மூன்றாம் பத்து
முதல் திருமொழி
தன்னேர் ஆயிரம் பிள்ளைகளோடு* தளர்நடையிட்டு வருவான்*
பொன்னேய் நெய்யொடு பாலமுதுண்டு* ஒருபுள்ளுவன் பொய்யே தவழும்*
மின்னேர் நுண்ணிடை வஞ்சமகள் கொங்கை துஞ்ச* வாய் வைத்த பிரானே!*
அன்னே! உன்னை அறிந்துகொண்டேன்* உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.* 3.1.1.
பொன்போல் மஞ்சனமாட்டி அமுதூட்டிப் போனேன்* வருமளவு இப்பால்*
வன்பார சகடம் இறச்சாடி* வடக்கில் அகம் புக்கிருந்து*
மின்போல் நுண்ணிடையால் ஒருகன்னியை* வேற்றுருவம் செய்துவைத்த*
அன்பா! உன்னை அறிந்துகொண்டேன்* உனக்கு அஞ்சுவன் அம்மம்தரவே.* 3.1.2.
கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கிக்* குடத்தயிர் சாய்த்துப்பருகி*
பொய்ம்மாய மருதான அசுரரைப்* பொன்றுவித்து இன்றுநீவந்தாய்*
இம்மாயம் வல்லபிள்ளை நம்பீ!* உன்னை என்மகனே என்பர் நின்றார்*
அம்மா! உன்னை அறிந்துகொண்டேன்* உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.* 3.1.3.
மையார்க்கண் மடவாய்ச்சியர் மக்களை* மையன்மை செய்து அவர் பின் போய்*
கொய்யார் பூந்துகில் பற்றித்தனிநின்று* குற்றம் பலபல செய்தாய்*
பொய்யா! உன்னைப் புறம் பலபேசுவ* புத்தகத்துக் உள கேட்டேன்*
ஐயா! உன்னை அறிந்துகொண்டேன்* உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே.* 3.1.4.
முப்போதும் கடைந் தீண்டிய வெண்ணெயினோடு* தயிரும் விழுங்கி*
கப்பால் ஆயர்கள் காவில் கொணர்ந்த* கலத்தொடு சாய்த்துப்பருகி*
மெய்ப்பாலுண்ட அழுபிள்ளைகள்போல* நீ விம்மி விம்மி ஆழுகின்ற*
அப்பா! உன்னை அறிந்துகொண்டேன்* உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.* 3.1.5.
கரும்பார் நீள்வயல் காய்கதிர்ச் செந்நெலைக்* கற்றா நிறைமண்டித் தின்ன*
விரும்பாக் கன்Ýறு ஒன்று கொண்டு* விளங்கனி வீழ எறிந்த பிரானே!*
சுரும்பார் மென்குழல் கன்னியொருத்திக்குச்* சூழ்வலை வைத்துத் திரியும்*
அரம்பா! உன்னை அறிந்துகொண்டேன்* உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.* 3.1.6.
மருட்டார் மெங்குழல் கொண்டு பொழில்புக்கு* வாய்வைத்து அவ்வாயர் தம்பாடி*
சுருட்டார் மென்குழல் கன்னியர் வந்து உன்னைச்* சுற்றும் தொழ நின்ற சோதி!*
பொருட்டாயமிலேன் எம்பெருமான்!* உன்னைப் பெற்ற குற்றமல்லால்* மற்றிங்கு-
அரட்டா! உன்னை அறிந்துகொண்டேன்* உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.* 3.1.7.
வாளாவாகிலும் காணகில்லார்* பிறர் மக்களை மையன்மை செய்து*
தோளாலிட்டு அவரோடு திளைத்து* நீ சொல்லப்படாதன செய்தாய்*
கேளார் ஆயர் குலத்தவர் இப்பழி கெட்டேன்!* வாழ்வில்லை* நந்தன்-
காளாய்! உன்னை அறிந்துகொண்டேன்* உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.* 3.1.8.
தாய்மார் மோர் விற்கப் போவர்* தகப்பன்மார் கற்றாநிறைப்பின்பு போவர்*
நீ ஆய்ப்பாடி இளங்கன்னிமார்களை* நேர்படவேகொண்டுபோதி*
காய்வார்க்கு என்றும் உகப்பனவே செய்து* கண்டார் கழறத்திரியும்*
ஆயா! உன்னை அறிந்துகொண்டேன்* உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.* 3.1.9.
தொத்தார் பூங்குழல் கன்னியொருத்தியைச்* சோலைத் தடம் கொண்டு புக்கு*
முத்தார் கொங்கை புணர்ந்து இராநாழிகை* மூவேழு சென்ற பின்வந்தாய்*
ஒத்தார்க்கு ஒத்தன பேசுவர்*உன்னை உரப்பவே நான் ஒன்றும்மாட்டேன்*
அத்தா! உன்னை அறிந்துகொண்டேன்* உனக்கு அஞ்சுவன் அம்மம்தரவே.* 3.1.10.
காரார் மேனிநிறத்து ஏம்பிரானைக்* கடிகமழ் பூங்குழலாய்ச்சி*
ஆரா இன்னமுது உண்ணத்தருவன் நான்* அம்மம் தாரேனென்றமாற்றம்*
பாரார் தொல் புகழான் புதுவை மன்னன்* பட்டர்பிரான் சொன்ன பாடல்*
ஏரார் இன்னிசை மாலைவல்லார்* இருடீகேசன் அடியாரே.* 3.1.11.
இரண்டாம் திருமொழி
அஞ்சனவண்ணனை* ஆயர் கோலக்கொழுந்தினை*
மஞ்சனமாட்டி* மனைகள் தோறும் திரியாமே*
கஞ்சனைக் காய்ந்த* கழலடி நோவக் கன்றின்பின்*
என்செயப் பிள்ளையைப் போக்கினேன்?* எல்லேபாவமே!* (2) 3.2.1.
பற்று மஞ்சள் பூசிப்* பாவைமாரொடு பாடியில்*
சிற்றில் சிதைத்து எங்கும் *தீமை செய்து திரியாமே*
கற்றுத்தூளியுடை* வேடர் கானிடைக்கன்றின்பின்*
எற்றுக்கு என் பிள்ளையைப் போக்கினேன்?* எல்லேபாவமே!* 3.2.2.
நன்மணிமேகலை* நங்கைமாரொடு நாள்தொறும்*
பொன்மணிமேனி* புழுதியாடித்திரியாமே*
கன்மணி நின்றதிர்* கான் அதரிடைக் கன்றின்பின்*
என் மணிவண்ணனைப் போக்கினேன்* எல்லேபாவமே!* 3.2.3.
வண்ணக் கருங்குழல்* மாதர்வந்து அலர் தூற்றிட*
பண்ணிப்பலசெய்து* இப்பாடி எங்கும் திரியாமே*
கண்ணுக்கினியானைக்* கான் அதரிடைக் கன்றின்பின்*
எண்ணற்கரியானைப் போக்கினேன்* எல்லேபாவமே!* 3.2.4.
அவ்வவ்விடம்புக்கு* அவ்வாயர் பெண்டிர்க்கு அணுக்கனாய்*
கொவ்வைக் கனிவாய் கொடுத்துக்* கூழைமைசெய்யாமே*
எவ்வும் சிலையுடை* வேடர் கானிடைக்கன்றின்பின்*
தெய்வத் தலைவனைப் போக்கினேன்* எல்லேபாவமே!* 3.2.5.
மிடறு மெழுமெழுத்தோட* வெண்ணெய் விழுங்கிப் போய்*
படிறுபலசெய்து* இப்பாடியெங்கும்திரியாமே*
கடிறுபலதிரி* கான் அதரிடைக் கன்றின்பின்*
இடற என்பிள்ளையைப் போக்கினேன்* எல்லேபாவமே!* 3.2.6.
வள்ளி நுடங்கிடை* மாதர்வந்து அலர்தூற்றிட*
துள்ளி விளையாடித்* தோழரோடு திரியாமே*
கள்ளியுணங்கு* வெங் கான் அதரிடைக் கன்றின்பின்*
புள்ளின் தலைவனைப் போக்கினேன்* எல்லேபாவமே!* 3.2.7.
பன்னிருதிங்கள்* வயிற்றில் கொண்ட அப்பாங்கினால்*
என் இளங்கொங்கை* அமுதமூட்டி எடுத்து யான்*
பொன்னடி நோவப்* புலரியே கானில்கன்றின்பின்*
என்னிளஞ் சிங்கத்தைப் போக்கினேன்* எல்லேபாவமே!* 3.2.8.
குடையும் செருப்பும் கொடாதே* தாமோதரனை நான்*
உடையும் கடியன ஊன்று* வெம்பரற்களுடை*
கடிய வெங்கானிடைக்* காலடிநோவக் கன்றின்பின்*
கொடியேன் என்பிள்ளையைப் போக்கினேன்* எல்லேபாவமே!* 3.2.9.
என்றும் எனக்கு இனியானை* என்மணிவண்ணனை*
கன்றின் பின் போக்கினேனென்று* அசோதைகழறிய*
பொன் திகழ்மாடப்* புதுவையர் கோன் பட்டன் சொல்*
இன்தமிழ் மாலைகள் வல்லவர்க்கு* இடரில்லையே.* (2) 3.2.10.
மூன்றாம் திருமொழி
சீலைக்குதம்பை ஒருகாது ஒருகாது* செந்நிறமேல்தோன்றிப்பூ*
கோலப்பணைக் கச்சும் கூறையுடையும்* குளிர்முத்தின்கோடாலமும்*
காலிப்பின்னே வருகின்ற* கடல்வண்ணன் வேடத்தை வந்துகாணீர்*
ஞாலத்துப் புத்திரனைப்பெற்றார்* நங்கைமீர்! நானே மற்றாருமில்லை. (2) 3.3.1.
கன்னி நன் மாமதிள் சூழ்தரு* பூம்பொழில் காவிரித் தென்னரங்கம்*
மன்னியசீர் மதுசூதனா! கேசவா!* பாவியேன்வாழ்வுகந்து*
உன்னை இளங்கன்று மேய்க்கச்* சிறுகாலேயூட்டி ஒருப்படுத்தேன்*
என்னின் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை* என் குட்டனே முத்தம்தா.* 3.3.2.
காடுகðடு போய்க் *கன்றுகள் மேய்த்து மறியோடி* கார்க் கோடல்பூச்-
சூடி வருகின்ற தாமோதரா!* கற்றுத் தூளிகாண் உன்னுடம்பு*
பேடை மயிற் சாயல் பின்னைமணாளா!* நீராட்டமைத்து வைத்தேன்*
ஆடி அமுதுசெய் அப்பனும் உண்டிலன்* உன்னோடு உடனே உண்பான்.* 3.3.3.
கடியார் பொழிலணி வேங்கடவா!* கரும் போரேறே!* நீயுகக்கும்-
குடையும் செருப்பும் குழலும்* தருவிக்கக் கொள்ளாதே போனாய் மாலே!*
கடிய வெங்கானிடைக் கன்றின்பின்போன* சிறுக்குட்டச்செங்கமல*
அடியும் வெதும்பி* உன் கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய்* நீ எம்பிரான்! 3.3.4.
பற்றார் நடுங்க முன் பாஞ்சசன்னியத்தை* வாய்வைத்த போரேறே!*
என் சிற்றாயர்சிங்கமே! சீதைமணாளா!* சிறுக்குட்டச் செங்கண்மாலே!*
சிற்றாடையும் சிறுப்பத்திரமும்* இவை கட்டிலின் மேல்வைத்துப் போய்*
கற்றாயரோடு நீ கன்றுகள்மேய்த்துக்* கலந்துடன் வந்தாய்போலும்.* 3.3.5.
அஞ்சுடராழி உன்கையகத்து ஏந்தும் அழகா!* நீ பொய்கைபுக்கு*
நஞ்சுமிழ் நாகத்தினோடு பிணங்கவும்* நான் உயிர் வாழ்ந்திருந்தேன்*
என் செய்ய என்னை வயிறு மறுக்கினாய்?* ஏதும் ஓர் அச்சமில்லை*
கஞ்சன் மனத்துக்கு உகப்பனவே செய்தாய்* காயாம் பூவண்ணம் கொண்டாய்!* 3.3.6.
பன்றியும் ஆமையும் மீனமுமாகிய* பாற்கடல்வண்ணா!* உன்மேல்-
கன்றின் உருவாகி மேய் புலத்தே வந்த* கள்ள அசுரர் தன்னை*
சென்று பிடித்துச் சிறுக்கைகளாலே* விளங்காய் எறிந்தாய் போலும்*
என்றும் என்பிள்ளைக்குத் தீமைகள் செய்வார்கள்* அங்கனமாவர்களே.* 3.3.7.
கேட்டு அறியாதன கேட்கின்றேன்* கேசவா! கோவலர் இந்திரற்கு*
காட்டிய சோறும் கறியும் தயிரும்* கலந்துடன் உண்டாய் போலும்*
ஊட்ட முதலிலேன் உன்தன்னைக் கொண்டு* ஒருபோதும் எனக்கரிது*
வாட்டமிலாப் புகழ் வாசுதேவா!* உன்னை அஞ்சுவன் இன்றுதொட்டும்.* 3.3.8.
திண்ணார் வெண்சங்குடையாய்!* திருநாள் திருவோணம் இன்றேழுநாள்* முன்-
பண்ணேர் மொழியாரைக் கூவிமுளையட்டிப்* பல்லாண்டு கூறுவித்தேன்*
கண்ணாலம்செய்யக்* கறியும் கலத்தரிசியும் ஆக்கிவைத்தேன்*
கண்ணா நீ நாளைத் தொட்டுக் கன்றின்பின் போகேல்* கோலம்செய்திங்கேயிரு.* 3.3.9.
புற்றரவல்குல் அசோதை நல்லாய்ச்சி* தன் புத்திரன் கோவிந்தனை*
கற்றினம் மேய்த்துவரக் கண்டுகந்து* அவள் கற்பித்த மாற்றமெல்லாம்*
செற்றமிலாதவர்வாழ்தரு* தென்புதுவை விட்டுசித்தன்சொல்*
கற்றிவை பாடவல்லார்* கடல்வண்ணன் கழலிணை காண்பர்களே. (2) 3.3.10.
நான்காம் திருமொழி
தழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும்*
தண்ணுமை எக்கம் மத்தளிதாழ் பீலி*
குழல்களும் கீதமுமாகி* எங்கும்-
கோவிந்தன் வருகின்ற கூட்டம் கண்டு*
மழைகொலோ வருகின்றதென்று சொல்லி*
மங்கைமார் சாலக வாசல் பற்றி*
நுழைவனர் நிற்பனராகி எங்கும்*
உள்ளம் விட்டு ஊண் மறந்தொழிந்தனரே.* (2) 3.4.1.
வல்லி நுண் இதழன்ன ஆடைகொண்டு*
வசையறத் திருவரை விரித்துடுத்து*
பல்லி நுண் பற்றாக உடைவாள் சாத்திப்*
பணைக்கச்சு உந்திப் பலதழை நடுவே*
முல்லை நல் நறுமலர் வேங்கை மலர்-
அணிந்து* பல்லாயர் குழாம் நடுவே*
எல்லியம் போதாகப் பிள்ளைவரும்*
எதிர் நின்று அங்கு இனவளை இழவேன்மினே.* 3.4.2.
சுரிகையும் தெறிவில்லும் செண்டுகோலும்*
மேலாடையும் தோழன்மார் கொண்டோட*
ஒருகையால் ஒருவன் தன் தோளையூன்றி*
ஆநிரை இனம் மீளக் குறித்தசங்கம்*
வருகையில் வாடிய பிள்ளை கண்ணன்*
மஞ்சளும் மேனியும் வடிவும் கண்டாள்*
அருகே நின்றாள் என்பெண் நோக்கிக்கண்டாள்*
அதுகண்டு இவ்வூர் ஒன்று புணர்க்கின்றதே.* 3.4.3.
குன்றெடுத்து ஆநிரைகாத்த பிரான்*
கோவலனாய்க் குழலூதி யூதி*
கன்றுகள் மேய்த்துத் தன்தோழரோடு*
கலந்து உடன் வருவானைத் தெருவில்கண்டு*
என்றும் இவனை ஒப்பாரை நங்காய்*
கண்டறியேன்ஏடி! வந்துகாணாய்*
ஒன்றும் நில்லா வளை கழன்று*
துகில் ஏந்து இளமுலையும் என்வசமல்லவே.* 3.4.4.
சுற்றிநின்று ஆயர் தழைகள் இடச்*
சுருள் பங்கி நேத்திரத்தால் அணிந்து*
பற்றி நின்று ஆயர் கடைத்தலையே*
பாடவும் ஆடக்கண்டேன்* அன்றிப்பின்-
மற்றொருவர்க்கு என்னைப் பேசலொட்டேன்*
மாலிருஞ்சோலை எம் ஆயற்கல்லால்*
கொற்றவனுக்கு இவளாம் என்றெண்ணிக்*
கொடுமின்கள் கொடீராகில் கோழம்பமே.* 3.4.5.
சிந்துரமிலங்கத் தன் திருநெற்றிமேல்*
திருத்திய கோறம்பும் திருக்குழலும்*
அந்தரம் முழவம் தண் தழைக் காவின்கீழ்*
வரும் ஆயரோடு உடன் வளைகோல் வீச*
அந்தம் ஒன்றில்லாத ஆயப் பிள்ளை*
அறிந்தறிந்து இவ்வீதி போதுமாகில்*
பந்துகொண்டானென்று வளைத்து வைத்துப்*
பவளவாய் முறுவலும் காண்போம் தோழீ!* 3.4.6.
சாலப்பல் நிரைப்பின்னே தழைக்காவின்கீழ்*
தன் திருமேனி நின்றொளி திகழ*
நீல நல் நறுங் குஞ்சி நேத்திரத்தால் அணிந்து*
பல்லாயர் குழாம் நடுவே*
கோலச் செந்தாமரைக் கண் மிளிரக்*
குழல் ஊதி இசை பாடிக் குனித்து* ஆயரோடு-
ஆலித்து வருகின்ற ஆயப் பிள்ளை*
அழகுகண்டு என்மகள் அயர்க்கின்றதே.* 3.4.7.
சிந்துரப் பொடிக்கொண்டு சென்னி அப்பித்*
திருநாமம் இட்டு அங்கோர் இலையந் தன்னால்*
அந்தரமின்றித் தன்னெறி பங்கியை*
அழகிய நேத்திரத்தால் அணிந்து*
இந்திரன் போல் வரும் ஆயப்பிள்ளை*
எதிர்நின்று அங்கு இனவளை இழவேல் அன்ன*
சந்தியில் நின்று கண்டீர் நங்கைதன்*
துகிலொடு சரிவளை கழல்கின்றதே.* 3.4.8.
வலங்காதின் மேல் தோன்றிப் பூவணிந்து*
மல்லிகை வனமாலை மௌவல் மாலை*
சிலிங்காரத்தால் குழல் தாழவிட்டுத்*
தீங்குழல் வாய்மடுத் தூதி யூதி*
அலங்காரத்தால் வரும் ஆய்ப்பிள்ளை*
அழகுகண்டு என்மகள் ஆசைப்பட்டு*
விலங்கி நில்லாது எதிர் நின்று கண்டீர்*
வெள்வளை கழன்று மெய் மெலிகின்றதே.* 3.4.9.
விண்ணின்மீது அமரர்கள் விரும்பித்தொழ*
மிறைத்து ஆயர்ப் பாடியில் வீதியூடே*
கண்ணன் காலிப்பின்னே எழுந்தருளக்கண்டு*
இளவாய்க் கன்னிமார் காமுற்ற-
வண்ணம்* வண்டமர் பொழில் புதுவையர்கோன்*
விட்டுசித்தன் சொன்னமாலை பத்தும்*
பண்ணின்பம் வரப்பாடும் பத்தருள்ளார்*
பரமான வைகுந்தம் நண்ணுவரே.* (2) 3.4.10.
ஐந்தாம் திருமொழி
அட்டுக்குவி சோற்றுப் பருப்பதமும்*
தயிர் வாவியும் நெய் அளறும் அடங்கப்-
பொட்டத் துற்று* மாரிப் பகைபுணர்த்த*
பொருமா கடல்வண்ணன் பொறுத்தமலை*
வட்டத் தடங்கண் மடமான் கன்றினை*
வலைவாய்ப் பற்றிக் கொண்டு* குற மகளிர்-
கொட்டைத் தலைப் பால் கொடுத்து வளர்க்கும்*
கோவர்த்தனமென்னும் கொற்றக்குடையே.* (2) 3.5.1.
வழுவொன்றுமில்லாச் செய்கை வானவர்கோன்*
வலிப்பட்டு முனிந்து விடுக்கப்பட்ட*
மழைவந்து எழுநாள் பெய்து மாத்தடைப்ப*
மதுசூதன் எடுத்து மறித்தமலை*
இழவு தரியாததோர் ஈÖற்றுப்பிடி*
இளஞ்சீயம் தொடர்ந்து முடுகுதலும்*
குழவியிடைக் காலிட்டு எதிர்ந்து பொரும்*
கோவர்த்தனம் என்னும் கொற்றக்குடையே.* 3.5.2.
அம்மைத் தடங்கண் மடவாய்ச்சியரும்*
ஆனாயரும் ஆநிரையும் அலறி*
எம்மைச் சரண் என்று கொள் என்றிரப்ப*
இலங்காழிக்கை எந்தை எடுத்தமலை*
தம்மைச் சரணென்ற தம் பாவையரைப்*
புனமேய்கின்ற மானினம் காண்மின் என்று*
கொம்மைப் புயம் குன்றர் சிலைகுனிக்கும்*
கோவர்த்தனம் என்னும் கொற்றக்குடையே.* 3.5.3.
கடுவாய்ச்சின வெங்கண் களிற்றினுக்குக்*
கவளம் எடுத்துக் கொடுப்பான் அவன் போல்*
அடிவாய் உறக்கை இட்டு எழப் பறித்திட்டு*
அமரர் பெருமான் கொண்டு நின்றமலை*
கடல்வாய்ச் சென்று மேகம் கவிழ்ந்து இறங்கிக்*
கதுவாய்ப்பட நீர்முகந் தேறி* எங்கும்-
குடவாய்ப்பட நின்று மழைபொழியும்*
கோவர்த்தனம் என்னும் கொற்றக்குடையே.* 3.5.4.
வானத்தில் உள்ளÖÖர்! வலியீர் உள்ளÖரேல்*
அறையோ! வந்து வாங்குமின் என்பவன் போல்*
ஏனத்துருவாகிய ஈசன் எந்தை*
இடவன் எழ வாங்கி எடுத்தமலை*
கானக் களியானைதன் கொம்பு இழந்து*
கதுவாய் மதம் சோரத் தன் கையெடுத்து*
கூனல் பிறைவேண்டி அண்ணாந்து நிற்கும்*
கோவர்த்தனம் என்னும் கொற்றக்குடையே.* 3.5.5.
செப்பாடுடைய திருமாலவன் தன்*
செந்தாமரைக் கைவிரல் ஐந்தினையும்*
கப்பாக மடுத்து மணிநெடுந்தோள்*
காம்பாகக் கொடுத்துக் கவித்தமலை*
எப்பாடும் பரந்திழி தெள்ளருவி*
இலங்கு மணி முத்து வடம் பிறழ*
குப்பாயமென நின்று காட்சி தரும்*
கோவர்த்தனம் என்னும் கொற்றக்குடையே.* 3.5.6.
படங்கள் பலவும் உடைப் பாம்பரையன்*
படர் பூமியைத் தாங்கிக் கிடப்பவன்போல்*
தடங்கை விரல் ஐந்தும் மலர வைத்துத்*
தாமோதரன் தாங்கு தடவரைதான்*
அடங்கச் சென்று இலங்கையை ஈÖடழித்த*
அனுமன் புகழ் பாடித் தம் குட்டன்களை*
குடங்கைக் கொண்டு மந்திகள் கண்வளர்த்தும்*
கோவர்த்தனம் என்னும் கொற்றக்குடையே.* 3.5.7.
சலமாமுகில் பல்கணப் போர்க்களத்துச்*
சரமாரி பொழிந்து எங்கும் பூசலிட்டு*
நலிவான் உறக் கேடகம் கோப்பவன் போல்*
நாராயணன் முன்முகம் காத்தமலை*
இலை வேய் குரம்பைத் தவ மாமுனிவர்*
இருந்தார் நடுவேசென்று அணார் சொறிய*
கொலைவாய்ச்சின வேங்கைகள் நின்று உறங்கும்*
கோவர்த்தனம் என்னும் கொற்றக்குடையே.* 3.5.8.
வன்பேய் முலையுண்ட தோர் வாயுடையன்*
வன் தூணென நின்றதோர் வன் பரத்தை*
தன்பேரிட்டுக் கொண்டு தரணி தன்னில்*
தாமோதரன் தாங்கு தடவரைதான்*
முன்பே வழிகாட்ட முசுக் கணங்கள்*
முதுகில் பெய்து தம்முடைக் குட்டன்களை*
கொம்பு ஏற்றியிருந்து குதி பயிற்றும்*
கோவர்த்தனம் என்னும் கொற்றக்குடையே.* 3.5.9.
கொடியேறு செந்தாமரைக் கைவிரல்கள்*
கோலமும் அழிந்தில வாடிற்றில*
வடிவேறு திருவுகிர் நொந்துமில*
மணிவண்ணன் மலையுமோர் சம்பிரதம்*
முடியேறிய மாமுகிற் பல் கணங்கள்*
முன்னெற்றி நரைத்தன போல* எங்கும்-
குடியேறி இருந்து மழைபொழியும்*
கோவர்த்தனம் என்னும் கொற்றக்குடையே*. 3.5.10.
அரவில் பள்ளிகொண்டு அரவம் துரந்திட்டு*
அரவப் பகையூர்தி அவனுடைய*
குரவிற்கொடி முல்லைகள் நின்று உறங்கும்*
கோவர்த்தனம் என்னும் கொற்றக்குடைமேல்*
திருவிற் பொலிமறை வாணர் புத்தூர்த்-
திகழ்* பட்டர்பிரான் சொன்ன மாலைபத்தும்*
பரவு மன நன்குடைப் பத்தருள்ளார்*
பரமான வைகுந்தம் நண்ணுவரே.* (2) 3.5.11.
ஆறாம் திருமொழி
நாவலம் பெரிய தீவினில் வாழும்*
நங்கைமீர்கள்! இதோர் அற்புதம் கேளÖர்*
தூவலம்புரி உடைய திருமால்*
தூய வாயில் குழலோசை வழியே*
கோவலர் சிறுமியர் இளங்கொங்கை-
குதுகலிப்ப* உடல் உள் அவிழ்ந்து* எங்கும்
காவலும் கடந்து கயிறு மாலையாகி*
வந்து கவிழ்ந்து நின்றனரே.* (2) 3.6.1.
இடவணரை இடத் தோளொடு சாய்த்து*
இருகை கூடப் புருவம் நெரிந்து ஏற*
குடவயிறு படவாய் கடை கூடக்*
கோவிந்தன் குழல்கொடு ஊதினபோது*
மடமயில்களொடு மான் பிணைபோலே*
மங்கைமார்கள் மலர்க் கூந்தல் அவிழ*
உடை நெகிழ ஓர் கையால் துகில்பற்றி*
ஒல்கி ஓடு அரிக் கண் ஓட நின்றனரே.* 3.6.2.
வான் இளவரசு வைகுந்தக் குட்டன்*
வாசுதேவன் மதுரைமன்னன்* நந்த-
கோன் இளவரசு கோவலர் குட்டன்*
கோவிந்தன் குழல்கொடு ஊதினபோது*
வானிளம் படியர் வந்து வந்தீண்டி*
மனமுருகி மலர்க் கண்கள் பனிப்ப*
தேனளவு செறிகூந்தலவிழச்*
சென்னி வேர்ப்பச் செவிசேர்த்து நின்றனரே.* 3.6.3.
தேனுகன் பிலம்பன் காளியன் என்னும்*
தீப்பப் பூடுகள் அடங்க உழக்கி*
கானகம்படி உலாவி உலாவிக்*
கருஞ் சிறுக்கன் குழலூதின போது*
மேனகையொடு திலோத்தமை அரம்பை*
உருப்பசி அரவர் வெள்கி மயங்கி*
வானகம் படியில் வாய் திறப்பின்றி*
ஆடல் பாடலவை மாறினர் தாமே*. 3.6.4.
முன்நரசிங்கமதாகி* அவுணன்-
முக்கியத்தை முடிப்பான், மூவுலகில்-
மன்னர் அஞ்சும்* மதுசூதனன் வாயில்*
குழலினோசை செவியைப் பற்றி வாங்க*
நன்னரம்புடைய தும்புருவோடு*
நாரதனும் தம்தம் வீணை மறந்து*
கின்னர மிதுனங்களும் தம்தம்*
கின்னரம் தொடுகிலோம் என்றனரே.* 3.6.5.
செம்பெருந் தடங்கண்ணன் திரள்தோளன்*
தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம்*
நம் பரமன் இந்நாள் குழலூதக்*
கேட்டவர்கள் இடர் உற்றன கேளÖர்*
அம்பரம் திரியும் காந்தப்பர் எல்லாம்*
அமுத கீத வலையால் சுருக்குண்டு*
நம் பரமன் என்று நாணி மயங்கி*
நைந்து சோர்ந்து கை மறித்து நின்றனரே.* 3.6.6.
புவியுள் நான் கண்டதோர் அற்புதம் கேளÖர்*
பூணி மேய்க்கும் இளங் கோவலர் கூட்டத்து*
அவையுள் நாகத்தணையான் குழலூத*
அமர லோகத்தளவும் சென்றிசைப்ப*
அவியுணா மறந்து வானவரெல்லாம்*
ஆயர்பாடி நிறையப் புகுந்து ஈண்டி*
செவியுணாவின் சுவை கொண்டு மகிழ்ந்து*
கோவிந்தனைத் தொடர்ந்து என்றும் விடாரே.* 3.6.7.
சிறுவிரல்கள் தடவிப் பரிமாறச்*
செங்கண் கோடச் செய்ய வாய் கொப்பளிக்க*
குறு வெயர்ப் புருவம் கூடலிப்பக்*
கோவிந்தன் குழல் கொடு ஊதினபோது*
பறவையின் கணங்கள் கூடு துறந்து*
வந்து சூழ்ந்து படு காடு கிடப்ப*
கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டுக்*
கவிழ்ந்து இறங்கிச் செவி ஆட்டகில்லாவே.* 3.6.8
திரண்டு எழு தழை மழை முகில்வண்ணன்*
செங்கமல மலர்சூழ் வண்டினம் போலே*
சுருண்டு இருண்ட குழல் தாழ்ந்த முகத்தான்*
ஊதுகின்ற குழலோசை வழியே*
மருண்டு மான் கணங்கள் மேய்கை மறந்து*
மேய்ந்த புல்லும் கடைவாய் வழிசோர*
இரண்டுபாடும் துலங்காப் புடை பெயரா*
எழுது சித்திரங்கள் போல நின்றனவே.* 3.6.9.
கருங்கண் தோகைமயிற் பீலியணிந்து*
கட்டி நன்கு உடுத்த பீதகவாடை*
அருங் கலம் உருவின் ஆயர் பெருமான்*
அவன் ஒருவன் குழலூதின போது*
மரங்கள் நின்று மது தாரைகள் பாயும்*
மலர்கள் வீழும் வளர் கொம்புகள் தாழும்*
இரங்கும் கூம்பும் திருமால் நின்ற நின்ற-
பக்கம் நோக்கி* அவை செய்யும் குணமே.* 3.6.10.
குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சிக்*
கோவிந்தனுடைய கோமள வாயில்*
குழல் முழைஞ்சுகளினூடு குமிழ்த்துக்*
கொழித்து இழிந்த அமுதப் புனல் தன்னை*
குழல் முழவம் விளம்பும் புதுவைக்கோன்*
விட்டுசித்தன் விரித்த தமிழ்வல்லார்*
குழலை வென்ற குளிர் வாயினர் ஆகிச்*
சாது கோட்டியுள் கொள்ளப் படுவாரே.* (2) 3.6.11.
ஏழாம் திருமொழி
ஐய புழுதி உடம்பளைந்து* இவள் பேச்சும் அலந்தலையாய்*
செய்ய நூலின் சிற்றாடை* செப்பன் உடுக்கவும் வல்லள் அல்லள்*
கையினில் சிறு தூதையோடு* இவள் முற்றில் பிரிந்தும் இலள்*
பையரவணைப் பள்ளியானொடு* கைவைத்து இவள் வருமே.* (2) 3.7.1.
வாயில் பல்லும் எழுந்தில* மயிரும் முடி கூடிற்றில*
சாய்விலாத குறுந்தலைச்* சில பிள்ளைகளோடு இணங்கி*
தீ இணக்கு இணங்காடி வந்து* இவள் தன்னன்ன செம்மைசொல்லி*
மாயன் மாமணிவண்ணன் மேல்* இவள் மாலுறுகின்றாளே.* 3.7.2.
பொங்கு வெண்மணல் கொண்டு* சிற்றிலும் முற்றத்து இழைக்கல் உறில்*
சங்கு சக்கரம் தண்டு வாள்* வில்லும் அல்லது இழைக்கல் உறாள்*
கொங்கை இன்னம் குவிந்து எழுந்தில* கோவிந்தேனாடு இவளை*
சங்கையாகி என்னுள்ளம்* நாள்தொறும் தட்டுளுப்பாகின்றதே.* 3.7.3.
ஏழை பேதை ஓர் பாலகன் வந்து* என் பெண்மகளை எள்கி*
தோழிமார் பலர் கொண்டு போய்ச்* செய்த சூழ்ச்சியை யார்க்குரைக்கேன்?*
ஆழியானென்னும் ஆழம் மோழையில்* பாய்ச்சி அகப்படுத்தி*
மூழை உப்பு அறியாதது என்னும்* மூதுரையும் இலளே.* 3.7.4.
நாடும் ஊரும் அறியவே போய்* நல்ல துழாய் அலங்கல் –
சூடி* நாரணன் போம் இடமெல்லாம்* சோதித்து ஊழி தருகின்றாள்*
கேடு வேண்டுகின்றார் பலர் உளர்* கேசவேனாடு இவளை*
பாடு காவல் இடுமின் என்றென்று* பார் தடுமாறினதே.* 3.7.5.
பட்டம் கட்டிப் பொன் தோடு பெய்து* இவள் பாடகமும் சிலம்பும்*
இட்டமாக வளர்த்து எடுத்தேனுக்கு* என்னோடு இருக்கலுறாள்*
பொட்டப் போய்ப் புறப்பட்டு நின்று* இவள் பூவைப் பூவண்ணாவென்னும்*
வட்டவார் குழல் மங்கைமீர்!* இவள் மாலுறுகின்றாளே.* 3.7.6.
பேசவும் தரியாத பெண்மையின்* பேதையேன் பேதை இவள்*
கூசமின்றி நின்றார்கள்* தம்மெதிர் கோல் கழிந்தான் மூழையாய்*
கேசவாவென்றும் கேடிலீயென்றும் *கிஞ்சுகம் வாய் மொழியாள்*
வாசவார் குழல் மங்கைமீர்!* இவள் மாலுறுகின்றாளே.* 3.7.7.
காறை பூணும் கண்ணாடி காணும்* தன் கையில் வளை குலுக்கும்*
கூறையுடுக்கும் அயர்க்கும்* தன் கொவ்வைச் செவ்வாய் திருத்தும்*
தேறித்தேறி நின்று ஆயிரம்பேர்த்* தேவன் திறம் பிதற்றும்*
மாறில் மாமணிவண்ணன் மேல்* இவள் மாலுறுகின்றாளே.* 3.7.8.
கைத் தலத்துள்ள மாடழியக்* கண்ணாலங்கள் செய்து* இவளை-
வைத்து வைத்துக் கொண்டு என்ன வாணிபம்?* நம்மை வடுப்படுத்தும்*
செய்த்தலை எழு நாற்றுப்போல்* அவன் செய்வன செய்து கொள்ள*
மைத்தட முகில் வண்ணன் பக்கல்* வளர விடுமின்களே.* 3.7.9.
பெருப் பெருத்த கண்ணாலங்கள் செய்து* பேணி நம் இல்லத்துள்ளே*
இருத்துவான் எண்ணி நாமிருக்க* இவளும் ஒன்று எண்ணுகின்றாள்*
மருத்துவப் பதம் நீங்கினாள் என்னும்* வார்த்தை படுவதன் முன்*
ஒருப் படுத்திடுமின் இவளை* உலகளந்தானிடைக்கே.* 3.7.10.
ஞாலமுற்றும் உண்டு ஆலிலைத் துயில்* நாராயணனுக்கு* இவள்-
மாலதாகி மகிழ்ந்தனள் என்று* தாயுரை செய்ததனை*
கோலமார் பொழில் சூழ் புதுவையர்கோன்* விட்டுசித்தன்சொன்ன*
மாலை பத்தும் வல்லவர்கட்கு* இல்லை வருதுயரே.* (2) 3.7.11.
எட்டாம் திருமொழி
நல்லதோர் தாமரைப் பொய்கை* நாண் மலர் மேல் பனி சோர*
அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு* அழகு அழிந்தால் ஒத்ததாலோ*
இல்லம் வெறியோடிற்றாலோ* என் மகளை எங்கும் காணேன்*
மல்லரை அட்டவன் பின்போய்* மதுரைப் புறம் புக்காள் கொலோ?* (2) 3.8.1.
ஒன்றும் அறிவொன்றில்லாத* உருவறைக் கோபாலர் தங்கள்*
கன்று கால் மாறுமா போலே* கன்னி இருந்தாளைக் கொண்டு*
நன்றும் கிறி செய்து போனான்* நாராயணன் செய்த தீமை*
என்றும் எமர்கள் குடிக்கு* ஓர் ஏச்சுக் கொல் ஆயிடுங் கொலோ?* 3.8.2.
குமரி மணம் செய்து கொண்டு* கோலம் செய்து இல்லத்து இருத்தி*
தமரும் பிறரும் அறியத்* தாமோதரற்கு என்று சாற்றி*
அமரர் பதியுடைத் தேவி* அரசாணியை வழிபட்டு*
துமிலம் எழப் பறை கொட்டித்* தோரணம் நாட்டிடுங் கொலோ?* 3.8.3.
ஒருமகள் தன்னையுடையேன்* உலகம் நிறைந்த புகழால்*
திருமகள் போல வளர்த்தேன்* செங்கண்மால்தான் கொண்டு போனான்*
பெருமகளாய்க் குடிவாழ்ந்து* பெரும் பிள்ளை பெற்ற அசோதை*
மருமகளைக் கண்டுகந்து* மணாட்டுப்புறம் செய்யுங் கொலோ?* 3.8.4.
தம் மாமன் நந்தகோபாலன்* தழீஇக் கொண்டு என் மகள் தன்னை*
செம்மாந்து இரு என்று சொல்லிச்* செழுங்கயற் கண்ணும் செவ்வாயும்*
கொம்மை முலையும் இடையும்* கொழும் பணைத் தோள்களும் கண்டிட்டு*
இம்மகளைப் பெற்ற தாயர்* இனித் தரியாரென்னுங் கொலோ?* 3.8.5.
வேடர் மறக்குலம் போலே* வேண்டிற்றுச் செய்து என்மகளை*
கூடிய கூட்டமேயாகக்* கொண்டு குடிவாழுங்கொலோ?*
நாடும் நகரும் அறிய* நல்லதோர் கண்ணாலம் செய்து*
சாடிறப் பாய்ந்த பெருமான்* தக்க ஆ கைப்பற்றுங்கொலோ?* 3.8.6.
அண்டத்தமரர் பெருமான்* ஆழியான் இன்று என்மகளை*
பண்டப் பழிப்புக்கள் சொல்லிப்* பரிசற ஆண்டிடுங் கொலோ?*
கொண்டு குடிவாழ்க்கை வாழ்ந்து* கோவலப் பட்டம் கவித்து*
பண்டை மணாட்டிமார் முன்னே* பாதுகாவல் வைக்குங்கொலோ?* 3.8.7.
குடியில் பிறந்தவர் செய்யும்* குணமொன்றும் செய்திலன் அந்தோ!*
நடையொன்றும் செய்திலன் நங்காய்!* நந்தகோபன் மகன் கண்ணன்*
இடை இருபாலும் வணங்க* இளைத்திளைத்து என் மகள் ஏங்கி*
கடை கயிறே பற்றி வாங்கிக்* கை தழும்பு ஏறிடுங் கொலோ?* 3.8.8.
வெண்ணிறத்தோய் தயிர்தன்னை* வெள்வரைப்பின் முன் எழுந்து*
கண்ணுறங்காதே இருந்து* கடையவும் தான் வல்லள்கொலோ?*
ஒண்ணிறத் தாமரைச் செங்கண்* உலகளந்தான் என்மகளை*
பண்ணறையாப் பணிகொண்டு *பரிசு அற அண்டிடுங்கொலோ?* 3.8.9.
மாயவன் பின் வழிசென்று* வழியிடை மாற்றங்கள் கேட்டு*
ஆயர்கள் சேரியிலும் புக்கு* அங்குத்தை மாற்றமும் எல்லாம்*
தாயவள் சொல்லிய சொல்லைத்* தண் புதுவைப்பட்டன் சொன்ன*
தூய தமிழ்ப் பத்தும் வல்லார்* தூமணிவண்ணனுக்காளரே.* (2) 3.8.10.
ஒன்பதாம் திருமொழி
என் நாதன் தேவிக்கு* அன்று இன்பப்பூ ஈயாதாள்*
தன் நாதன் காணவே* தண் பூமரத்தினை*
வன்னாதப் புள்ளால்* வலியப் பறித்திட்ட*
என் நாதன் வன்மையைப் பாடிப்பற* எம்பிரான் வன்மையைப் பாடிப்பற.* (2) 3.9.1.
என் வில்வலி கண்டு* போவென்று எதிர்வந்தான்*
தன் வில்லினோடும்* தவத்தை எதிர்வாங்கி*
முன் வில் வலித்து* முது பெண்ணுயிருண்டான்*
தன் வில்லின் வன்மையைப் பாடிப்பற* தாசரதி தன்மையைப் படிப்பற.* 3.9.2.
உருப்பிணி நங்கையைத்* தேரேற்றிக் கொண்டு*
விருப்புற்று அங்கேக* விரைந்து எதிர்வந்து*
செருக் குற்றான், வீரம் சிதைய* தலையைச்-
சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப்பற* தேவகி சிங்கத்தைப் பாடிப்பற.* 3.9.3.
மாற்றுத் தாய் சென்று* வனம் போகே என்றிட*
ஈற்றுத் தாய் பின்தொடர்ந்து* எம்பிரான்! என்றுஅழ*
கூற்றுத் தாய் சொல்லக்* கொடிய வனம் போன*
சீற்றமிலாதானைப் பாடிப்பற* சீதை மணாளனைப் பாடிப்பற.* 3.9.4.
பஞ்சவர் தூதனாய்ப்* பாரதம் கைசெய்து*
நஞ்சுமிழ் நாகம்* கிடந்த நல்பொய்கை புக்கு*
அஞ்சப்பணத்தின்மேல்* பாய்ந்திட்டு அருள் செய்த*
அஞ்சன வண்ணனைப் பாடிப்பற* அசோதைதன் சிங்கத்தைப் பாடிப்பற.* 3.9.5.
முடியொன்றி *மூவுலகங்களும் ஆண்டு* உன்-
அடியேற்கு அருளென்று* அவன்பின் தொடர்ந்த*
படியில் குணத்துப்* பரதநம்பிக்கு* அன்று-
அடிநிலை யீந்தானைப் பாடிப்பற* அயோத்தியர் கோமானைப் பாடிப்பற.* 3.9.6.
காளியன் பொய்கை* கலங்கப் பாய்ந்திட்டு* அவன்-
நீள் முடி ஐந்திலும்* நின்று நடம் செய்து*
மீள அவனுக்கு* அருள் செய்த வித்தகன்*
தோள்வலி வீரமே பாடிப்பற* தூமணி வண்ணனைப் பாடிப்பற.* 3.9.7.
தார்க்கு இளந் தம்பிக்கு* அரசீந்து* தண்டகம்-
நூற்றவள்* சொல் கொண்டு போகி* நுடங்கிடைச்-
சூர்ப்பணகாவைச்* செவியொடு மூக்கு* அவள்-
ஆர்க்க அரிந்தானைப் பாடிப்பற* அயோத்திக்கரசனைப் பாடிப்பற.* 3.9.8.
மாயச் சகடமுதைத்து* மருது இறுத்து*
ஆயர்களோடுபோய்* ஆநிரைகாத்து* அணி-
வேயின் குழலூதி* வித்தகனாய்நின்ற*
ஆயர்களேற்றினைப் பாடிப்பற* ஆநிரைமேய்த்தானைப் பாடிப்பற.* 3.9.9.
காரார் கடலை அடைத்திட்டு* இலங்கைபுக்கு*
ஓராதான் பொன்முடி* ஒன்பதோடொன்றையும்*
நேரா அவன் தம்பிக்கே* நீள் அரசீந்த*
ஆராவமுதனைப் பாடிப்பற* அயோத்தியர் வேந்தனைப் பாடிப்பற.* 3.9.10.
நந்தன் மதலையைக்* காகுத்தனை நவின்று*
உந்திபறந்த* ஒளியிழையார்கள் சொல்*
செந்தமிழ்த் தென்புதுவை* விட்டுசித்தன்சொல்*
ஐந்தினோடைந்தும் வல்லார்க்கு* அல்லலில்லையே.* (2) 3.9.11.
பத்தாம் திருமொழி
நெறிந்த கருங்குழல் மடவாய்!* நின்னடியேன் விண்ணப்பம்*
செறிந்த மணி முடிச்சனகன்* சிலையிறுத்து நினைக்கொணர்ந்தது-
அறிந்து* அரசுகளைகட்ட* அருந்தவத்தோன் இடை விலங்க*
செறிந்த சிலை கொடு தவத்தைச்* சிதைத்ததும் ஓரடையாளம்.* (2) 3.10.1.
அல்லியம் பூமலர்க் கோதாய்!* அடிபணிந்தேன் விண்ணப்பம்*
சொல்லுகேன் கேட்டருளாய்* துணை மலர்க்கண் மடமானே!*
எல்லியம் போது இனிது இருத்தல்* இருந்ததோர் இட வகையில்*
மல்லிகை மாமாலை கொண்டு* அங்கு ஆர்த்ததும் ஓரடையாளம்.* 3.10.2.
கலக்கிய மாமனத்தனளாய்க்* கைகேசி வரம் வேண்ட*
மலக்கிய மாமனத்தனனாய்* மன்னவனும் மறாதொழிய*
குலக் குமரா! காடுறையப் போ என்று *விடைகொடுப்ப*
இலக்குமணன் தன்னொடும்* அங்கு ஏகியது ஓரடையாளம்.* 3.10.3.
வாரணிந்த முலை மடவாய்!* வைதேவீ! விண்ணப்பம்*
தேரணிந்த அயோத்தியர் கோன்* பெருந்தேவீ! கேட்டருளாய்*
கூரணிந்த வேல் வலவன்* குகேனாடும் கங்கை தன்னில்*
சீரணிந்த தோழமை* கொண்டதும் ஓரடையாளம்.* 3.10.4.
மான் அமரும் மெல் நோக்கி!* வைதேவீ! விண்ணப்பம்*
கானமரும் கல் அதர் போய்க்* காடுறைந்த காலத்து*
தேனமரும் பொழிற் சாரல்* சித்திர கூடத்து இருப்ப*
பால் மொழியாய்! பரதநம்பி* பணிந்ததும் ஓரடையாளம்.* 3.10.5.
சித்திரகூடத்து இருப்பச்* சிறுகாக்கை முலைதீண்ட*
அத்திரமே கொண்டெறிய* அனைத்து உலகும் திரிந்தோடி*
வித்தகனே! இராமாவோ!* நின் அபயம் என்று அழைப்ப*
அத்திரமே அதன் கண்ணை* அறுத்ததும் ஓரடையாளம்.* 3.10.6.
மின்னொத்த நுண்ணிடையாய்!* மெய்யடியேன் விண்ணப்பம்*
பொன்னொத்த மான் ஒன்று* புகுந்து இனிது விளையாட*
நின் அன்பின் வழி நின்று* சிலைபிடித்து எம்பிரான் ஏக*
பின்னே அங்கு இலக்குமணன்* பிரிந்ததும் ஓரடையாளம்.* 3.10.7.
மைத்தகு மாமலர்க் குழலாய்!* வைதேவீ! விண்ணப்பம்*
ஒத்த புகழ் வானரக்கோன்* உடனிருந்து நினைத்தேட*
அத்தகுசீர் அயோத்தியர்கோன்* அடையாளம் இவை மொழிந்தான்*
இத்தகையால் அடையாளம்* ஈது அவன் கை மோதிரமே.* 3.10.8.
## திக்கு நிறை புகழாளன்* தீ வேள்விச் சென்ற நாள்*
மிக்க பெருஞ்சபை நடுவே* வில்லிறுத்தான் மோதிரம் கண்டு*
ஒக்குமால் அடையாளம்* அனுமான்! என்று* உச்சிமேல்-
வைத்துக் கொண்டு உகந்தனளால்* மலர்க்குழலாள் சீதையுமே*. (2) 3.10.9.
வாராரும் முலைமடவாள்* வைதேவிதனைக்கண்டு*
சீராரும் திறல் அனுமன்* தெரிந்துரைத்த அடையாளம்*
பாராரும் புகழ்ப் புதுவைப்* பட்டர்பிரான் பாடல்வல்லார்*
ஏராரும் வைகுந்தத்து* இமையவரோடு இருப்பாரே.* (2) 3.10.10.

