ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
பெரிய திருமொழி – முதல் பத்து – ஐந்தாம் திருமொழி
| 988 | கலையும்கரியும்பரிமாவும் திரியும்கானம்கடந்துபோய், சிலையும்கணையும்துணையாகச் சென்றான்வென்றிச்செறுக்களத்து, மலைகொண்டலைநீரணைகட்டி மதிள்நீரிலங்கைவாளரக்கர் தலைவன், தலைபத்தறுத்துகந்தான் சாளக்கிராமமடைநெஞ்சே. |
5.1 |
| 989 | கடம்சூழ்க்கரியும்பரிமாவும் ஒலிமாந்தேரும்காலாளும், உடன்சூழ்ந்தெழுந்தகடியிலங்கை பொடியவடிவாய்ச்சரம்துரந்தான், இடம்சூழ்ந்தெங்குமிருவிசும்பில் இமையோர்வணங்கமணம்கமழும், தடம்சூழ்ந்தெங்குமழகாய சாளக்கிராமமடைநெஞ்சே. |
5.2 |
| 990 | உலவுதிரையும்குலவரையும் ஊழிமுதலாவெண்திக்கும், நிலவும்சுடருமிருளுமாய் நின்றான்வென்றிவிறலாழி வலவன், வானோர்த்தம்பெருமான் மருவாவரக்கர்க்கெஞ்ஞான்றும் சலவன், சலம்சூழ்ந்தழகாய சாளக்கிராமமடைநெஞ்சே. |
5.3 |
| 991 | ஊராங்குடந்தையுத்தமன் ஒருகாலிருகால்சிலைவளைய, தேராவரக்கர்த்தேர்வெள்ளம்செற்றான் வற்றாவருபுனல்சூழ் பேரான், பேராயிரமுடையான் பிறங்குசிறைவண்டறைகின்ற தாரான், தாராவயல்சூழ்ந்த சாளக்கிராமமடைநெஞ்சே. |
5.4 |
| 992 | அடுத்தார்த்தெழுந்தாள்பிலவாய்விட்டலற அவள்மூக்கயில்வாளால் விடுத்தான், விளங்குசுடராழி விண்ணோர்ப்பெருமான், நண்ணார்முன், கடுத்தார்த்தெழுந்தபெருமழையைக் கல்லொன்றேந்தியினநிரைக்காத் தடுத்தான், தடம்சூழ்ந்தழகாய சாளக்கிராமமடைநெஞ்சே. |
5.5 |
| 993 | தாயாய்வந்தபேயுயிரும் தயிரும்விழுதுமுடனுண்ட வாயான், தூயவரியுருவிற்குறளாய்ச்சென்று மாவலையை ஏயானிரப்ப, மூவடிமண்ணின்றெதாவென்று உலகேழும் தாயான், காயாமலர்வண்ணன் சாளக்கிராமமடைநெஞ்சே. |
5.6 |
| 994 | ஏனோரஞ்சவெஞ்சமத்துள் அரியாய்ப்பரியவிரணியனை, ஊனாரகலம்பிளவெடுத்த ஒருவன்தானேயிருசுடராய், வானாய்த்தீயாய்மாருதமாய் மலையாயலைநீருலகனைத்தும் தானாய், தானுமானாந்தன் சாளக்கிராமமடைநெஞ்சே. |
5.7 |
| 995 | வெந்தாரென்பும்சுடுநீறும் மெய்யில்பூசிக்கையகத்து, ஓர் சந்தார் தலைகொண்டுலகேழும் திரியும்பெரியோந்தான்சென்று, என் எந்தாய். சாபம்தீரென்ன இலங்கமுதநீர்த்திருமார்பில் தந்தான், சந்தார்ப்பொழில்சூழ்ந்த சாளக்கிராமமடைநெஞ்சே. |
5.8 |
| 996 | தொண்டாமினமுமிமையோரும் துணைநுaல்மார்பினந்தணரும், அண்டாவெமக்கேயருளாயென்று அணயும்கோயிலருகெல்லாம், வண்டார்ப்பொழிலின்பழனத்து வயலினயலேகயல்பாய, தண்டாமரைகள்முகமலர்த்தும் சாளக்கிராமமடைநெஞ்சே. |
5.9 |
| 997 | தாராவாரும்வயல்சூழ்ந்த சாளக்கிராமத்தடிகளை, காரார்ப்புறவின்மங்கைவேந்தன் கலியனொலிசெய் தமிழ்மாலை, ஆராருலகத்தறிவுடையார் அமரர்நன்னாட்டரசாள, பேராயிரமுமோதுமிங்கள் அன்றியிவையேபிதற்றுமினே. |
5.10 |
ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!

