தனியன்கள்


நாச்சியார் திருமொழித் தனியன்கள்

திருக்கண்ணமங்கையாண்டான் அருளியது

அல்லிநாள் தாமரை மேலாரணங்கினின்துணைவி*

மல்லி நாடாண்டமடமயில் – மெல்லியலாள்*

ஆயர்க்குலவேந்தனாகத்தாள்* தென்புதுவை

வேயர் பயந்த விளக்கு.

கோலச் சுரிசங்கை மாயஞ்செவ் வாயின் குணம்வினவும்
சீலத்தனள்,தென் திருமல்லி நாடி, செழுங்குழல்மேல்
மாலத் தொடைதென்னரங்கருக் கீயும் மதிப்புடைய
சோலைக் கிளி,அவள் தூயநற்பாதம் துணைநமக்கே.