ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
பெரிய திருமொழி – நான்காம் பத்து – எட்டாம் திருமொழி
| 1318 | கவளயானைக் கொம்பொசித்த கண்ணனென்றும், காமருசீர்க் குவளைமேக மன்னமேனி கொண்டகோனென் னானையென்றும், தவளமாட நீடுநாங்கைத் தாமரையாள் கேள்வனென்றும், பவளவாயா ளென்மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே |
8.1 |
| 1319 | கஞ்சன்விட்ட வெஞ்சினத்த களிறடர்த்த காளையென்றும், வஞ்சமேவி வந்தபேயின் உயிரையுண்ட மாயனென்றும், செஞ்சொலாளர் நீடுநாங்கைத் தேவதேவ னென்றென்றோதி, பஞ்சியன்ன மெல்லடியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே |
8.2 |
| 1320 | அண்டர்கோனென் னானையென்றும் ஆயர்மாதர் கொங்கைபுல்கு செண்டனென்றும், நான்மறைகள் தேடியோடும் செல்வனென்றும், வண்டுலவு பொழில்கொள்நாங்கை மன்னுமாய னென்றென்றோதி, பண்டுபோலன் றென்மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே |
8.3 |
| 1321 | கொல்லையானாள் பரிசழிந்தாள் கோல்வளையார் தம்முகப்பே, மல்லைமுன்னீர் தட்டிலங்கை கட்டழித்த மாயனென்றும், செல்வம்மல்கு மறையோர்நாங்கை தேவதேவ னென்றென்றோதி, பல்வளையா ளென்மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே |
8.4 |
| 1322 | அரக்கராவி மாளவன்று ஆழ்கடல்சூ ழிலங்கைசெற்ற, குரக்கரச னென்றும்கோல வில்லியென்றும், மாமதியை நெருக்குமாட நீடுநாங்கை நின்மலன்தா னென்றென்றோதி, பரக்கழிந்தா ளென்மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே |
8.5 |
| 1323 | ஞாலமுற்று முண்டுமிழிந்த நாதனென்றும், நானிலஞ்சூழ் வேலையன்ன கோலமேனி வண்ணனென்றும், மேலெழுந்து சேலுகளும் வயல்கொள்நாங்கைத் தேவதேவ னென்றென்றோதி, பாலின்நல்ல மென்மொழியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே |
8.6 |
| 1324 | நாடியென்ற னுள்ளொங்கொண்ட நாதனென்றும், நான்மறைகள் தேடியென்றும் காணமாட்டாச் செல்வனென்றும், சிறைகொள்வண்டு சேடுலவு பொழில்கொள்நாங்கைத் தேவதேவ னென்றென்றோதி, பாடகம்சேர் மெல்லடியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே |
8.7 |
| 1325 | உலகமேத்து மொருவனென்றும் ஒண்சுடரோ டும்பரெய்தா, நிலவுமாழிப் படையனென்றும் நேசனென்றும், தென்திசைக்குத் திலதமன்ன மறையோர்நாங்கைத் தேவதேவ னென்றென்றோதி, பலருமேச வென்மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே |
8.8 |
| 1326 | கண்ணனென்றும் வானவர்கள் காதலித்து மலர்கள்தூவும், எண்ணனென்று மின்பனென்றும் ஏழுலுகுக் காதியென்றும், திண்ணமாட நீடுநாங்கைத் தேவதேவ னென்றென்றோதி, பண்ணினன்ன மென்மொழியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே |
8.9 |
| 1327 | பாருள்நல்ல மறையோர்நாங்கைப் பார்த்தன்பள்ளி செங்கண்மாலை, வார்கொள்நல்ல முலைமடவாள் பாடலைந்தாய் மொழிந்தமாற்றம், கூர்கொள்நல்ல வேல்கலியன் கூறுதமிழ் பத்தும்வல்லார், ஏர்கொள்நல்ல வைகுந்தத்துள் இன்பம்நாளு மெய்துவாரே |
8.10 |
ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!

