| 719 | மன்னுபுகழ் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே தென்னிலங்கை கோன்முடிகள் சிந்துவித்தாய் செம்பொஞ்சேர் கன்னிநன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் கருமணியே என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ . |
1 |
| 720 | புண்டரிக மலரதன்மேல் புவனியெல்லாம் படைத்தவனே திண்டிறலாள் தாடகைதன் உரமுருவச் சிலைவளைத்தய் கண்டவர்தம் மனம்வழங்கும் கணபுரத்தென் கருமணியே எண்டிசையு மாளுடையாய் இராகவனே தாலேலோ . |
2 |
| 721 | கொங்குமலி கருங்குழலாள் கோசலைதன் குலமதலாய் தங்குபெரும் புகழ்ச்சனகன் திருமருகா தாசரதீ கங்கையிலும் தீர்த்தமலி கணபுரத்தென் கருமணியே எங்கள்குல தின்னமுதே இராகவனே தாலேலோ . |
3 |
| 722 | தாமரைமே லயனவனைப் படைத்தவனே தசரதன்றன் மாமதலாய் மைதிலிதன் மணவாளா வண்டினங்கள் காமரங்க ளிசைபாடும் கணபுரத்தென் கருமணியே ஏமருவும் சிலைவலவா இராகவனே தாலேலோ . |
4 |
| 723 | பாராளும் படர்செல்வம் பரதநம்பிக் கேயருளி ஆராவன் பிளையவனோ டருங்கான மடைந்தவனே சீராளும் வரைமார்பா திருக்கண்ண புரத்தரசே தாராளும் நீண்முடியென் தாசரதீ தாலேலோ . |
5 |
| 724 | சுற்றமெல்லாம் பின்தொடரத் தொல்கான மடைந்தவனே அற்றவர்கட் கருமருந்தே அயோத்திநகர்க் கதிபதியே கற்றவர்கள் தாம்வாழும் கணபுரத்தென் கருமணியே சிற்றவைதன் சொல்கொண்ட சீராமா தாலேலோ . |
6 |
| 725 | ஆலினிலைப் பாலகனா யன்றுலக முண்டவனே வாலியைகொன் றரசிளைய வானரத்துக் களித்தவனே காலின்மணி கரையலைக்கும் கணபுரத்தென் கருமணியே ஆலிநகர்க் கதிபதியே அயோத்திமனே தாலேலோ . |
7 |
| 726 | மலையதனா லணைகட்டி மதிளிலங்கை யழித்தவனே அலைகடலைக் கடைந்தமரர்க் கமுதருளிச் செய்தவனே கலைவலவர் தாம்வாழும் கணபுரத்தென் கருமணியே சிலைவலவா சேவகனே சீராம தாலேலோ . |
8 |
| 727 | தளையவிழும் நறுங்குஞ்சித் தயரதன்றன் குலமதலாய் வளையவொரு சிலையதனால் மதிளிலங்கை யழித்தவனே களைகழுநீர் மருங்கலரும் கணபுரத்தென் கருமணியே இளையவர்கட் கருளுடையாய் இராகவனே தாலேலோ . |
9 |
| 728 | தேவரையு மசுரரையும் திசைகளையும் படைத்தவனே யாவரும்வந் தடிவணங்க அரங்கநகர்த் துயின்றவனே காவிரிநல் நதிபாயும் கணபுரத்தென் கருமணியே ஏவரிவெஞ் சிலைவலவா இராகவனே தாலேலோ . |
10 |
| 729 | கன்னிநன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் காகுத்தன் தன்னடிமேல் தாலேலோ என்றுரைத்த தமிழ்மாலை கொல்நவிலும் வேல்வலவன் குடைக்குலசே கரஞ்சொன்ன பன்னியநூல் பத்தும்வல்லார் பாங்காய பத்தர்களே . |
11 |

