஆர்த்துவண் டலம்பும் சோலை அணிதிரு வரங்கந் தன்னுள், கார்த்திர ளனைய மேனிக் கண்ணனே. உன்னைக் காணும், மார்க்கமொ றறிய மாட்டா மனிசரில் துரிச னாய, மூர்க்கனேன் வந்து நின்றேன், மூர்க்கனேன் மூர்க்க னேனே. |
32 |
904 | மெய்யெல்லாம் போக விட்டு விரிகுழ லாரில் பட்டு, பொய்யெலாம் பொதிந்து கொண்ட போட்கனேன் வந்து நின்றேன், ஐயனே. அரங்க னே.உன் அருளென்னு மாசை தன்னால், பொய்யனேன் வந்து நின்றேன் பொய்யனேன் பொய்ய னேனே. |
33 |
905 | உள்ளத்தே யுறையும் மாலை உள்ளுவா னுணர்வொன் றில்லா, கள்ளத்தேன் நானும் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டேன், உள்ளுவா ருள்ளிற் றெல்லாம் உடனிருந் தறிதி யென்று, வெள்கிப்போ யென்னுள் ளேநான் விலவறச் சிரித்திட் டேனே. |
34 |
906 | தாவியன் றுலக மெல்லாம் தலைவிளாக் கொண்ட எந்தாய், சேவியே னுன்னை யல்லால் சிக்கெனச் செங்கண் மாலே, ஆவியே.அமுதே என்றன் ஆருயி ரனைய எந்தாய், பாவியே னுன்னை யல்லால் பாவியேன் பாவி யேனே. |
35 |
907 | மழைக்கன்று வரைமு னேந்தும் மைந்தனே.மதுர வாறே, உழைக்கன்றே போல நோக்கம் உடையவர் வலையுள் பட்டு, உழைக்கின்றேற் கென்னை நோக்கா தொழிவதே,உன்னை யன்றே அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி. அரங்கமா நகரு ளானே. |
36 |
908 | தெளிவிலாக் கலங்கல் நீர்சூழ் திருவரங்கங் கத்துள் ளோங்கும், ஒளியுளார் தாமே யன்றே தந்தையும் தாயு மாவார், எளியதோ ரருளு மன்றே எந்திறத் தெம்பி ரானார், அளியன்நம் பையல் என்னார் அம்மவோ கொடிய வாறே. |
37 |
909 | மேம்பொருள் போக விட்டு மெய்ம்மையை மிகவு ணர்ந்து, ஆம்பரி சறிந்து கொண்டு ஐம்புல னகத்த டக்கி, காம்புறத் தலைசி ரைத்துன் கடைத்தலை யிருந்து,வாழும் சோம்பரை உகத்தி போலும் சூழ்புனல் அரங்கத் தானே. |
38 |
910 | அடிமையில் குடிமை யில்லா அயல்சதுப் பேதி மாரில், குடிமையில் கடைமை பட்ட குக்கரில் பிறப்ப ரேலும், முடியினில் துளபம் வைத்தாய். மொய்கழற் கன்பு செய்யும், அடியரை யுகத்தி போலும் அரங்கமா நகரு ளானே. |
39 |
911 | திருமறு மார்வ.நின்னைச் சிந்தையுள் திகழ வைத்து, மருவிய மனத்த ராகில் மாநிலத் துயிர்க ளெல்லாம், வெருவரக் கொன்று சுட்டிட் டீட்டிய வினைய ரேலும், அருவினைப் பயன துய்யார் அரங்கமா நகரு ளானே. |
40 |
912 | வானுளா ரறிய லாகா வானவா. என்ப ராகில், தேனுலாந் துளப மாலைச் சென்னியாய். என்ப ராகில், ஊனமா யினகள் செய்யும் ஊனகா ரகர்க ளேலும், போனகம் செய்த சேடம் தருவரேல் புனித மன்றே? |
41 |
913 | பழுதிலா வொழுக லாற்றுப் பலசதுப் பேதி மார்கள், இழிகுலத் தவர்க ளேலும் எம்மடி யார்க ளாகில், தொழுமினீர் கொடுமின் கொள்மின். என்றுநின் னோடு மொக்க, வழிபட வருளி னாய்போன்ம் மதிள்திரு வரங்கத் தானே. |
42 |
913 | அமரவோ ரங்க மாறும் வேதமோர் நான்கு மோதி, தமர்களில் தலைவ ராய சாதியந் தணர்க ளேலும், நுமர்களைப் பழிப்ப ராகில் நொடிப்பதோ ரளவில், ஆங்கே அவர்கள்தாம் புலையர் போலும் அரங்கமா நகரு ளானே. |
43 |
915 | பெண்ணுலாம் சடையி னானும் பிரமனு முன்னைக் காண்பான், எண்ணிலா வூழி யூழி தவஞ்செய்தார் வெள்கி நிற்ப, விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கன் றருளை யீந்த கண்ணறா, உன்னை யென்னோ களைகணாக் கருது மாறே. |
44 |
916 | வளவெழும் தவள மாட மதுரைமா நகரந் தன்னுள், கவளமால் யானை கொன்ற கண்ணனை அரங்க மாலை, துவளத்தொண் டாய தொல்சீர்த் தொண்டர டிப்பொ டிசொல், இளையபுன் கவிதை யேலும் எம்பிறார் கினிய வாறே. |
45 |
தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.