முதல் திருவந்தாதி தனியன்
முதலியாண்டான் அருளிச்செய்தது
கைதைசேர் பூம்பொழில்சூழ் கச்சிநகர் வந்துதித்த, பொய்கைப் பிரான்கவிஞர் போரேறு, – வையத்து அடியவர் வாழ அருந்தமிழந் தாதி, படிவிளங்கச் செய்தான் பரிந்து |
ஸ்ரீ பொய்கையாழ்வார் அருளிச்செய்த முதல் திருவந்தாதி
2082 | வையம் தகளியா வார்கடலே நெய்யாக, வெய்ய கதிரோன் விளக்காக, – செய்ய சுடராழி யானடிக்கே சூட்டினேஞ்சொன் மாலை, இடராழி நீங்குகவே என்று. |
(2) 1 |
2083 | என்று கடல்கடைந்த தெவ்வுலகம் நீரேற்றது, ஒன்று மதனை யுணரேன் நான், – அன்று தடைத்துடைத்துக் கண்படுத்த ஆழி, இதுநீ படைத்திடந் துண்டுமிழ்ந்த பார். |
2 |
2084 | பாரளவு மோரடிவைத் தோரடியும் பாருடுத்த, நீரளவும் செல்ல நிமிர்ந்ததே – சூருருவில் பேயளவு கண்ட பெருமான். அறிகிலேன், நீயளவு கண்ட நெறி. |
3 |
2085 | நெறிவாசல் தானேயாய் நின்றானை, ஐந்து பொறிவாசல் போர்க்கதவம் சார்த்தி, – அறிவானாம் ஆலமர நீழல் அறம்நால்வர்க் கன்றுரைத்த, ஆலமமர் கண்டத் தரன். |
4 |
2086 | அரன்நா ரணன்நாமம் ஆன்விடைபுள்ளூர்த்தி, உரை_ல் மறையுறையும் கோயில், – வரைநீர் கருமம் அழிப்பளிப்புக் கையதுவேல் நேமி, உருவமெரி கார்மேனி ஒன்று. |
5 |
2087 | ஒன்றும் மறந்தறியேன் μதநீர் வண்ணனைநான், இன்று மறப்பனோ ஏழைகாள் – அன்று கருவரங்கத் துட்கிடந்து கைதொழுதேன் கண்டேன் திருவரங்க மேயான் திசை. |
6 |
2088 | திசையும் திசையுறு தெய்வமும், தெய்வத் திசையுங்க் கருமங்க ளெல்லாம் – அசைவில்சீர்க் கண்ணன் நெடுமால் கடல்கடைந்த, காரோத வண்ணன் படைத்த மயக்கு. |
7 |
2089 | மயங்க வலம்புரி வாய்வைத்து, வானத் தியங்கும் எறிகதிரோன் றன்னை, – முயங்கமருள் தோராழி யால் மறைத்த தென்நீ திருமாலே, போராழிக் கையால் பொருது? |
8 |
2090 | பொருகோட்டோர் ஏனமாய்ப் புக்கிடந்தாய்க்கு, அன்றுன் ஒருகோட்டின் மேல்கிடந்த தன்றெ, – விரிதோட்ட சேவடியை நீட்டித் திசைநடுங்க விண்துளங்க, மாவடிவின் நீயளந்த மண்? |
9 |
2091 | மண்ணும் மலையும் மறிகடலும் மாருதமும், விண்ணும் விழுங்கியது மெய்யென்பர், – எண்ணில் அலகளவு கண்டசீ ராழியாய்க்கு, அன்றிவ் வுலகளவு முண்டோவுன் வாய்? |
10 |
2092 | வாயவனை யல்லது வாழ்த்தாது, கையுலகம் தாயவனை யல்லது தாம்தொழா, – பேய்முலைநஞ் சூணாக வுண்டான் உருவொடு பேரல்லால், காணாகண் கேளா செவி. |
11 |
2093 | செவிவாய்கண் மூக்குடலென் றைம்புலனும், செந்தீ புவிகால்நீர் விண்பூதம் ஐந்தும், – அவியாத ஞானமும் வேள்வியும் நல்லறமும் என்பரே, ஏனமாய் நின்றாற் கியல்வு. |
12 |
2094 | இயல்வாக ஈன்துழா யானடிக்கே செல்ல, முயல்வார் இயலமரர் முன்னம், – இயல்வாக நீதியா லோதி நியமங்க ளால்பரவ, ஆதியாய் நின்றார் அவர். |
13 |
2095 | அவரவர் தாந்தம் அறிந்தவா றேத்தி, இவரிவ ரெம்பெருமா னென்று, – சுவர்மிசைச் சார்த்தியும் வைத்தும் தொழுவர், உலகளந்த மூர்த்தி யுருவே முதல். |
14 |
2096 | முதலாவார் மூவரே அம்மூவ ருள்ளும் முதலாவான் மூரிநீர் வண்ணன், – முதலாய நல்லான் அருளல்லால் நாமநீர் வையகத்து, பல்லார் அருளும் பழுது |
15 |
2097 | பழுதே பலபகலும் போயினவென்று, அஞ்சி அழுதேன் அரவணைமேல் கண்டு – தொழுதேன், கடலோதம் காலலைப்பக் கண்வளரும், செங்கண் அடலோத வண்ணர் அடி. |
16 |
2098 | அடியும் படிகடப்பத் தோள்திசைமேல் செல்ல, முடியும் விசும்பளந்த தென்பர், – வடியுகிரால் ஈர்ந்தான் இரணியன தாகம், எருஞ்சிறைப்புள் ஊர்ந்தா னுலகளந்த நான்று |
17 |
2099 | நான்ற முலைத்தலை நஞ்சுண்டு, உறிவெண்ணெய் தோன்றவுண் டான்வென்றி சூழ்களிற்றை – ஊன்றி, பொருதுடைவு கண்டானும் புள்ளின்வாய் கீண்டானும், மருதிடைபோய் மண்ணளந்த மால். |
18 |
2100 | மாலுங் கருங்கடலே.என்நோற்றாய், வையகமுண் டாலின் இலைத்துயின்ற ஆழியான், – கோலக் கருமேனிச் செங்கண்மால் கண்படையுள், என்றும் திருமேனி நீதீண்டப் பெற்று. |
19 |
2101 | பெற்றார் தளைகழலப் போர்ந்தோர் குறளுருவாய், செற்றார் படிகடந்த செங்கண்மால், – நற்றா மரைமலர்ச் சேவடியை வானவர்கை கூப்பி, நிரைமலர்கொண்டு ஏத்துவரால் நின்று. |
20 |
2102 | நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால், சென்று திசையளந்த செங்கண்மாற்கு, – என்றும் படையாழி புள்ளூர்த்தி பாம்பணையான் பாதம், அடையாழி நெஞ்சே. அறி. |
21 |
2103 | அறியு முலகெல்லாம் யானேயு மல்லேன், பொறிகொள் சிறையுவண மூர்ந்தாய், – வெறிகமழும் காம்பேய்மென் தோளி கடைவெண்ணெ யுண்டாயை, தாம்பேகொண் டார்த்த தழும்பு. |
22 |
2104 | தழும்பிருந்த சார்ங்கநாண் தோய்ந்த மங்கை, தழும்பிருந்த தாள்சகடம் சாடி, – தழும்பிருந்த பூங்கோதை யாள்வெருவப் பொன்பெயரோன் மார்ப்பிடந்த, வீங்கோத வண்ணர் விரல். |
23 |
2105 | விரலோடு வாய்தோய்ந்த வெண்ணெய்கண்டு, ஆய்ச்சி உரலோ டுறப்பிணித்த ஞான்று – குரலோவா தோங்கி நினைந்தயலார் காண இருந்திலையே?, μங்கோத வண்ணா. உரை. |
24 |
2106 | உரைமேற்கொண் டென்னுள்ளம் μவாது எப் போதும் வரைமேல் மரகதமே போல, – திரைமேல் கிடந்தானைக் கீண்டானை, கேழலாய்ப் பூமி இடந்தானை யேத்தி யெழும். |
25 |
2107 | எழுவார் விடைகொள்வார் ஈன்துழா யானை, வழுவா வகைநினைந்து வைகல் – தொழுவார், வினைச்சுடரை நந்துவிக்கும் வேங்கடமே, வானோர் மனச்சுடரைத் தூண்டும் மலை. |
26 |
2108 | மலையால் குடைகவித்து மாவாய் பிளந்து, சிலையால் மராமரமேழ் செற்று, – கொலையானைப் போர்க்கோ டொசித்தனவும் பூங்குருந்தம் சாய்த்தனவும் காக்கோடு பற்றியான் கை. |
27 |
2109 | கைய வலம்புரியும் நேமியும், கார்வண்ணத் தைய. மலர்மகள்நின் னாகத்தாள், – செய்ய மறையான்நின் உந்தியான் மாமதிள்மூன் றெய்த இறையான்நின் ஆகத் திறை. |
28 |
2110 | இறையும் நிலனும் இருவிசும்பும் காற்றும், அறைபுனலும் செந்தீயு மாவான், – பிறைமருப்பின் பைங்கண்மால் யானை படுதுயரம் காத்தளித்த, செங்கண்மால் கண்டாய் தெளி. |
29 |
2111 | தெளிதாக வுள்ளத்தைச் செந்நிறீஇ, ஞானத் தெளிதாக நன்குணர்வார் சிந்தை, – எளிதாகத் தாய்நாடு கன்றேபோல் தண்டுழா யானடிக்கே, போய்நாடிக் கொள்ளும் புரிந்து. |
30 |
2112 | புரியொருகை பற்றியோர் பொன்னாழி யேந்தி, அரியுருவும் ஆளுருவுமாகி, – எரியுருவ வண்ண்த்தான் மார்ப்பிடந்த மாலடியை அல்லால், மற் றெண்ண்த்தா னாமோ இமை? |
31 |
2113 | இமையாத கண்ணால் இருளகல நோக்கி, அமையாப் பொறிபுலன்க ளைந்தும் – நமையாமல், ஆகத் தணைப்பா ரணைவரே, ஆயிரவாய் நாகத் தணையான் நகர். |
32 |
2114 | நகர மருள்புரிந்து நான்முகற்கு, பூமேல் பகர மறைபயந்த பண்பன், – பெயரினையே புந்தியால் சிந்தியா தோதி உருவெண்ணும், அந்தியா லாம்பனங் கென்? |
33 |
2115 | என்னொருவர் மெய்யென்பர் ஏழுலகுண்டு ஆலிலையில் முன்னொருவ னாய முகில்வண்ணா, – நின்னுருகிப் பேய்த்தாய் முலைதந்தாள் பேர்ந்திலளால், பேரமர்க்கண் ஆய்த்தாய் முலைதந்த ஆறு? |
34 |
2116 | ஆறிய அன்பில் அடியார்தம் ஆர்வத்தால், கூறிய குற்றமாக் கொள்ளல்நீ – தேறி, நெடியோய். அடியடைதற் கன்றே,ஈ ரைந்து முடியான் படைத்த முரண்? |
35 |
2117 | முரணை வலிதொலைதற் காமன்றே, முன்னம் தரணி தனதாகத் தானே – இரணியனைப் புண்நிரந்த வள்ளுகிரால் பொன்னாழிக் கையால்,நீ மண்ணிரந்து கொண்ட வகை? |
36 |
2118 | வகையறு _ண்கேள்வி வாய்வார்கள், நாளும் புகைவிளக்கும் பூம்புனலும் ஏந்தி, – திசைதிசையின் வேதியர்கள் சென்றிறைஞ்சும் வேங்கடமே, வெண்சங்கம் ஊதியவாய் மாலுகந்த வூர். |
37 |
2119 | ஊரும் வரியரவம் ஒண்குறவர் மால்யானை, பேர எறிந்த பெருமணியை, – காருடைய மின்னென்று புற்றடையும் வேங்கடமே, மேலசுரர் என்னென்ற மால திடம். |
38 |
2120 | இடந்தது பூமி எடுத்தது குன்றம், கடந்தது கஞ்சனைமுன் அஞ்ச, – கிடந்ததுவும் நீரோத மாகடலே நின்றதுவும் வேங்கடமே, பேரோத வண்ணர் பெரிது. |
39 |
2121 | பெருவில் பகழிக் குறவர்கைச் செந்தீ வெருவிப் புனம்துறந்த வேழம், – இருவிசும்பில் மீன்வீழக் கண்டஞ்சும் வேங்கடமே, மேலசுரர் கோன்வீழ கண்டுகந்தான் குன்று. |
40 |
2122 | குன்றனைய குற்றஞ் செயினும் குணங்கொள்ளும் இன்று முதலாக என்னெஞ்சே, – என்றும் புறனுரையே யாயினும் பொன்னாழிக் கையான் திறனுரையே சிந்தித் திரு |
41 |
2123 | திருமகளும் மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால் திருமகட்கே தீர்ந்தவா றென்கொல், – திருமகள்மேல் பாலோதம் சிந்தப் படநா கணைக்கிடந்த, மாலோத வண்ணர் மனம்? |
42 |
2124 | மனமாசு தீரு மறுவினையும் சார, தனமாய தானேகை கூடும், – புனமேய பூந்துழா யானடிக்கே போதொடு நீரேந்தி, தாம்தொழா நிற்பார் தமர். |
43 |
2125 | தமருகந்த தெவ்வுருவம் அவ்வுருவம் தானே, தமருகந்த தெப்பேர்மற் றப்பேர், – தமருகந்து எவ்வண்ணம் சிந்தித் திமையா திருப்பரே, அவ்வண்ணம் அழியா னாம். |
44 |
2126 | ஆமே யமரர்க் கறிய? அதுநிற்க, நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே, – பூமேய மாதவத்தோன் தாள்பணிந்த வாளரக்கன் நீண்முடியை, பாதமத்தா லேண்ணினான் பண்பு. |
45 |
2127 | பண்புரிந்த நான்மறையோன் சென்னிப் பலியேற்ற, வெண்புரி_ல் மார்பன் வினைதீர, – புண்புரிந்த ஆகத்தான் தாள்பணிவார் கண்டீர், அமரர்தம் போகத்தால் பூமியாள் வார். |
46 |
2128 | வாரி சுருக்கி மதக்களி றைந்தினையும், சேரி திரியாமல் செந்நிறீஇ, – கூரிய மெய்ஞ்ஞானத் தாலுணர்வார் காண்பரே, மேலொருநாள் கைந்நாகம் காத்தான் கழல். |
47 |
2129 | கழலொன் றெடுத்தொருகை சுற்றியோர் கைமேல், சுழலும் சுராசுரர்க ளஞ்ச, – அழலும் செருவாழி யேந்தினான் சேவடிக்கே செல்ல, மருவாழி நெஞ்சே. மகிழ். |
48 |
2130 | மகிழல கொன்றேபோல் மாறும்பல் யாக்கை, நெகிழ முயல்கிற்பார்க் கல்லால், – முகில்விரிந்த சோதிபோல் தோன்றும் சுடர்ப்பொன் நெடுமுடி,எம் ஆதிகாண் பார்க்கு மரிது. |
49 |
2131 | அரியபுல னைந்தடக்கி யாய்மலர்கொண்டு, ஆர்வம் பரியப் பரிசினால் புல்கில், – பெரியனாய் மாற்றாது வீற்றிருந்த மாவலிபால், வண்கைநீர் ஏற்றானைக் காண்ப தெளிது. |
50 |
2132 | எளிதி லிரண்டையும் காண்பதற்கு, என்னுள்ளம் தெளியத் தெளிந்தொழியும் செவ்வே, – களியில் பொருந்தா தவனைப் பொரலுற்று, அரியாய் இருந்தான் திருநாமம் எண். |
51 |
2133 | எண்மர் பதினொருவர் ஈரறுவர் μரிருவர், வண்ண மலரேந்தி வைகலும், – நண்ணி ஒரு மாலை யால்பரவி μவாது,எப் போதும் திருமாலைக் கைதொழுவர் சென்று. |
52 |
2134 | சென்றால் குடையாம் இருந்தால்சிங் காசனமாம், நின்றால் மரவடியாம் நீள்கடலுள், – என்றும் புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும் அணையாம், திருமாற் கரவு. |
(2) 53 |
2135 | அரவம் அடல்வேழம் ஆன்குருந்தம் புள்வாய் குரவை குடம்முலைமல் குன்றம், – கரவின்றி விட்டிறுத்து மேய்த்தொசித்துக் கீண்டுகோத் தாடி,உண் டட்டெடுத்த செங்கண் அவன். |
54 |
2136 | அவன் தமர் எவ்வினைய ராகிலும், எங்கோன் அவன்தமரே யென்றொழிவ தல்லால், – நமன்தமரால் ஆராயப் பட்டறியார் கண்டீர், அரவணைமேல் பேராயற் காட்பட்டார் பேர். |
55 |
2137 | பேரே வரப்பிதற்றல் அல்லாலெம் பெம்மானை, ஆரே அறிவார்? அதுநிற்க, – நேரே கடிக்கமலத் துள்ளிருந்தும் காண்கிலான், கண்ணன் அடிக்கமலந் தன்னை அயன். |
56 |
2138 | அயல்நின்ற வல்வினையை அஞ்சினே னஞ்சி, உயநின் திருவடியே சேர்வான், – நயநின்ற நன்மாலை கொண்டு நமோநாரணா என்னும், சொன்மாலை கற்றேன் தொழுது. |
57 |
2139 | தொழுது மலர்க்கொண்டு தூபம்கை யேந்தி, எழுதும் எழுவாழி நெஞ்சே, – பழுதின்றி மந்திரங்கள் கற்பனவும் மாலடியே கைதொழுவான், அந்தரமொன் றில்லை அடை. |
58 |
2140 | அடைந்த அருவினையோ டல்லல்நோய் பாவம், மிடைந்தவை மீண்டொழிய வேண்டில், – _டங்கிடையை முன்னிலங்கை வைத்தான் முரணழிய, முன்னொருநாள் தன்வில் அங்கை வைத்தான் சரண். |
59 |
2141 | சரணா மறைபயந்த தாமரையா னோடு, மரணாய மன்னுயிர்கட் கெல்லாம், – அரணாய பேராழி கொண்ட பிரானன்றி மற்றறியாது, μராழி சூழ்ந்த வுலகு. |
60 |
2142 | உலகும் உலகிறந்த வூழியும், ஒண்கேழ் விலகு கருங்கடலும் வெற்பும், – உலகினில் செந்தீயும் மாருதமும் வானும், திருமால்தன் புந்தியி லாய புணர்ப்பு. |
61 |
2143 | புணர்மருதி னூடுபோய்ப் பூங்குருந்தம் சாய்த்து, மணமருவ மால் விடையேழ் செற்று, – கணம்வெருவ ஏழுலகும் தாயினவும் எண்டிசையும் போயினவும், சூழரவப் பொங்கணையான் தோள். |
62 |
2144 | தோளவனை யல்லால் தொழா, என் செவியிரண்டும், கேளவன தின்மொழியே கேட்டிருக்கும், – நாநாளும் கோணா கணையான் கூரைகழலே கூறுவதே, நாணாமை நள்ளேன் நயம். |
63 |
2145 | நயவேன் பிறர்ப்பொருளை நள்ளேன்கீ ழாரோடு, உயவேன் உயர்ந்தவரோ டல்லால், – வியவேன் திருமாலை யல்லது தெய்வமென் றேத்தேன், வருமாறென் நம்மேல் வினை? |
64 |
2146 | வினையா லடர்ப்படார் வெந்நரகில் சேரார், தினையேனும் தீக்கதிக்கட் செல்லார், – நினைதற் கரியானைச் சேயானை, ஆயிரம்பேர்ச் செங்கட் கரியானைக் கைதொழுதக் கால். |
65 |
2147 | காலை யெழுந்துலகம் கற்பனவும், கற்றுணர்ந்த மேலைத் தலைமறையோர் வேட்பனவும், – வேலைக்கண் μராழி யானடியே μதுவதும் μர்ப்பனவும், பேராழி கொண்டான் பெயர். |
66 |
2148 | பெயரும் கருங்கடலே நோக்குமாறு, ஒண்பூ உயரும் கதிரவனே நோக்கும், -உயிரும் தருமனையே நோக்குமொண் டாமரையாள் கேள்வன், ஒருவனையே நோக்கும் உணர்வு. |
67 |
2149 | உணர்வாரா ருன்பெருமை? யூழிதோ று-ழி, உணர்வாரா ருன்னுருவந் தன்னை?, உணர்வாரார் விண்ணகத்தாய். மண்ணகத்தாய்.வேங்கடத்தாய் நால்வேதப் பண்ணகத்தாய். நீகிடந்த பால்? |
68 |
2150 | பாலன் றனதுருவாய் ஏழுலகுண்டு, ஆலிலையின் மேலன்று நீவளர்ந்த மெய்யென்பர், – ஆலன்று வேலைநீ ருள்ளதோ விண்ணதோ மண்ணதோ? சோலைசூழ் குன்றெடுத்தாய் சொல்லு. |
69 |
2151 | சொல்லுந் தனையும் தொழுமின் விழுமுடம்பு, சொல்லுந் தனையும் திருமாலை, – நல்லிதழ்த் தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால், நாமத்தால் ஏத்திதிரேல் நன்று. |
70 |
2152 | நன்று பிணிமூப்புக் கையகற்றி நான்கூழி, நின்று நிலமுழுதும் ஆண்டாலும், என்றும் விடலாழி நெஞ்சமே. வேண்டினேன் கண்டாய், அடலாழி கொண்டான்மாட் டன்பு. |
71 |
2153 | அன்பாழி யானை யணுகென்னும், நாஅவன்றன் பண்பாழித் தோள்பரவி யேத்தென்னும், முன்பூழி காணானைக் காணென்னும் கண்செவி கேளென்னும் பூணாரம் பூண்டான் புகழ். |
72 |
2154 | புகழ்வாய் பழிப்பாய்நீ பூந்துழா யானை, இகழ்வாய் கருதுவாய் நெஞ்சே, – திகழ்நீர்க் கடலும் மலையும் இருவிசும்பும் காற்றும், உடலும் உயிருமேற்றான். |
73 |
2155 | ஏற்றான் புள்ளூர்த்தான் எயிலெரித்தான் மார்விடந்தான் நீற்றான் நிழல்மணி வண்ணத்தான், – கூற்றொருபால் மங்கையான் பூமகளான் வார்சடையான், நீண்முடியான் கங்கையான் நீள்கழலான் காப்பு. |
74 |
2156 | காப்புன்னை யுன்னக் கழியும் அருவினைகள், ஆப்புன்னை யுன்ன அவிழ்ந்தொழியும் – மூப்புன்னைச் சிந்திப்பார்க் கில்லை திருமாலே, நின்னடியை வந்திப்பார் காண்பர் வழி. |
75 |
2157 | வழிநின்று நின்னைத் தொழுவார், வழுவா மொழிநின்ற மூர்த்தியரே யாவர், – பழுதொன்றும் வாராத வண்ணமே விண்கொடுக்கும், மண்ணளந்த சீரான் திருவேங்கடம். |
76 |
2158 | வேங்கடமும் விண்ணகரும் வெகாவும், அகாத பூங்கிடங்கில் நீள்கோவல் பொன்னகரும், – நான்கிடத்தும் நின்றா னிருந்தான் கிடந்தான் நடந்தானே, என்றால் கெடுமாம் இடர். |
77 |
2159 | இடரார் படுவார்? எழுநெஞ்சே, வேழம் தொடர்வான் கொடுமுதலை சூழ்ந்த, – படமுடை பைந்நாகப் பள்ளியான் பாதமே கைதொழுதும், கொய்ந்நாகப் பூம்போது கொண்டு. |
78 |
2160 | கொண்டானை யல்லால் கொடுத்தாரை யார்பழிப்பார், மண்தா எனவிரந்து மாவலியை, ஒண்தாரை நீரங்கை தோய நிமிர்ந்திலையே, நீள்விசும்பில் ஆரங்கை தோய அடுத்து? |
79 |
2161 | அடுத்த கடும்பகைஞர்க் காற்றேனென் றோடி, படுத்த பொரும்பாழி சூழ்ந்த – விடத்தரவை, வல்லாளன் கைக்கொடுத்த மாமேனி மாயவனுக்கு, அல்லாதும் ஆவரோ ஆள்? |
80 |
2162 | ஆளமர் வென்றி யடுகளத்துள் அஞ்ஞான்று, வாளமர் வேண்டி வரைநட்டு, – நீளரவைச் சுற்றிக் கடைந்தான் பெயரன்றே, தொன்னரகைப் பற்றிக் கடத்தும் படை? |
81 |
2163 | படையாரும் வாட்கண்ணார் பாரசிநாள், பைம்பூந் தொடையலோ டேந்திய தூபம், – இடையிடையின் மீன்மாய மாசூணும் வேங்கடமே, மேலொருநாள் மான்மாய எய்தான் வரை. |
82 |
2164 | வரைகுடைதோல் காம்பாக ஆநிரைகாத்து, ஆயர் நிரைவிடையேழ் செற்றவா றென்னே, – உரவுடைய நீராழி யுள்கிடந்து நேரா நிசாசரர்மேல், பேராழி கொண்ட பிரான்? |
83 |
2165 | பிரான். உன் பெருமை பிறரா ரறிவார்?, உராஅ யுலகளந்த ஞான்று, – வராகத் தெயிற்றளவு போதாவா றென்கொலோ, எந்தை அடிக்களவு போந்த படி? |
84 |
2166 | படிகண் டறிதியே பாம்பணையி னான்,புட் கொடிகண் டறிதியே?கூறாய், – வடிவில் பொறியைந்து முள்ளடக்கிப் போதொடுநீ ரேந்தி, நெறிநின்ற நெஞ்சமே. நீ. |
85 |
2167 | நீயும் திருமகளும் நின்றாயால், குன்றெடுத்துப் பாயும் பனிமறைத்த பண்பாளா, – வாயில் கடைகழியா வுள்புகாக் காமர்பூங் கோவல் இடைகழியே பற்றி யினி. |
86 |
2168 | இனியார் புகுவா ரெழுநரக வாசல்? முனியாது மூரித்தாள் கோமின், – கனிசாயக் கன்றெறிந்த தோளான் கனைகழலே காண்பதற்கு, நன்கறிந்த நாவலம்சூழ் நாடு. |
87 |
2169 | நாடிலும் நின்னடியே நாடுவன, நாடோறும் பாடிலும் நின்புகழே பாடுவன், சூடிலும் பொன்னாழி யேந்தினான் பொன்னடியே சூடுவேற்கு, என்னாகி லென்னே எனக்கு? |
88 |
2170 | எனக்காவா ராரொருவரே, எம்பெருமான் தனக்காவான் தானேமற் றல்லால், – புனக்காயாம் பூமேனி காணப் பொதியவிழும் பூவைப்பூ, மாமேனி காட்டும் வரம். |
89 |
2171 | வரத்தால் வலிநினைந்து மாதவ.நின் பாதம், சிரத்தால் வணங்கானா மென்றே, – உரத்தினால் ஈரரியாய் நேர்வலியோ னாய இரணியனை, μரரியாய் நீயிடந்த தூன்? |
90 |
2172 | ஊனக் குரம்பையி னுள்புக் கிருள்நீக்கி, ஞானச் சுடர்கொளீஇ நாடோறும், – ஏனத் துருவா யுலகிடந்த வூழியான் பாதம், மருவாதார்க் குண்டாமோ வான்? |
91 |
2173 | வானாகித் தீயாய் மறிகடலாய் மாருதமாய் தேனாகிப் பாலாம் திருமாலே, – ஆனாய்ச்சி வெண்ணெய் விழுங்க நிறையுமே, முன்னொருநாள் மண்ணை உமிழ்ந்த வயிறு? |
92 |
2174 | வயிறழல வாளுருவி வந்தானை யஞ்ச எயிறிலக வாய்மடுத்த தென்நீ, – பொறியுகிரால் பூவடியை யீடழித்த பொன்னாழிக் கையா,நின் சேவடிமே லீடழியச் செற்று? |
93 |
2175 | செற்றெழுந்து தீவிழித்துச் சென்றவிந்த ஏழுலகும், மற்றிவையா வென்றுவா யங்காந்து, முற்றும் மறையவற்குக் காட்டிய மாயவனை யல்லால், இறையேனும் ஏத்தாதென் நா. |
94 |
2176 | நாவாயி லுண்டே நமோநார ணா என்று, μவா துரைக்கு முரையுண்டே, – மூவாத மாக்கதிக்கண் செல்லும் வகையுண்டே, என்னொருவர் தீக்கதிக்கட் செல்லும் திறம்? |
95 |
2177 | திறம்பாதென் னெஞ்சமே. செங்கண்மால் கண்டாய், அறம்பாவ மென்றிரண்டு மாவான், புறந்தானிம் மண்தான் மறிகடல்தான் மாருதந்தான், வான்தானே, கண்டாய் கடைக்கட் பிடி. |
96 |
2178 | பிடிசேர் களிறளித்த பேராளா, உன்றன் அடிசேர்ந் தருள்பெற்றாள் அன்றே, – பொடிசேர் அனல்கங்கை யேற்றான் அவிர்சடைமேல் பாய்ந்த, புனல்கங்கை யென்னும்பேர்ப் பொன்? |
97 |
2179 | பொன்திகழ மேனிப் புரிசடையம் புண்ணியனும், நின்றுலகம் தாய நெடுமாலும், – என்றும் இருவரங்கத் தால்திரிவ ரேலும், ஒருவன் ஒருவனங்கத் தென்று முளன். |
98 |
2180 | உளன்கண்டாய் நன்னெஞ்சே. உத்தமன் என்றும் உளன்கண்டாய், உள்ளூவா ருள்ளத் – துளன்கண்டாய், வெள்ளத்தி னுள்ளானும் வேங்கடத்து மேயானும், உள்ளத்தி னுள்ளனென் றோர். |
99 |
2181 | μரடியும் சாடுதைத்த ஒண்மலர்ச் சேவடியும், ஈரடியும் காணலா மென்னெஞ்சே.- μரடியில் தாயவனைக் கேசவனைத் தண்டுழாய் மாலைசேர், மாயவனை யேமனத்து வை. |
(2) 100 |
பொய்கையாழ்வார் திருவடிகளே சரணம்