ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
பெரிய திருமொழி – ஐந்தாம் பத்து – ஒன்றாம் திருமொழி
| 1348 | அறிவ தரியா னனைத்துலகும் உடையா னென்னை யாளுடையான் குறிய மாணி யுருவாய கூத்தன் மன்னி யமருமிடம், நறிய மலர்மேல் சுரும்பார்க்க எழிலார் மஞ்ஞை நடமாட, பொறிகொள் சிறைவண் டிசைபாடும் புள்ளம் பூதங் குடிதானே |
1.1 |
| 1349 | கள்ளக் குறளாய் மாவலியை வஞ்சித்து உலகம் கைப்படுத்து, பொள்ளைக் கரத்த போதகத்தின் துன்பம் தவிர்த்த புனிதனிடம், பள்ளச் செறுவில் கயலுகளப் பழனக் கழனி யதனுள்போய், புள்ளுப் பிள்ளைக் கிரைதேடும் புள்ளம் பூதங் குடிதானே |
1.2 |
| 1350 | மேவா வரக்கர் தென்னிலங்கை வேந்தன் வீயச் சரம்துரந்து, மாவாய் பிளந்து மல்லடர்த்து மருதம் சாய்த்த மாலதிடம், காவார் தெங்கின் பழம்வீழக் கயல்கள் பாயக் குருகிரியும், பூவார் கழனி யெழிலாரும் புள்ளம் பூதங் குடிதானே |
1.3 |
| 1351 | வெற்பால் மாரி பழுதாக்கி விறல்வா ளரக்கர் தலைவன்றன், வற்பார் திரள்தோ ளைந்நான்கும் துணித்த வல்வில் இராமனிடம், கற்பார் புரிசை செய்குன்றம் கவினார் கூடம் மாளிகைகள், பொற்பார் மாட மெழிலாரும் புள்ளம் பூதங் குடிதானே |
1.4 |
| 1352 | மையார் தடங்கண் கருங்கூந்தல் ஆய்ச்சி மறைய வைத்ததயிர், நெய்யார் பாலோ டமுதுசெய்த நேமி யங்கை மாயனிடம், செய்யார் ஆரல் இரைகருதிச் செங்கால் நாரை சென்றணையும், பொய்யா நாவில் மறையாளர் புள்ளம் பூதங் குடிதானே |
1.5 |
| 1353 | மின்னி னன்ன நுண்மருங்குல் வேயேய் தடந்தோள் மெல்லியற்கா, மன்னு சினத்த மழவிடைகள் ஏழன் றடர்த்த மாலதிடம், மன்னு முதுநீ ரரவிந்த மலர்மேல் வரிவண் டிசைபாட, புன்னை பொன்னேய் தாதுதிர்க்கும் புள்ளம் பூதங் குடிதானே |
1.6 |
| 1354 | குடையா விலங்கல் கொண்டேந்தி மாரி பழுதா நிரைகாத்து, சடையா னோட அடல்வாணன் தடந்தோள் துணித்த தலைவனிடம், குடியா வண்டு கள்ளுண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும், புடையார் கழனி யெழிலாரும் புள்ளம் பூதங் குடிதானே |
1.7 |
| 1355 | கறையார் நெடுவேல் மறமன்னர் வீய விசயன் தேர்கடவி, இறையான் கையில் நிறையாத முண்டம் நிறைத்த வெந்தையிடம், மறையால் மூத்தீ யவைவளர்க்கும் மன்னு புகழால் வண்மையால், பொறையால் மிக்க அந்தணர்வாழ் புள்ளம் பூதங் குடிதானே |
1.8 |
| 1356 | துன்னி மண்ணும் விண்ணாடும் தோன்றா திருளாய் மூடியநாள், அன்ன மாகி யருமறைகள் அருளிச் செய்த அமலனிடம், மின்னு சோதி நவமணியும் வேயின் முத்தும் சாமரையும், பொன்னும் பொன்னி கொணர்ந்தலைக்கும் புள்ளம் பூதங் குடிதானே |
1.9 |
| 1357 | கற்றா மறித்து காளியன்றன் சென்னி நடுங்க நடம்பயின்ற பொற்றாமரையாள் தன்கேள்வன் புள்ளம் பூதங்குடிதன்மேல் கற்றார் பரவும் மங்கையர்க்கோன் காரார் புயற்கைக் கலிகன்றி, சொல்தானீரைந் திவைபாடச் சோர நில்லா துயர்தாமே |
1.10 |
ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!

