ஒன்றாம் திருமொழி


பெரியாழ்வார் அருளிச்செய்த
ஐந்தாம் பத்து-முதல் திருமொழி – வாக்குத்தூய்மை

 

433 வாக்குத்தூய்மையிலாமையினாலே
மாதவா. உன்னைவாய்க்கொள்ளமாட்டேன்
நாக்குநின்னையல்லால்அறியாது
நானதஞ்சுவன்என்வசமன்று
மூர்க்குப்பேசுகின்றானிவனென்று
முனிவாயேலும்என்நாவினுக்குஆற்றேன்
காக்கைவாயிலும்கட்டுரைகொள்வர்
காரணா. கருளக்கொடியானே.
1

 

434 சழக்குநாக்கொடுபுன்கவிசொன்னேன்
சங்குசக்கரமேந்துகையனே.
பிழைப்பராகிலும்தம்மடியார்சொல்
பொறுப்பது பெரியோர்கடனன்றே
விழிக்கும்கண்ணிலேன்நின்கண்மற்றல்லால்
வேறொருவரோடுஎன்மனம்பற்றாது
உழைக்குஓர்புள்ளிமிகையன்றுகண்டாய்
ஊழியேழுலகுண்டுமிழ்ந்தானே.
2

 

435 நன்மைதீமைகளொன்றும்அறியேன்
நாரணா. என்னும்இத்த்னையல்லால்
புன்மையால்உன்னைப்புள்ளுவம்பேசிப்
புகழ்வானன்றுகண்டாய்திருமாலே.
உன்னுமாறுஉன்னைஒன்றும்அறியேன்
ஓவாதேநமோநாரணா. என்பன்
வன்மையாவதுஉன்கோயிலில்வாழும்
வைட்டணவனென்னும்வன்மைகண்டாயே.
3

 

436 நெடுமையால்உலகேழுமளந்தாய்.
நின்மலா. நெடியாய். அடியேனைக்
குடிமைகொள்வதற்குஐயுறவேண்டா
கூறைசோறுஇவைவேண்டுவதில்லை
அடிமையென்னுமக்கோயின்மையாலே
அங்கங்கேஅவைபோதரும்கண்டாய்
கொடுமைக்கஞ்சனைக்கொன்று நின்தாதை
கோத்தவன்தளைகோள்விடுத்தானே.
4

 

437 தோட்டம்இல்லவள்ஆத்தொழுஓடை
துடவையும்கிணறும்இவையெல்லாம்
வாட்டமின்றிஉன்பொன்னடிக்கீழே
வளைப்பகம்வகுத்துக்கொண்டிருந்தேன்
நாட்டுமானிடத்தோடுஎனக்குஅரிது
நச்சுவார்பலர்கேழலொன்றாகி
கோட்டுமண்கொண்டகொள்கையினானே.
குஞ்சரம்வீழக்கொம்பொசித்தானே.
5

 

438 கண்ணா. நான்முகனைப்படைத்தானே.
காரணா. கரியாய். அடியேன்நான்
உண்ணாநாள்பசியாவதொன்றில்லை
ஓவாதேநமோநாரணாவென்று
எண்ணாநாளும்இருக்கெசுச்சாம
வேதநாண்மலர்கொண்டுஉன்பாதம்
நண்ணாநாள் அவைதத்துறுமாகில்
அன்றுஎனக்குஅவைபட்டினிநாளே.
6

 

439 வெள்ளைவெள்ளத்தின்மேல்ஒருபாம்பை
மெத்தையாகவிரித்து அதன்மேலே
கள்ளநித்திரைகொள்கின்றமார்க்கம்
காணலாங்கொல் என்றாசையினாலே
உள்ளம்சோரஉகந்தெதிர்விம்மி
உரோமகூபங்களாய் கண்ணநீர்கள்
துள்ளம்சோரத்துயிலணைகொள்ளேன்
சொல்லாய்யான்உன்னைத்தத்துறுமாறே.
7

 

440 வண்ணமால்வரையேகுடையாக
மாரிகாத்தவனே. மதுசூதா.
கண்ணனே. கரிகோள்விடுத்தானே.
காரணா. களிறட்டபிரானே.
எண்ணுவாரிடரைக்களைவானே.
ஏத்தரும்பெருங்கீர்த்தியினானே.
நண்ணிநான்உன்னைநாள்தொறும்ஏத்தும்
நன்மையேஅருள்செய்எம்பிரானே.
8

 

441 நம்பனே. நவின்றேத்தவல்லார்கள்
நாதனே. நரசிங்கமதானாய்.
உம்பர்கோனுலகேழும்அளந்தாய்
ஊழியாயினாய். ஆழிமுன்னேந்தி
கம்பமாகரிகோள்விடுத்தானே.
காரணா. கடலைக்கடைந்தானே.
எம்பிரான். என்னையாளுடைத்தேனே.
ஏழையேனிடரைக்களையாயே.
9

 

442 காமர்தாதைகருதலர்சிங்கம்
காணவினியகருங்குழல்குட்டன்
வாமனன்என்மரகதவண்ணன்
மாதவன்மதுசூதனன்தன்னை
சேமநன்கமரும்புதுவையர்கோன்
விட்டுசித்தன்வியந்தமிழ்பத்தும்
நாமமென்றுநவின்றுரைப்பார்கள்
நண்ணுவார்ஒல்லைநாரணனுலகே.
10