பெரிய திருமடல் தனியன்
பிள்ளைத் திருநறையூர் அரையர் அருளிச்செய்தது
பொன்னுலகில் வானவரும் பூமகளும் போற்றிசெய்யும் நன்னுதலீர். நம்பி நறையூரர், – மன்னுலகில் என்னிலைமை கண்டு மிரங்காரே யாமாகில், மன்னு மடலூர்வன் வந்து. மூளும் பழவினையெல்லாம அகல முனிந்தருளி |
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமடல்
2713 | மன்னிய பல்பொறிசேர் ஆயிரவாய் வாளரவின், சென்னி மணிக்குடுமித் தெய்வச் சுடர்நடுவுள், மன்னிய நாகத் தணைமேலோர் மாமலைபோல், மின்னும் மணிமகர குண்டலங்கள் வில்வீச, |
1 |
2714 | துன்னிய தாரகையின் பேரொளிசேர் ஆகாசம், என்னும் விதானத்தைன் கீழால், – இருசுடரை மின்னும் விளக்காக ஏற்றி, மறிகடலும் பன்னு திரைக்கவரி வீச, – நிலமங்கை |
2 |
2715 | தன்னை முனநாள் அளவிட்ட தாமரைபோல், மன்னிய சேவடியை வானியங்கு தாரகைமீன், என்னும் மலர்ப்பிறையால் ஏய்ந்த, – மழைக்கூந்தல் தென்னன் உயர்பொருப்பும் தெய்வ வடமலையும், |
3 |
2716 | என்னும் இவையே முலையா வடிவமைந்த, அன்ன நடைய அணங்கே, – அடியிணையைத் தன்னுடைய அங்கைகளால் தான்தடவத் தான்கிடந்து,μர் உன்னிய யோகத் துறக்கம் தலைக்கொண்ட |
4 |
2717 | பின்னை,தன் னாபி வலயத்துப் பேரொளிசேர், மன்னிய தாமரை மாமலர்ப்பூத்து, அம்மலர்மேல் முன்னம் திசைமுகனைத் தான்படைக்க, மற்றவனும் முன்னம் படைத்தனன் நான்மறைகள், – அம்மறைதான் |
5 |
2718 | மன்னும் அறம்பொருள் இன்பம்வீ டென்றுலகில், நன்னெறிமேம் பட்டன நான்கன்றே, – நான்கினிலும் பின்னையது பின்னைப் பெயர்த்தரு மென்பது,μர் தொன்னெறியை வேண்டுவார் வீழ்கனியும் ஊழிலையும், |
6 |
2719 | என்னும் இவையே _கர்ந்துடலம் தாம்வருந்தி, துன்னும் இலைக்குரம்பைத் துஞ்சியும், – வெஞ்சுடரோன் மன்னும் அழல்_கர்ந்தும் வண்தடத்தின் உட்கிடந்தும், பெரிய திருமடல் இன்னதோர் தன்மையராய் ஈங்குடலம் விட்டெழுந்து, |
7 |
2720 | தொன்னெறிக்கட் சென்றார் எனப்படும் சொல்லல்லால், இன்னதோர் காலத் தினையா ரிதுபெற்றார், என்னவும் கேட்டறிவ தில்லை – உளதென்னில் மன்னுங் கடுங்கதிரோன் மண்டலத்தின் நன்னடுவுள், |
8 |
2721 | அன்னதோர் இல்லியி னூடுபோய், – வீடென்னும் தொன்னெறிக்கட் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே, அன்னதே பேசும் அறிவில் சிறுமனத்து,ஆங் கன்னவரைக் கற்பிப்போம் யாமே?, – அதுநிற்க, |
9 |
2722 | முன்னம்நான் சொன்ன அறத்தின் வழிமுயன்ற, அன்னவர்த்தாம் காண்டீர்க்க ளாயிரக்கண் வானவர்கோன், பொன்னகரம் புக்கமரர் போற்றிசைப்ப, – பொங்கொளிசேர் கொன்னவிலும் கோளரிமாத் தாஞ்சுமந்த கோலம்சேர், |
10 |
2723 | மன்னிய சிங்கா சனத்தின்மேல், – வாணொடுங்கண் கன்னியரா லிட்ட கவரிப் பொதியவிழ்ந்து,ஆங் கின்னளம்பூந் தென்றல் இயங்க, – மருங்கிருந்த மின்னனைய _ண்மருங்குல் மெல்லியலார் வெண்முறுவல், |
11 |
2724 | முன்னம் முகிழ்த்த முகிழ்நிலா வந்தரும்ப, அன்னவர்த்தம் மானோக்க முண்டாங் கணிமலர்சேர், பொன்னியல் கற்பகத்தின் காடுடுத்த மாடெல்லாம், மன்னிய மந்தாரம் பூத்த மதுத்திவலை, |
12 |
2725 | இன்னைசை வண்டமரும் சோலைவாய் மாலைசேர், மன்னிய மாமயில்போல் கூந்தல், – மழைத்தடங்கண் மின்னிடையா ரோடும் விளையாடி-வேண்டிடத்து, மன்னும் மணித்தலத்து மாணிக்க மஞ்சரியின், |
13 |
2726 | மின்னின் ஒளிசேர் பளிங்கு விளிம்படுத்த, மன்னும் பவளக்கால் செம்பொஞ்செய் மண்டபத்துள், அன்ன நடைய அரம்பயர்த்தம் வகைவளர்த்த இன்னிசையாழ் பாடல்கேட் டின்புற்று, – இருவிசும்பில் |
14 |
2727 | மன்னும் மழைதழும் வாணிலா நீண்மதிதோய், மின்னி னொளிசேர் விசும்பூரும் மாளிகைமேல், மன்னும் மளிவிளக்கை மாட்டி, – மழைக்கண்ணார் பன்னு விசித்திரமாப் பாப்படுத்த பள்ளிமேல், |
15 |
2728 | துன்னிய சாலேகம் சூழ்கதவம் தாள்திறப்ப, அன்னம் உழக்க நெறிந்துக்க வாள்நீலச், சின்ன நறுந்தாது சூடி, – μர் மந்தாரம் துன்னும் நறுமலரால் தோள்கொட்டி, கற்பகத்தின் |
16 |
2729 | மன்னும் மலர்வாய் மணிவண்டு பின்தொடர இன்னிளம்பூந் தென்றல் புகுந்து,ஈங்க் கிளைமுலைமேல் நன்னருஞ் சந்தனச் சேறுலர்த்த, – தாங்கருஞ்சீர் மின்னிடைமேல் கைவைத் திருந்தேந் திளைமுலைமேல், |
17 |
2730 | பொன்னரும் பாரம் புலம்ப, – அகங்குழைந்தாங் கின்ன வுருவின் இமையாத் தடங்கண்ணார், அன்னவர்த்தம் மானோக்கம் உண்டாங் கணிமுறுவல், இன்னமுதம் மாந்தி யிருப்பர், – இதுவன்றே |
18 |
2731 | அன்ன அறத்தின் பயனாவது?, ஒண்பொருளும் அன்ன திறத்ததே ஆதலால், – காமத்தின் மன்னும் வழிமுறையே நிற்றும்நாம் மானோக்கின் அன்ன நடையார் அலரேச ஆடவர்மேல், |
19 |
2732 | மன்னும் மடலூரார் என்பதோர் வாசகமும், தென்னுறையில் கேட்டறிவ துண்டு, – அதனை யாம்தெளியோம், மன்னும் வடநெறியே வேண்டினோம்-வேண்டாதார் தென்னன் பொதியில் செழுஞ்சந் தனக்குழம்பின், |
20 |
2733 | அன்னதோர் தன்மை அறியாதார், – ஆயன்வேய் இன்னிசை μசைக் கிரங்காதார், மால்விடையின் மன்னும் மணிபுலம்ப வாடாதார், – பெண்ணைமேல் பின்னுமவ் வன்றில் பெடைவாய்ச் சிறுகுரலுக்கு, |
21 |
2734 | உன்னி யுடலுருகி நையாதார், – உம்பவர்வாய்த் துன்னி மதியுகுத்த தூநிலா நீணெருப்பில், தம்முடலம் வேவத் தளராதார், – காமவேள் மன்னும் சிலைவாய் மலர்வாளி கோத்தெய்ய, |
22 |
2735 | பொன்னொடு வீதி புகாதார், – தம் பூவணைமேல் சின்ன மலர்க்குழலும் அல்குலும் மென்முலையும், இன்னிள வாடை தடவத்தாம் கண்டுயிலும், பொன்னனையார் பின்னும் திருவுறுக-போர்வேந்தன் |
23 |
2736 | தன்னுடைய தாதை பணியால் அரசொழிந்து, பொன்னகரம் பின்னே புலம்ப வலங்கொண்டு, மன்னும் வளநாடு கைவிட்டு, – மாதிரங்கள் மின்னுருவில் விண்டோர் திரிந்து வெளிப்பட்டு |
24 |
2737 | கன்நிறைந்து தீய்ந்து கழையுடைத்து கால்சுழன்று, பின்னும் திரைவயிற்றுப் பேயே திரிந்துலவா, கொன்னவிலும் வெங்கானத் தூடு,-கொடுங்கதிரோன் துன்னு வெயில்வறுத்த வெம்பரமேல் பஞ்சடியால், |
25 |
2738 | மன்னன் இராமன்பின் வைதேவி என்றுரைக்கும், அன்ன நடைய அணங்கு நடந்திலளே?, பின்னும் கருநெடுங்கண் செவ்வய்ப் பிணைநோக்கின், மின்னனைய _ண்மருங்குல் வேகவதி என்றுரைக்கும் |
26 |
2739 | கன்னி,தன் இன்னுயிராம் காதலனைக் காணது, தன்னுடைய முந்தோன்றல் கொண்டேகத் தாஞ்சென்று,அங் கன்னவனை நோக்கா தழித்துரப்பி, – வாளமருள் கன்ன்வில்தோள் காளையைக் கைப்பிடித்து மீண்டும்போய், |
27 |
2740 | பொன்னவிலும் ஆகம் புணர்ந்திலளே?, பூங்கங்கை முன்னம் புனல்பரக்கும் நன்னாடன், மின்னாடும் கொன்னவிலும் நீள்வேல் குருக்கள் குலமதலை, தன்னிகரொன் றில்லாத வென்றித் தனஞ்சயனை, |
28 |
2741 | பன்னாக ராயன் மடப்பாவை, – பாவைதன் மன்னிய நாணச்சம் மடமென் றிவையகல, தன்னுடைய கொங்கை முகநெரிய, – தான் அவன்றன் பொன்வரை ஆகம் தழீஇக்கொண்டு போய்,தனது |
29 |
2742 | நன்னகரம் புக்கு நயந்தினிது வாழ்ந்ததுவும், முன்னுரையில் கேட்டறிவ தில்லையே?, – சூழ்கடலுள், பொன்னகரம் செற்ற புரந்தரனோ டேரொக்கும், மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள்வேந்தன், |
30 |
2743 | தன்னுடைய பாவை உலகத்துத் தன்னொக்கும், கன்னியரை யில்லாத காட்சியாள், – தன்னுடைய இன்னுயிர்த் தோழியால் எம்பெருமான் ஈன்துழாய், மன்னும் மணிவரைத்தோள் மாயவன், – பாவியேன் |
31 |
2744 | என்னை இதுவிளைத்த ஈரிரண்டு மால்வரைத்தோள், மன்னவன்றன் காதலனை மாயத்தால் கொண்டுபோய், கன்னிதன்பால் வைக்க மற்றவனோ டெத்தனையோ, மன்னிய பேரின்பம் எய்தினாள், – மற்றிவைதான் |
32 |
2745 | என்னாலே கேட்டீரே ஏழைகாள்? என்னுரைக்கேன், மன்னும் மலையரயன் பொற்பாவை, – வாணிலா மின்னும் மணிமுறுவல் செவ்வாய் உமையென்னும், அன்ன நடைய அணங்கு _டங்கிடைசேர், |
33 |
2746 | பொன்னுடம்பு வாடப் புலனைந்தும் நொந்தகல, தன்னுடைய கூழைச் சடாபாரம் தாந்தரித்து,ஆங் கன்ன அருந்தவத்தி னூடுபோய், – ஆயிரந்தோள் மன்னு கரதலங்கள் மட்டித்து, மாதிரங்கள |
34 |
2747 | மன்னு குலவரையும் மாருதமும் தாரகையும், தன்னி னுடனே சுழலச் சுழன்றாடும், கொன்னவிலும் மூவிலைவேல் கூத்தன் பொடியாடி, அன்னவன்றன் பொன்னகலம் சென்றாங் கணைந்திலளே?, |
35 |
2748 | பன்னி யுரைக்குங்கால் பாரதமாம்-பாவியேற்கு என்னுறுநோய் யானுரைப்பக் கேண்மின், இரும்பொழில்சூழ் மன்னு மறையோர் திருநறையூர் மாமலைபோல், பொன்னியலும் மாடக் கவாடம் கடந்துபுக்கு, |
36 |
2749 | என்னுடைய கண்களிப்ப நோக்கினேன், – நோக்குதலும் மன்னன் திருமர்பும் வாயும் அடியிணையும், பன்னு கரதலமும் கண்களும், – பங்கயத்தின் பொன்னியல் காடோர் மணிவரைமேல் பூத்ததுபோல், |
37 |
2750 | மின்னி ஒளிபடைப்ப வீழ்நாணும் தோள்வளையும், மன்னிய குண்டலமும் ஆரமும் நீண்முடியும், துன்னு வெயில்விரித்த சூளா மணியிமைப்ப, மன்னும் மரகதக் குன்றின் மருங்கே, – μர் |
38 |
2751 | இன்னிள வஞ்சிக் கொடியொன்று நின்றதுதான், அன்னமாய் மானாய் அணிமயிலாய் ஆங்கிடையே, மின்னாய் இளவேய் இரண்டாய் இணைச்செப்பாய், முன்னாய தொண்டையாய்க் கொண்டை குலமிரண்டாய், |
39 |
2752 | அன்ன திருவுருவம் நின்ற தறியாதே, என்னுடைய நெஞ்சும் அறிவும் இனவளையும், பொன்னியலும் மேகலையும் ஆங்கொழியப் போந்தேற்கு மன்னும் மறிகடலும் ஆர்க்கும், – மதியுகுத்த |
40 |
2753 | இன்னிலா விங்கதிரும் என்றனக்கே வெய்தாகும். தன்னுடைய தன்மை தவிரத்தான் எங்கொலோ, – தென்னன் பொதியில் செழுஞ்சந்தின் தாதளைந்து, மன்னிவ் வுலகை மனங்களிப்ப வந்தியங்கும், |
41 |
2754 | இன்னிளம்பூந் தென்றலும் வீசும் எரியெனக்கே, முன்னிய பெண்ணைமேல் முள்முளரிக் கூட்டகத்து, பின்னுமவ் வன்றில் பெடைவாய்ச் சிறுகுரலும், என்னுடைய நெஞ்சுக்கோ ரீர்வாளாம் எஞ்செய்கேன் |
42 |
2755 | கன்னவில்தோள் காமன் கருப்புச் சிலைவளைய, கொன்னவிலும் பூங்கணைகள் கோத்தெளப் பொதவணைந்து, தன்னுடைய தோள்கழிய வாங்கி, – தமியேன்மேல் என்னுடைய நெசே இலக்காக எய்கின்றான், |
43 |
2756 | பின்னிதனைக் காப்பீர்தாம் இல்லையே, – பேதையேன் கன்னவிலும் காட்டகத்தோர் வல்லிக் கடிமலரின், நன்னறு வசமற் றாரானும் எய்தாமே, மன்னும் வறுநிலத்து வாளாங் குகுத்ததுபோல், |
44 |
2757 | என்னுடைய பெண்மையும் என்நலனும் என்முலையும், மன்னு மலர்மங்கை மைந்தன், கணபுரத்துப் பொன்மலைபோல் நின்றவன்றன் பொன்னகலம் தோயாவேல் என்னிவைதான்? வாளா எனக்கே பொறையாகி, |
45 |
2758 | முன்னிருந்து மூக்கின்று,மூவாமைக் காப்பதோர் மன்னும் மருந்தறிவி ரில்லையே? – மல்விடையின் துன்னு பிடரெருத்துத் தூக்குண்டு, வன்தொடரால் கன்னியர் கண்மிளிரக் கட்டுண்டு, மாலைவாய் |
46 |
2759 | தன்னுடைய நாவொழியா தாடும் தனிமணியின், இன்னிசை μசையும் வந்தென் செவிதனக்கே, கொன்னவிலு மெகில் கொடிதாய் நொடிதாகும், என்னிதனைக் காக்குமா சொல்லீர்?, இதுவிளைத்த |
47 |
2760 | மன்னன் நறுந்துழாய் வாழ்மார்வன் – மாமதிகோள் முன்னம் விடுத்த முகில்வண்ணன் – காயாவின் சின்ன நறும்பூந் திகழ்வண்ணன் – வண்ணம்போல் அன்ன கடலை மலையிட் டணைகட்டி, |
48 |
2761 | மன்னன் இராவணனை மாமண்டு வெஞ்சமத்து, பொன்முடிகள் பத்தும் புரளச் சரந்துரந்து தென்னுலகம் ஏற்றுவித்த சேவகனை, – ஆயிரங்கண் மன்னவன் வானமும் வானவர்த்தம் பொன்னும்லகும், |
49 |
2762 | தன்னுடைய தோள்வலியால் கைக்கொண்ட தானவை பின்னோர் அரியுருவ மகி எரிவிழித்து, கொன்னவிலும் வெஞ்சமதுக் கொல்லாதே, – வல்லாளன் மன்னும் மணிக்குஞ்சி பற்றி வரவீர்த்து, |
50 |
2763 | தன்னுடைய தாள்மேல் கிடாத்தி, – அவனுடைய பொன்னகலம் வள்ளுகிரால் போழ்ந்து புகழ்படைத்த மின்னலங்கும் ஆழிப் படைத்தடக்கை வீரனை, மின்னிவ் வகலிடத்தை மாமுதுநீர் தான்விழுங்க, |
51 |
2764 | பின்னுமோர் ஏனமாய் புக்கு வளைமருப்பில், கொன்னவிலும் கூர்_திமேல் வைத்தெடுத்த கூத்தனை, மன்னும் வடமலையை மத்தாக மாசுணத்தால் மின்னும் இருசுடரும் விண்ணும் பிறங்கொளியும் |
52 |
2765 | தன்னின் உடனே சுழ்ல மலைதிரித்து,ஆங்கு இன்னமுதம் வானவரை யூட்டி, அவருடைய மன்னும் துயர்க்கடிந்த வள்ளலை, மற் றன்றியும், தன்னுருவ மாரும் அறியாமல் தானங்கோர், |
53 |
2766 | மன்னும் குறளுருவில் மாணியாய், – மாவலிதன் பொன்னியலும் வேள்விக்கண் புக்கிருந்து, போர்வேந்தர் மன்னை மனங்கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி, என்னுடைய பாதத்தால் யானளப்ப மூவடிமண், |
54 |
2767 | மன்னா. தரு கென்று வாய்திறப்ப, – மற்றவனும் என்னால் தரப்பட்ட தென்றலுமே, அத்துணைக்கண் மின்னார் மணிமுடிபோய் விண்தடவ, மேலெடுத்த பொன்னார் கனைகழற்கால் ஏழுலகும் போய்க்கடந்து,அங் |
55 |
2768 | கொன்னா அசுரர் துளங்கச் செலநீட்டி, மன்னிவ் வகலிடத்தை மாவலியை வஞ்சித்து, தன்னுலகம் ஆக்குவித்த தாளானை, – தாமரைமேல் மின்னிடையாள் நாயகனை விண்ணகருள் பொன்மலையை, |
56 |
2769 | பொன்னி மணிகொழிக்கும் பூங்குடந்தைப் போர்விடையை, தென்னன் குறுங்குடியுள் செம்பவளக் குன்றினை, மன்னிய தண்சேறை வள்ளலை, – மாமலர்மேல் அன்னம் துயிலும் அணிநீர் வயலாலி, |
57 |
2770 | என்னுடைய இன்னமுடகி எவ்வுள் பெருமலையை, கன்னி மதிள்சூழ் கணமங்கைக் கற்பகத்தை, மின்னை இருசுடரை வெள்ளறையுள் கல்லறைமேல் பொன்னை, மரகத்தைப் புட்குழியெம் போரேற்றை, |
58 |
2771 | மன்னும் அரங்கத்தெம் மாமணியை, – வல்லவாழ் பின்னை மணாளனை பேரில் பிறப்பிலியை, தொன்னீர்க் கடல்கிடந்த தோளா மணிச்சுடரை, என்மனத்து மாலை இடவெந்தை ஈசனை, |
59 |
2772 | மன்னும் கடன்மல்லை மாயவனை, – வானவர்தம் சென்னி மணிச்சுடரைத் தண்கால் திறல்வலியை, தன்னைப் பிறரறியாத் தத்துவத்தை முத்தினை, அன்னத்தை மீனை அரியை அருமறையை, |
60 |
2773 | முன்னிவ் வுலகுண்ட மூர்த்தியுயை, – கோவலூர் மன்னும் இடைகழியெம் மாயவனை, பேயலறப், பின்னும் முலையுண்ட பிள்ளையை, – அள்ளல்வாய் அன்னம் இரைதேர் அழுந்தூர் எழும்சுடரை, |
61 |
2774 | தெந்தில்லைச் சித்திர கூடத்தென் செல்வனை, – மின்னி மழைதவழும் வேங்கடத்தெம் வித்தகனை, மன்னனை மாலிருஞ் சோலை மணாளனை, கொன்னவிலும் ஆழிப் படையானை, – கோட்டியூர் |
62 |
2775 | அன்ன வுருவில் அரியை, திருமெய்யத்து இன்னமுத வெள்ளத்தை இந்தளூர் அந்தணனை, மன்னும் மதிட்கச்சி வேளுக்கை யாளரியை, மன்னிய பாடகத்தெம் மைந்தனை, – வெகாவில், |
63 |
2776 | உன்னிய யோகத் துறக்கத்தை, ஊரகத்துள் அன்னவனை அட்ட புயகரத்தெம் ஆனேற்றை, என்னை மனங்கவர்ந்த ஈசனை, – வானவர்த்தம் முன்னவனை மூழிக் களத்து விளக்கினை, |
64 |
2777 | அன்னவனை ஆதனூர் ஆண்டாளக்கும் ஐயனை, நென்னலை யின்றினை நாளையை, – நீர்மலைமேல் மன்னும் மறைநான்கும் ஆனானை, புல்லாணித் தென்னன் தமிழி வடமொழியை, நாங்கூரில் |
65 |
2778 | மன்னும் மணிமாடக் கோயில் மணாளனை, நன்னீர்த் தலைச்சங்க நான்மதியை, – நான்வணங்கும் கண்ணனைக் கண்ண புரத்தானை, தென்னறையூர் மன்னும் மணிமாடக் கோயில் மணாளனை, |
66 |
2779 | கன்னவில்தோள் காளையைக் கண்டாங்குக் கைதொழுது என்னிலைமை யெல்லாம் அறிவித்தால் எம்பெருமான், தன்னருளும் ஆகமும் தாரானேல், – தன்னைநான் மின்னிடையார் சேரியிலும் வேதியர்க்கள் வாழ்விடத்தும், |
67 |
2780 | தன்னடியார் முன்பும் தரணி முழுதாளும், கொன்னவிலும் வேல்வேந்தர் கூட்டத்தும் நாட்டகத்தும் தன்னிலைமை யெல்லாம் அறிவிப்பன், – தான்முனநாள் மின்னிடை யாய்ச்சியர்த்தம் சேரிக் களவிங்கண், |
68 |
2781 | துன்னு படல்திறந்து புக்கு, – தயிர்வேண்ணெய் தன்வயி றார விழுங்க, கொழுங்கயல்கண் மன்னும் மடவோர்கள் பற்றியோர் வான்கயிற்றால் பின்னும் உரலோடு கட்டுண்ட பெற்றிமையும், |
69 |
2782 | அன்னதோர் பூதமாய் ஆயர் விழவின்கண் துன்னு சகடத்தால் புக்க பெருஞ்சோற்றை, |
70 |
2783 | முன்னிருந்து முற்றத்தான் துற்றிய தெற்றெனவும் மன்னர் பெருஞ்சவையுள் வாழ்வேந்தர் தூதனாய், |
71 |
2784 | தன்னை யிகழ்ந்துரைப்பத் தான்முனநாள் சென்றதுவும், மன்னு பறைகறங்க மங்கையர்த்தம் கண்களிப்ப, |
72 |
2785 | கொன்னவிலும் கூத்தனாய்ப் பேர்த்தும் குடமாடி, என்னிவ னென்னப் படுகின்ற ஈடறவும், |
73 |
2786 | தென்னிலங்கை யாட்டி அரக்கர் குலப்பாவை, மன்னன் இராவணன்றன் நல்தங்கை, – வாளெயிற்றுத் |
74 |
2787 | துன்னு சுடுசினத்துச் சூர்ப்பணகா சோர்வெய்தி, பொன்னிறங் கொண்டு புலர்ந்தெழுந்த காமத்தால், |
75 |
2788 | தன்னை நயந்தாளைத் தான்முனிந்து மூக்கரிந்து, மன்னிய திண்ணெனவும்-வாய்த்த மலைபோலும், |
76 |
2789 | தன்னிகரொன் றில்லாத தாடகையை, மாமுனிக்காகத் தென்னுலகம் ஏற்றுவித்த திண்டிறலும்-மற்றிவைதான் |
77 |
2790 | உன்னி யுலவா வுலகறிய வூர்வன்நான், முன்னி முளைத்தெழுந் தோங்கி யொளிபரந்த, மன்னியம்பூம் பெண்ணை மடல். |
78 |
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்