ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
பெரிய திருமொழி – இரண்டாம் பத்து – இரண்டாம் திருமொழி
| 1058 | காசை யாடை மூடியோடிக் காதல்செய் தானவனூர், நாச மாக நம்பவல்ல நம்பி நம்பெருமான், வேயி னன்ன தோள்மடவார் வெண்ணெயுண் டானிவனென்று ஏச நின்ற வெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே. |
2.1 |
| 1059 | தைய லாள்மேல் காதல்செய்த தானவன் வாளரக்கன், பொய்யி லாத பொன்முடிக ளொன்பதோ டொன்றும்,அன்று செய்த வெம்போர் தன்னி லங்கோர் செஞ்சரத் தாலுருள, எய்த வெந்தை யெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே. |
2.2 |
| 1060 | முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து,அரக்கன் மன்னூர் தன்னை வாளியினால் மாள முனிந்து அவனே பின்னோர் தூத னாதிமன்னர்க் காகிப் பெருநிலத்தார், இன்னார் தூத னெனநின்றா னெவ்வுள் கிடந்தானே. |
2.3 |
| 1061 | பந்த ணைந்த மெல்விரலாள் பாவைதன் காரணத்தால், வெந்தி றலே றேழும்வென்ற வேந்தன் விரிபுகழ்சேர், நந்தன் மைந்த னாகவாகும் நம்பி நம்பெருமான், எந்தை தந்தை தம்பெருமானெவ்வுள் கிடந்தானே. |
2.4 |
| 1062 | பால நாகி ஞாலமேழு முண்டுபண் டாலிலைமேல், சால நாளும் பள்ளிகொள்ளும் தாமரைக் கண்ணன்எண்ணில், நீல மார்வண் டுண்டுவாழும் நெய்தலந் தண்கழனி, ஏல நாறும் பைம்புறவி லெவ்வுள் கிடந்தானே. |
2.5 |
| 1063 | சோத்த நம்பி யென்றுதொண்டர் மிண்டித் தொடர்ந்தழைக்கும், ஆத்தனம்பி செங்கணம்பி யாகிலும் தேவர்க்கெல்லாம், மூத்த நம்பி முக்கணம்பி யென்று முனிவர்த்தொழு- தேத்தும், நம்பி யெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே. |
2.6 |
| 1064 | திங்க ளப்பு வானெரிகாலாகி, திசைமுகனார் தங்க ளப்பன் சாமியப்பன் பாகத் திருந்த,வண்டுண் தொங்க லப்பு நீண்முடியான் சூழ்கழல் சூடநின்ற, எங்க ளப்ப னெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே. |
2.7 |
| 1065 | முனிவன் மூர்த்தி மூவராகி வேதம் விரித்துரைத்த புனிதன், பூவை வண்ணனண்ணல் புண்ணியன் விண்ணவர்கோன், தனியன் சேயன் தானொருவன் ஆகிலும் தன்னடியார்க்கு இனியன், எந்தை யெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே. |
2.8 |
| 1066 | பந்தி ருக்கும் மெல்விரலாள் பாவை பனிமலராள், வந்தி ருக்கும் மார்வன்நீல மேனி மணிவண்ணன், அந்த ரத்தில் வாழும் வானோர் நாயக னாயமைந்த, இந்தி ரற்கும் தம்பெருமா னெவ்வுள் கிடந்தானே. |
2.9 |
| 1067 | இண்டை கொண்டு தொண்டரேத்த எவ்வுள் கிடந்தானை, வண்டு பாடும் பைபுறவில் மங்கையர் கோன்கலியன், கொண்ட சீரால் தண்டமிழ்செய் மாலையீ ரைந்தும்வல்லார், அண்ட மாள்வ தாணையன்றே லாள்வ ரருலகே. |
2.10 |
ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!

