| 668 | மெய்யில் வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளும்இவ் வையந் தன்னொடும் கூடுவ தில்லையான் ஐய னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன் மையல் கொண்டாழிந் தேனென்றன் மாலுக்கே . |
1 |
| 669 | நூலி னேரிடை யார்திறத் தேநிற்கும் ஞாலந் தன்னொடும் கூடுவ தில்லையான் ஆலியா அழையா அரங்கா வென்று மாலெ ழுந்தொழிந் தேனென்றன் மாலுக்கே . |
2 |
| 670 | மார னார்வரி வெஞ்சிலைக் காட்செய்யும் பாரி னாரொடும் கூடுவ தில்லையான் ஆர மார்வ னரங்க னனந்தன்நல் நார ணன்நர காந்தகன் பித்தனே . |
3 |
| 671 | உண்டி யேயுடை யேயுகந் தோடும்,இம் மண்ட லத்தொடும் கூடுவ தில்லையான் அண்ட வாண னரங்கன்வன் பேய்முலை உண்ட வாயன்ற னுன்மத்தன் காண்மினே . |
4 |
| 672 | தீதில் நன்னெறி நிற்கஅல் லாதுசெய் நீதி யாரொடும் கூடுவ தில்லையான் ஆதி ஆய னரங்கன்,அந் தாமரைப் பேதை மாமண வாளன்றன் பித்தனே . |
5 |
| 673 | எம்ப ரத்தரல் லாரொடும் கூடலன் உம்பர் வாழ்வையொன் றாக கருதிலன் தம்பி ரானம ரர்க்கு,அரங் கநகர் எம்பி ரானுக்கெ ழுமையும் பித்தனே . |
6 |
| 674 | எத்தி றத்திலும் யாரொடும் கூடும்,அச் சித்தந் தன்னைத் தவிர்த்தனன் செங்கண்மால் அத்த னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன் பித்த னாயொழிந் தேனெம்பி ரானுக்கே . |
7 |
| 675 | பேய ரேயெனக் கியாவரும் யானுமோர் பேய னேயெவர்க் கும்இது பேசியென் ஆய னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன் பேய னாயொழிந் தேனெம்பி ரானுக்கே . |
8 |
| 676 | அங்கை யாழி யரங்க னடியிணை தங்கு சிந்தைத் தனிப்பெரும் பித்தனாய் கொங்கர் கோன்குல சேகரன் சொன்னசொல் இங்கு வல்லவர்க் கேதமொன் றில்லையே . |
9 |

