ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
பெரிய திருமொழி – ஐந்தாம் பத்து – மூன்றாம் திருமொழி
| 1368 | வென்றி மாமழு வேந்திமுன் மண்மிசை மன்னரை மூவெழுகால் கொன்ற தேவ,நின் குரைகழல் தொழுவதோர் வகையெனக் கருள்புரியே, மன்றில் மாம்பொழில் நுழைதந்து மல்லிகை மௌவலின் போதலர்த்தி, தென்றல் மாமணம் கமழ்தர வருதிரு வெள்ளறை நின்றானே |
3.1 |
| 1369 | வசையில் நான்மறை கெடுத்தவம் மலரயற் கருளி,முன் பரிமுகமாய், இசைகொள் வேதநூ லென்றிவை பயந்தவ னே எனக் கருள்புரியே, உயர்கொள் மாதவிப் போதொடு லாவிய மாருதம் வீதியின்வாய், திசையெல் லாம்கம ழும்பொழில் சூழ்திரு வெள்ளறை நின்றானே |
3.2 |
| 1370 | வெய்ய னாயுல கேழுடன் நலிந்தவன் உடலக மிருபிளவா, கையில் நீளுகிர்ப் படையது வாய்த்தவ னே எனக் கருள்புரியே, மையி னார்தரு வராலினம் பாயவண் தடத்திடைக் கமலங்கள், தெய்வ நாறுமொண் பொய்கைகள் சூழ்திரு வெள்ளறை நின்றானே |
3.3 |
| 1371 | வாம்ப ரியுக மன்னர்த முயிர்செக ஐவர்க்கட் கரசளித்த, காம்பி னார்த்திரு வேங்கடப் பொருப்ப.நின் காதலை யருளெனக்கு, மாம்பொ ழில்தளிர் கோதிய மடக்குயில் வாயது துவர்ப்பெய்த, தீம்ப லங்கனித் தேனது _கர்திரு வெள்ளறை நின்றானே |
3.4 |
| 1372 | மான வேலொண்கண் மடவரல் மண்மகள் அழுங்கமுந் நீர்ப்பரப்பில், ஏன மாகியன் றிருநில மிடந்தவ னே எனக் கருள்புரியே, கான மாமுல்லை கழைக்கரும் பேறிவெண் முறுவல்செய் தலர்கின்ற, தேனின் வாய்மலர் முருகுகுக் கும்திரு வெள்ளறை நின்றானே |
3.5 |
| 1373 | பொங்கு நீண்முடி யமரர்கள் தொழுதெழ அமுதினைக் கொடுத்தளிப்பான், அங்கொ ராமைய தாகிய வாதி.நின் னடிமையை யருளெனக்கு, தங்கு பேடையொ டூடிய மதுகரம் தையலார் குழலணைவான், திங்கள் தோய்சென்னி மாடம்சென் றணை திரு வெள்ளறை நின்றானே |
3.6 |
| 1374 | ஆறி னோடொரு நான்குடை நெடுமுடி அரக்கன்றன் சிரமெல்லாம், வேறு வேறுக வில்லது வளைத்தவ னே எனக் கருள்புரியே, மாறில் சோதிய மரதகப் பாசடைத் தாமரை மலர்வார்ந்த, தேறல் மாந்திவண் டின்னிசை முரல திரு வெள்ளறை நின்றானே |
3.7 |
| 1375 | முன்னிவ் வேழுல குணர்வின்றி யிருள்மிக உம்பர்கள் தொழுதேத்த, அன்ன மாகியன் றருமறை பயந்தவ னே.எனக் கருள்புரியே, மன்னு கேதகை சூதக மென்றிவை வனத்திடைச் சுரும்பினங்கள், தென்ன வென்னவண் டின்னிசை முரல்திரு வெள்ளறை நின்றானே |
3.8 |
| 1376 | ஆங்கு மாவலி வேள்வியி லிரந்துசென் றகலிட முழுதினையும், பாங்கி னாற்கொண்ட பரம.நிற் பணிந்தெழு வேனெனக் கருள்புரியே, ஓங்கு பிண்டியின் செம்மல ரேறிவண் டுழிதர, மாவேறித் தீங்கு யில்மிழற் றும்படப் பைத்திரு வெள்ளறை நின்றானே |
3.9 |
| 1377 | மஞ்சு லாமணி மாடங்கள் சூழ்திரு வெள்ளறை யதன்மேய, அஞ்ச னம்புரை யும்திரு வுருவனை ஆதியை யமுதத்தை, நஞ்சு லாவிய வேல்வல வன்கலி கன்றிசொல் ஐயிரண்டும், எஞ்ச லின்றிநின் றேத்தவல் லாரிமை யோர்க்ர சாவார்க்களே |
3.10 |
ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!

