ஸ்ரீமத் பகவத்கீதை – முதல் அத்தியாயம்


அத்தியாயம் ஒன்று: குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் படைகளை கவனித்தல்

1.1

த்ருத்ராஷ்ர உவாச

தர்ம க்ஷேத்ரே குரு க்ஷேத்ரே

சமவேதா யுயுத்ஸவ:

மாமகா: பாண்டவஸ் சைவ

கிமகுர்வத சஞ்ஜய

 

திருதராஷ்ட்டிரர் கூறினார்: புண்ணிய யாத்திரைத் தலமான குருக்ஷேத்திரத்தில் போர்ப் புரிய விருப்பம் கொண்டு ஒன்று கூடிய பிறகு, என் மகன்களும், பாண்டுவின் புதல்வரும் என்ன செய்தனர் சஞ்ஜயனே?

1.2

ஸஞ்ஜய உவாச

த்ருஷ்ட்வா து பாண்டவானீகம்

வ்யுடம் துர்யோதனஸ் ததா

ஆசார்யம் உபஸங்கம்ய

ராஜா வசனம் அப்ரவீத்

 

சஞ்ஜயன் கூறினான்: மன்னரே, பாண்டுவின் மகன்களால் அணிவகுக்கப்பட்ட படையை மேற்பார்வையிட்ட பிறகு, மன்னன் துரியோதனன் தன் ஆச்சாரியரை அணுகிப் பின்வருமாறு கூறினான்.

1.3

பஷ்யைதாம் பாண்டு-புத்ராணாம்

ஆசார்ய மஹதீம் சமூம்

வ்யூடாம் த்ருபத-புத்ரேண

தவ ஷிஷ்யேண தீமதா

 

ஆச்சாரியரே, துருபத குமாரனான உங்கள் புத்திசாலி சீடனால் நேர்த்தியாக அணிவகுக்கப்பட்ட, பாண்டு புத்திரர்களின் மாபெரும் படையைப் பாருங்கள்.

1.4

அத்ர ஷூரா மஹேஷ் வாஸா

பீமார்ஜுன-ஸமா யுதி

யுயுதானோ விராடஷ் ச

த்ருபதஷ் ச மஹா-ரத:

 

அந்தச் சேனையில் பீமனுக்கு அர்ஜுனனுக்கும் சமமான வில்லாளிகள் பலரும் இருக்கின்றனர். யுயுதானன், விராடன், துருபதன் போன்ற மாபெரும் வீரர்கள் உள்ளனர்.

1.5

த்ருஷ்டகேதுஷ் சேகிதான:

காஷிராஜஷ் ச வீர்யவான்

புருஜித் குந்திபோஜஷ் ச

ஷைப்யஷ் ச நர-புங்கவ:

 

மேலும், திருஷ்டகேது, சேகிதானன், காசிராஜன், புருஜித், குந்திபோஜன், ஷைப்யன் போன்ற சிறந்த பலமிக்க போர் வீரர்கள் பலரும் உள்ளனர்.

1.6

யுதாமன்யுஷ் ச விக்ராந்த

உத்தமௌஜாஷ் ச வீர்யவான்

ஸெளபத்ரோ த்ரௌபதேயாஷ் ச

ஸர்வ ஏவ மஹா-ரதா:

 

வீரனான யுதாமன்யு, பலமுள்ள உத்தமௌஜன், சுபத்ரையின் புதல்வன் மற்றும் திரௌபதியின் குமாரர்களும் இருக்கின்றனர். இப்படை வீரர்கள் அனைவரும் மாபெரும் ரத வீரர்கள்.

1.7

அஸ்மாகம் து விஷிஷ்டாயே

தான் நிபோத த்விஜோத்தம

நாயகா மம ஸைன்யஸ்ய

ஸம்க்ஞார்தம் தான் ப்ரவீமி தே

 

ஆனால், பிராமணரில் சிறந்தவரே, தாங்கள் தெரிந்து கொள்வதற்காக எனது சேனையை வழிநடத்தும் தகுதி வாய்ந்த நாயகர்களைப் பற்றியும் தங்களிடம் கூறுகிறேன்.

1.8

பவான் பீஷ்மஷ் ச கர்ணஷ் ச

க்ருபஷ் ச ஸமிதிம் ஜய:

அஷ்வத்தாமா விகர்ணஷ் ச

ஸெளமதத்திஸ் ததைவ ச

 

மரியாதைக்குரிய தாங்கள், பீஷ்மர், கர்ணன், கிருபாசாரியர், அஷ்வத்தாமன், விகர்ணன் மற்றும் சோமதத்தனின் குமாரனான பூரிஷ்ரவன் முதலியோர், போரில் எப்போதும் வெற்றி காண்பவர்களே.

1.9

அன்யே ச பஹவ: ஷுரா

மத் அர்தே த்யக்த-ஜீவிதா:

நானா-ஷஸ்த்ர-ப்ரஹரணா:

ஸர்வே யுத்த-விஷா ரதா:

 

எனக்காக உயிரையும் கொடுக்கக்கூடிய எண்ணற்ற மாவீரர்கள் பலரும் உள்ளனர். யுத்ததில் வல்லுநர்களான அவர்கள் அனைவரும் பலவிதமான ஆயுதங்களுடன் தயாராக உள்ளனர்.

1.10

அபர்யாப்தம் தத் அஸ்மாகம்

பலம் பீஷ்மாபிரக்ஷிதம்

பர்யாப்தம் த்விதம் ஏதேஷாம்

பலம் பீமாபிரக்ஷிதம்

 

பாட்டனார் பீஷ்மரால் சிறப்பாக பாதுகாக்கப்பட்ட நமது பலம் அளக்கவியலாதது. ஆனால் பீமனால் கவனமாக பாதுகாக்கப்பட்ட பாண்டவ சேனையோ அளவிடக்கூடியதே.

1.11

அயனேஷு ச ஸர்வேஷு

யதா-பாகம் அவஸ்திதா:

பீஷ்மம் ஏவாபிரக்ஷந்து

பவந்த: ஸர்வ ஏவ ஹி

 

படை அணிவகுப்பின் நுழைவாயில் தத்தமது போர் முனைகளில் இருந்தபடியே நீங்கள் அனைவரும் பாட்டனார் பீஷ்மருக்கு முழுப் பாதுகாப்பளிக்க வேண்டும்.

1.12

தஸ்ய ஸஞ்ஜனயன் ஹர்ஷம்

குரு-வ்ருத்த: பிதாமஹ:

ஸிம்ஹ-நாதம் வினத் யோச்சை:

ஷ ங்கம் தத்மௌ ப்ரதாபவான்

 

பின்னர், குரு வம்சத்தின் மாபெரும் வீரரும் பாட்டனாருமான பீஷ்மர், தனது சங்கை சிங்க கர்ஜனை போன்று உரக்க ஊதி துரியோதனனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தார்.

1.13

தத: ஷங்காஷ் ச பேர்யஷ் ச

பணவானக-கோமுகா:

ஸஹஸைவாப்யஹன்யந்த

ஸ ஷப்தஸ் துமுலோ (அ)பவத்

 

அதன்பின், சங்குகள், மத்தளங்கள், முரசுகள், கொம்புகள், தாறைகள் என அனைத்தும் ஒரே சமயத்தில் முழங்க, அப்பேரொலி மிகவும் பயங்கரமாக இருந்தது.

1.14

தத: ஷ்வேதைர் ஹயைர் யுக்தே

மஹதி ஸ்யந்தனே ஸ்திதௌ

மாதவ: பாண்டவஷ் சைவ

திவ்யௌ ஷங்கௌ ப்ரதத்மது:

 

மறுதரப்பில், வெள்ளைக் குதிரைகள் பூட்டிய மிகச்சிறந்த ரதத்தில் அமர்ந்திருந்த பகவான் கிருஷ்ணரும் அர்ஜுனனும் தங்களது தெய்வீக சங்குகளை முழங்கினர்.

1.15

பாஞ்சஜன்யம் ஹ்ருஷீகேஷோ

தேவதத்தம் தனஞ்ஜய:

பௌண்ட்ரம் தத்மௌ மஹா-ஷங்கம்

பீம-கர்மா வ்ருகோதர:

 

பகவான் கிருஷ்ணர் பாஞ்சஜன்யம் எனும் தனது சங்கை முழங்கினார்; அர்ஜுனன் தேவதத்தம் எனும் சங்கையும், பெருந்தீனிக்காரனும் வீர தீர சாகசங்களைப் புரிபவனுமான பீமன் பௌண்ட்ரம் எனும் அச்சமூட்டும் சங்கையும் முழங்கினர்.

1.16-18

அனந்தவிஜயம் ராஜா

குந்தீ-புத்ரோ யுதிஷ்டிர:

நகுல: ஸஹதேவஷ் ச

ஸுகோஷ-மணிபுஷ்பகௌ

காஷ்யஷ் ச பரமேஷ் வாஸ:

ஷிகண்டீ ச மஹா-ரத:

த்ருஷ்டத்யும்னோ விராடஷ் ச

ஸாத்யகிஷ் சாபராஜித:

த்ருபதோ த்ரௌபதேயாஷ் ச

ஸர்வஷ: ப்ருதி வீ- பதே

ஸெளபத்ரஷ் ச மஹா-பாஹு:

ஷங்கான் தத்மு: ப்ருதக் ப்ருதக்

 

குந்தியின் புதல்வரான மன்னர் யுதிஷ்டிரர் அனந்த விஜயம் எனும் சங்கையும், நகுலனும் சகாதேவனும் சுகோஷம், மணிபுஷ்பகம் எனும் சங்குகளையும் முழங்கினர். பெரும் வில்லாளியான காசிராஜன், பெரும் வீரரான சிகண்டி, திருஷ்டத்யும்னன், விராடன், வெல்லவியாத சாத்யகி, துருபதன், திரௌபதியின் புதல்வர்கள் மற்றும் மாவீரனான சுபத்ரையின் மகனைப் போன்ற பலரும் தத்தமது சங்குகளை முழ்கினார்கள், மன்னரே.

1.19

ஸ கோஷோ தார்தராஷ்ட்ராணாம்

ஹ்ருதயானி வ்யதாரயத்

நபஷ் ச ப்ருதிவீம் சைவ

துமுலோ (அ)ப்யனுநாதயன்

 

பல்வேறு சங்கொலிகளின் முழக்கம் பேரொலியாக எழுந்து பூமியும் வானமும் நடுங்குமாறு எதிரொலிக்க, திருதராஷ்டிரரின் மகன்களுடைய இதயங்கள் சிதறிப் போயின.

1.20

அத வ்யவஸ்திதான் த்ருஷ்ட்வா

தார்தராஷ்ட்ரான் கபி-த்வஜ:

ப்ரவ்ருத்தே ஷஸ்த்ர-ஸம்பாதே

தனுர் உத்யம்ய பாண்டவ:

ஹ்ருஷீகேஷம் ததா வாக்யம்

இதம் ஆஹ மஹீ-பதே

 

அச்சமயத்தில், அனுமானின் கொடியைத் தாங்கிய தேரில் அமர்ந்திருந்த பாண்டுவின் மகன் அர்ஜுனன், தனது வில்லை ஏந்தி அம்புகள் எய்யத் தயாரானான். மன்னரே அணிவகுக்கப்பட்ட படையில் திருதராஷ்டிரரின் மைந்தர்களைக் கண்டவுடன், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை அர்ஜுனன் பின்வருமாறு கூறினான்.

1.21-22

அர்ஜுன உவாச

ஸேனயோர் உபயோர் மத்யே

ரதம் ஸ்தாபயமே (அ)ச்யுத

யாவத் ஏதான் நிரீக்ஷே (அ)ஹம்

யோத்து காமான் அவஸ்தி தான்

கைர் மயா ஸஹ யோத்தவ்யம்

அஸ்மின் ரண-ஸமுத்யமே

 

அர்ஜுனன் கூறினான்: வீழ்ச்சியடையாதவரே, போர் புரியும் ஆவலுடன் இங்கே கூடியுள்ளவர்களில், எவர்களோடு நான் இந்த மாபெரும் போரில் ஈடுபட வேண்டும் என்பதைப் பார்க்கும்படி, தயவுசெய்து எனது ரதத்தை இரு சேனைகளுக்கு மத்தியில் நிறுத்தவும்.

1.23

யோத்ஸ்யமானான் அவேக்ஷே (அ)ஹம்

ய ஏதே (அ)த்ர ஸமாகதா:

தார்தராஷ்ட்ரஸ்ய துர்புத்தேர்

யுத்தே ப்ரிய-சிகீர்ஷவ:

 

கெட்ட புத்தியுடைய, திருதராஷ்டிரரின் மகனை மகிழ்விக்கும் விருப்பத்தோடு, இங்கு போர் புரிய வந்திருப்பவர்களை நான் பார்க்க வேண்டும்.

1.24

ஸஞ்ஜய உவாச

ஏவம் உக்தோ ஹ்ருஷீகேஷோ

குடாகேஷேன பாரத

ஸேனயோர் உபயோர் மத்யே

ஸ்தாபயித்வா ரதோத்தமம்

 

சஞ்ஜயன் கூறினான்: பரத குலத்தவரே, அர்ஜுனன் இவ்வாறு கூறியவுடன், பகவான் கிருஷ்ணர் அவனது உத்தம ரதத்தை இருதரப்பு சேனைகளுக்கு மத்தியில் கொண்டு நிறுத்தினார்.

1.25

பீஷ்ம-த்ரோண-ப்ரமுகத:

ஸர்வேஷாம் ச மஹீ-க்ஷிதாம்

உவாச பார்த பஷ்யைதான்

ஸமவேதான் குரூன் இதி

 

பீஷ்மர், துரோணர், மற்றும் உலகத் தலைவர்களின் முன்னிலையில் “பார்த்தா, இங்கு கூடியிருக்கும் குரு வம்சத்தினரைப் பார்” என்று பகவான் கூறினார்.

1.26

தத்ராபஷ்யத் ஸ்திதான் பார்த:

பித்ரூன் அத பிதாமஹான்

ஆசார்யான் மாதுலான் ப்ராத்ரூன்

புத்ரான் பௌத்ரான் ஸகீம்ஸ்ததா

ஷ்வஷுரான் ஸுஹ்ருதஷ் சைவ

ஸேனயோர் உபயோர் அபி

 

போர்க்களத்தில் இருதரப்புச் சேனைகளின் நடுவே நின்றபடி, தந்தைமார்கள், பாட்டனார்கள், ஆச்சாரியர்கள், மாமன்கள், சகோதரர்கள், மகன்கள், பேரன்கள், நண்பர்கள், மாமனார்கள், மற்றும் பல நலன் விரும்பிகளும் கூடியிருப்பதை அர்ஜுனனால் பார்க்க முடிந்தது.

1.27

தான் ஸமீக்ஷ்ய ஸ கௌந்தேய:

ஸர்வான் பந்தூன் அவஸ்திதான்

க்ருபயா பரயாவிஷ்டோ

விஷீதன் நிதம் அப்ரவீத்

 

குந்தி மகனான அர்ஜுனன் பலதரப்பட்ட நண்பர்களையும் உறவினர்களையும் பார்வையிட்டபோது, கருணையில் மூழ்கி இவ்வாறு கூறினான்.

1.28

அர்ஜுன உவாச

த்ருஷ்ட்வேமம் ஸ்வ-ஜனம் க்ருஷ்ண

யுயுத்ஸும் ஸமுபஸ்திதம்

ஸீதந்தி மம காத்ராணி

முகம் ச பரிஷுஷ்யதி

 

அர்ஜுனன் கூறினான்: எனதன்பு கிருஷ்ணரே, போரிடும் உணர்வுடன் என் முன் கூடியுள்ள எனது நண்பர்களையும் உறவினர்களையும் கண்டு என் உடல் அங்கங்கள் நடுங்கி, வாய் உலர்வதை உணர்கிறேன்.

1.29

வேபதுஷ் ச ஷரீரே மே

ரோமஹர்ஷஷ் ச ஜாயதே

காண்டீவம் ஸ்ரம்ஸதே ஹஸ்தாத்

த்வக் சைவ பரிதஹ்யதே

 

என் உடல் முழுவதும் நடுங்குகின்றது, மயிர்க்கூச்செறி கின்றது, என் வில்லான காண்டீபம் கையிலிருந்து நழுவுகின்றது, தோல் எரிகின்றது.

1.30

ந ச ஷக்னோம்-யவஸ்தாதும்

ப்ரமதீவ ச மே மன:

நிமித்தானி ச பஷ்யாமி

விபரீதானி கேஷவ

 

இனியும் என்னால் இங்கு நிற்க முடியாது. என் மனம் குழம்பி என்னையே மறக்கின்றேன். கேசி என்ற அரக்கனை அழித்தவரே, கிருஷ்ணரே, கெட்ட சகுனங்களை நான் காண்கிறேன்.

1.31

ந ச ஷ்ரேயோ (அ)னுபஷ்யாமி

ஹத்வா ஸ்வ-ஜனம் ஆஹவே

ந காங்க்ஷே விஜயம் க்ருஷ்ண

ந ச ராஜ்யம் ஸுகானி ச

 

சொந்த உறவினரை இப்போரில் கொல்வதால் என்ன நன்மை வருமென்பதை என்னால் காண முடியவில்லை. எனதன்பு கிருஷ்ணரே, இதில் பெறக்கூடிய வெற்றியையோ இராஜ்யத்தையோ இன்பத்தையோ நான் விரும்பவில்லை.

1.32-35

கிம் நோ ராஜ்யேன கோவிந்த

கிம் போகைர் ஜீவிதேன வா

ஏஷாம் அர்தே காங்க்ஷிதம் நோ

ராஜ்யம் போகா: ஸுகானி ச

த இமே (அ)வஸ்திதா யுத்தே

ப்ராணாம்ஸ் த்யக்த்வா தனானி ச

ஆசார்யா: பிதர: புத்ராஸ்

ததைவ ச பிதாமஹா:

மாதுலா: ஷ்வஷுரா: பௌத்ரா:

ஷ்யாலா: ஸம்பந்தினஸ் ததா

ஏதான் ந ஹந்தும் இச்சாமி

க்னதோ (அ)பி மதுஸூதன

அபி த்ரைலோக்ய-ராஜ்யஸ்ய

ஹேதோ: கிம் நு மஹீ-க்ருதே

நிஹத்ய தார்தாராஷ்ட்ரான் ந:

கா ப்ரீதி: ஸ்யாஜ் ஜனார்தன

 

கோவிந்தனே, ஆட்சி, மகிழ்ச்சி மற்றும் வாழ்க்கையையே கூட யாருக்காக நாம் விரும்புகிறோமோ, அவர்களே இப்போர்க்களத்தில் அணிவகுத்திருக்க, அவற்றை அடைவதால் என்ன பலன் வரப் போகின்றது? மதுசூதனரே, ஆச்சாரியர்கள், தந்தையர், பிள்ளைகள், பாட்டனார்கள், மாமன்கள், மாமனார்கள், பேரன்கள், மைத்துனர்கள், மற்றும் இதர உறவினர்கள் அனைவரும் தங்கள் வாழ்வையும் செல்வத்தையும் இழக்கத் தயாராக என்முன் நின்றிருக்க, அவர்கள் என்னைக் கொல்லலாம் என்ற பட்சத்திலும் நான் ஏன் அவர்களைக் கொல்ல விரும்ப வேண்டும்? உயிர்களையெல்லாம் காப்பவரே, இந்த பூமி ஒருபுறமிருக்கட்டும், மூவுலகம் கிடைப்பதாயினும், நான் இவர்களுடன் போர் செய்யத் தயாராக இல்லை. திருதராஷ்டிரரின் மகன்களைக் கொல்வதால் நாம் எவ்வித ஆனந்தத்தை அனுபவிக்கப் போகிறோம்?

1.36

பாபம் ஏவாஷ்ரயேத் அஸ்மான்

ஹத்வைதான் ஆததாயின:

தஸ்மான் நார்ஹா வயம் ஹந்தும்

தார்தராஷ்ட்ரான் ஸ-பாந்தவான்

ஸ்வ-ஜனம் ஹி கதம் ஹத்வா

ஸுகின: ஸ்யாம மாதவ

 

இத்தகைய அக்கிரமக்காரர்களைக் கொல்வதால் நமக்கு பாவமே வந்து சேரும். எனவே, திருதராஷ்டிரர் மகன்களையும் நமது நண்பர்களையும் கொல்லுதல் நமக்குச் சரியானதல்ல. அதிர்ஷ்ட தேவதையின் கணவரே, கிருஷ்ணரே, நமது சொந்த உறவினரைக் கொலை செய்துவிட்டு நாம் எவ்வாறு மகிழ்ச்சியடைய முடியும்? இதனால் நமக்கென்ன லாபம்?

1.37-38

யத் யப் யேதே ந பஷ்யந்தி

ஸோபோபஹத-சேதஸ:

குல-க்ஷய-க்ருதம் தோஷம்

மித்ர-த்ரோஹே ச பாதகம்

கதம் ந க்ஞேயம் அஸ்மாபி:

பாபாத் அஸ்மான் நிவர்திதும்

குல-க்ஷய-க்ருதம் தோஷம்

ப்ரபஷ்யத்பிர் ஜனார்தன

 

ஜனார்தனரே, பேராசையால் இதயத்தை இழந்த இம்மனிதர்கள், நண்பர்களுக்கு துரோகம் செய்வதையும் குலநாசம் செய்வதையும் பாவம் என்று அறியவில்லை. ஆனால் அவற்றைக் குற்றம் என்று அறிந்த நாம், ஏன் இப்பாவச் செயல்களில் ஈடுபட வேண்டும்?

1.39

குல-க்ஷயே ப்ரணஷ்யந்தி

குல-தர்மா: ஸநாதனா:

தர்மே நஷ்டே குலம் க்ருத்ஸ்னம்

அதர்மோ (அபி)பிபவத் யுத

 

குலம் அழிவடைவதால் நித்தியமான குல தர்மம் கெடுகின்றது. இதனால் வம்சத்தில் மீந்திருப்பவர்கள் அதர்மங்களில் ஈடுபடுவார்கள்.

1.40

அதர்மாபிபவாத் க்ருஷ்ண

ப்ரது ஷ்யந்தி குல-ஸ்த்ரிய:

ஸ்த்ரஷு துஷ்டாஸு வார்ஷ்ணேய

ஜாயதே வர்ண-ஸங்கர:

 

கிருஷ்ணரே, குலத்தில் அதர்மம் தலையெடுக்கும்போது, குடும்பப் பெண்கள் களங்கமடைகின்றனர்; பெண்மையின் சீரழிவால், விருஷ்ணி குலத்தவரே, தேவையற்ற சந்ததி உண்டாகிறது.

1.41

ஸங்கரோ நரகாயைவ

குல-க்நானாம் குலஸ்ய ச

பதந்தி பிதரோ ஹ்யேஷாம்

லுப்த-பிண்டோதக-க்ரியா:

 

தேவையற்ற ஜனத்தொகைப் பெருக்கம், குடும்பத்திற்கும் குடும்பப் பண்பாட்டை அழிப்போருக்கும் நிச்சயமாக நரக நிலையை ஏற்படுத்துகிறது. அதுபோன்ற சீர்குலைந்த குலங்களின் முன்னோர்கள் வீழ்ச்சியடைகின்றனர்; ஏனெனில், அவர்களுக்கு பிண்டமும் நீரும் அளிக்கக்கூடிய நிகழ்ச்சிகள் நடப்பதில்லை.

1.42

தோஷைர் ஏதை: குல-க்நானாம்

வர்ண-ஸங்கரகாரகை:

உதஸாத்யந்தே ஜாதி-தர்மா:

குலதர்மாஷ் ச ஷாஷ்வதா:

 

குடும்பப் பண்பாட்டை அழித்து, தேவையற்ற குழந்தைகளைத் தோற்றுவிக்கும் தீயவர்களின் செயல்களால், அனைத்து வித ஜாதி தர்மங்களும் அழிவுறுகின்றன.

1.43

உத்ஸன்னகுலதர்மாணாம்

மனுஷ்யாணாம் ஜனார்தன

நரகே நியதம் வாஸோ

பவதீத்-யனுஷுஷ்ரும

 

மக்களைக் காக்கும் கிருஷ்ணரே, குல தர்மத்தைக் கெடுப்பவர் எப்போதும் நரகத்தில் வாழ்வதாக நான் சீடப் பரம்பரை வாயிலாகக் கேட்டுள்ளேன்.

1.44

அஹோ பத மஹத் பாபம்

கர்தும் வ்யவஸிதா வயம்

யத் ராஜ்ய-ஸுக-லோபேன

ஹந்தும் ஸ்வ-ஜனம் உத்யதா:

 

ஐயகோ! மாபெரும் பாவங்களைச் செய்ய நாம் துணிந்துள்ளோமே, ராஜ்ஜிய சுகத்தை அனுபவிக்கும் ஆசையால் உந்தப்பட்டு, சொந்த உறவினர்களையும் கொல்ல முனைந்து விட்டோம்.

1.45

யதி மாம் அப்ரதீகாரம்

அஷஸ்த்ரம் ஷஸ்த்ர-பாணய:

தார்தராஷ்ட்ரா ரணே ஹன்யுஸ்

தன் மே க்ஷேமதரம் பவேத்

 

ஆயுதமின்றியும் எதிர்த்துப் போரிடாமலும் இருக்கின்ற என்னை, ஆயுதம் தாங்கிய திருதராஷ்டிரரின் மகன்கள் போரில் கொன்றால், அது எனக்கு அதிக நன்மையைக் கொடுக்கும்.

1.46

ஸஞ்ஜய உவாச

ஏவம் உக்த்வார்ஜுன: ஸங்க்யே

ரதோபஸ்த உபாவிஷத்

விஸ்ருஜ்ய ஸ-ஷரம் சாபம்

ஷோக-ஸம்விக்ன-மானஸ:

 

சஞ்ஜயன் கூறினான்: போர்க்களத்தில் இவ்வாறு பேசிய அர்ஜுனன், தனது வில்லையும் அம்புகளையும் ஒருபுறம் எறிந்து விட்டு ரதத்தில் அமர்ந்துவிட்டான். அவனது மனம் சோகத்தால் மூழ்கியுள்ளது.