ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
பெரிய திருமொழி – மூன்றாம் பத்து – ஐந்தாம் திருமொழி
| 1188 | வந்துன தடியேன் மனம்புகுந்தாய் புகுந்ததற்பின் வணங்கும்,என் சிந்தனைக் கினியாய். திருவே என் னாருயிரே, அந்தளி ரணியா ரசோகி ளிளந்தளிர்கள் கலந்து, அவை யெங்கும் செந்தழல் புரையும் திருவாலி யம்மானே. |
5.1 |
| 1189 | நீலத் தடவரை மாமணி நிகழக் கிடந்ததுபோல், அரவணை வேலைத் தலைக்கிடந்தா யடியேன் மனத்திருந்தாய், சோலைத் தலைக்கண மாமயில் நடமாட மழைமுகில் போன்றெழுந்து, எங்கும் ஆலைப் புகைகமழும் அணியாலி யம்மானே. |
5.2 |
| 1190 | நென்னல்போய் வருமென்றென் றெண்ணி யிராமையென் மனத்தே புகுந்தது, இம்மைக் கென்றிருந்தே நெறிநீர் வளஞ்செறுவில், செந்நெற் கூழை வரம்பொரீஇ அரிவார் முகத்தெழு வாளைபோய், கரும்பு அந்நற் காடணையும் அணியாலி யம்மானே. |
5.3 |
| 1191 | மின்னில் மன்னு _டங்கிடை மடவார்தம் சிந்தை மறந்து வந்து,நின் மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாயால், புன்னை மன்னு செருந்தி வண்பொழில் வாயகன் பணைகள் கலந்தெங்கும், அன்னம் மன்னும் வயலணி ஆலி யம்மானே. |
5.4 |
| 1192 | நீடு பன்மலர் மாலையிட்டு நின்னிணையடி தொழுதேத்தும், என்மனம் வாட நீநினையேல் மரமெய்த மாமுனிவா, பாட லின்னொலி சங்கி நோசை பரந்து பல்பணை யால்மலிந்து, எங்கும் ஆட லோசையறா அணியாலி யம்மானே. |
5.5 |
| 1193 | கந்த மாமல ரெட்டுமிட்டு நின்காமர் சேவடி கைதொழுதெழும், புந்தியேன் மனத்தே புகுந்தாயைப் போகலொட்டேன், சந்தி வேள்வி சடங்கு நான்மறை ஓதி யோதுவித் தாதி யாய்வரும், அந்த ணாள ரறாவணியாலி யம்மானே. |
5.6 |
| 1194 | உலவுதிரைக் கடற்பள்ளி கொண்டு வந்துன் அடியேன் மனம்புகுந்த,அப் புலவ. புண்ணிய னே.புகுந் தாயைப் போகலொட்டேன், நிலவு மலர்ப்புன்னை நாழல் நீழல் தண்டாமரை மலரின் மிசை,மலி அலவன் கண்படுக்கும் அணியாலி யம்மானே. |
5.7 |
| 1195 | சங்கு தங்கு தடங்கடல் கடன்மல்லை யுள்கிடந்தாய், அருள்புரிந்து இங்கென்னுள் புகுந்தா யினிப்போயி நாலறையோ, கொங்கு செண்பக மல்லிகை மலர்ப்புல்கி இன்னிள வண்டு போய்,இளம் தெங்கின் தாதளையும் திருவாலி யம்மானே. |
5.8 |
| 1196 | ஓதி யாயிர நாமமும் பணிந்தேத்தி நின்னடைந் தேற்கு,ஒரு பொருள் வேதியா. அரையா.உரையாய் ஒருமாற்றமெந்தாய், நீதி யாகிய வேதமா முனியாளர் தோற்ற முரைத்து, மற்றவர்க் காதியாய் இருந்தாய். அணியாலி யம்மானே. |
5.9 |
| 1197 | புல்லி வண்டறையும் பொழில் புடைசூழ் தென்னாலி யொருந்த மாயனை, கல்லின் மன்னு திண்டோள் கலிய னொலிசெய்த, நல்ல இன்னிசை மாலை நாலுமோ ரைந்துமொன் றும்நவின்று, தாமுடன் வல்ல ராயுரைப் பார்க்கிட மாகும் வானுலகே. |
5.10 |
ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!

