தனியன்கள்-பெரியாழ்வார் திருமொழி


நாதமுனிகள் அருளிச் செய்தது

 

குருமுக மனதீத்ய ப்ராஹ வேதான ஶேஷாந்

            நரபதி பரிக்லுப்தம் ஶíல்க மாதாது காம:

ஶ்வஶுர மமரவந்த்யம் ரங்கநாதஸ்ய ஸாக்ஷாத்

            த்விஜகுலதிலகம்தம் விஷ்ணுசித்தம் நமாமி||

 

பாண்டிய பட்டர் அருளிச் செய்தவை

 

மின்னார் தடமதிள்சூழ் வில்லிபுத்தூரென்று ஒருகால்*

சொன்னார் கழற்கமலம் சூடினோம்* – முன்னாள்

கிழியறுத்தான் என்றுரைத்தோம்,* கீழ்மையினிற்சேரும்-

வழியறுத்தோம் நெஞ்சமே! வந்து

 

பாண்டியன்கொண்டாடப் பட்டர்பிரான்வந்தானென்று*

ஈண்டியசங்கம் எடுத்தூத* – வேண்டிய

வேதங்களோதி விரைந்துகிழியறுத்தான்*

பாதங்கள்யாமுடையபற்று.