இரண்டாம் திருமொழி


ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:

ஸ்ரீ திருமங்கையாழ்வார் அருளிச்செய்த

பெரிய திருமொழி – நான்காம் பத்து – இரண்டாம் திருமொழி

1258 கம்ப மாகட லடைத்திலங் கைக்குமன்
கதிர்முடி யவைபத்தும்
அம்பி னாலறுத்து, அரசவன் தம்பிக்கு
அளித்தவ னுறைகோயில்
செம்ப லாநிரை செண்பகம் மாதவி
சூதகம் வாழைகள்சூழ்
வம்பு லாம்கமு கோங்கிய நாங்கூர்
வண்புரு டோத்தமமே
2.1

 

1259 பல்ல வந்திகழ் பூங்கடம் பேறியக்
காளியன் பணவரங்கில்,
ஒல்லை வந்துறப் பாய்ந்தரு நடஞ்செய்த
உம்பர்க்கோ னுறைகோயில்,
நல்ல வெந்தழல் மூன்றுநால் வேதமை
வேள்வியோ டாறங்கம்,
வல்ல வந்தணர் மல்கிய நாங்கூர்
வண்புரு டோத்தமமே
2.2

 

1260 அண்ட ரானவர் வானவர் கோனுக்கென்
றமைத்தசோ றதுவெல்லாம்
உண்டு, கோநிரை மேய்த்தவை காத்தவன்
உகந்தினி துறைகோயில்,
கொண்ட லார்முழ வில்குளிர் வார்பொழில்
குலமயில் நடமாட,
வண்டு தானிசை பாடிடு நாங்கூர்
வண்புரு டோத்தமமே
2.3

 

1261 பருங்கை யானையின் கொம்பினைப் பறித்ததன்
பாகனைச் சாடிப்புக்கு,
ஒறுங்க மல்லரைக் கொன்றுபின் கஞ்சனை
உதைத்தவ னுறைகோயில்,
கரும்பினூடுயர் சாலிகள் விளைதரு
கழனியில் மலிவாவி
மருங்கெ லாம்பொழி லோங்கிய நாங்கூர்
வண்புரு டோத்தமமே
2.4

 

1262 சாடு போய்விழத் தாள்நிமிர்த் தீசன்தன்
படையொடுங் கிளையோடும்
ஓட வாணனை யாயிரந் தோள்களும்
துணித்தவ னுறைகோயில்,
ஆடு வான்கொடி யகல்விசும் பணவிப்போய்ப்
பகலவ னொளிமறைக்கும்
மாட மாளிகை சூழ்தரு நாங்கூர்
வண்புரு டோத்தமமே
2.5

 

1263 அங்கை யாலடி மூன்றுநீ ரேற்றயன்
அலர்கொடு தொழுதேத்த,
கங்கை போதரக் கால்நிமிர்த் தருளிய
கண்ணன்வந் துறைகோயில்,
கொங்கை கோங்கவை காட்டவாய் குமுதங்கள்
காட்டமா பதுமங்கள்,
மங்கை மார்முகம் காட்டிடு நாங்கூர்
வண்புரு டோத்தமமே
2.6

 

1264 உளைய வொண்டிறல் பொன்பெய ரோன்தன
துரம்பிளந் துதிரத்தை
அளையும், வெஞ்சினத் தரிபரி கீறிய
அப்பன்வந் துறைகோயில்,
இளைய மங்கைய ரிணையடிச் சிலம்பினோ
டெழில்கொள்பந் தடிப்போர்,கை
வளையில் நின்றொலி மல்கிய நாங்கூர்
வண்புரு டோத்தமமே
2.7

 

1265 வாளை யார்தடந் கண்ணுமை பங்கன்வன்
சாபமற் றதுநீங்க
மூளை யார்சிரத் தையமுன் அளித்தவெம்
முகில்வண்ண னுறைகோயில்
பாளை வான்கமு கூடுயர் தெங்கின்வன்
பழம்விழ வெருவிப்போய்
வாளை பாய்தடம் சூழ்தரு நாங்கூர்
வண்புரு டோத்தமமே
2.8

 

1266 இந்து வார்சடை யீசனைப் பயந்தநான்
முகனைத்தன் னெழிலாரும்
உந்தி மாமலர் மீமிசைப் படைத்தவன்
உகந்தினி துறைகோயில்,
குந்தி வாழையின் கொழுங்கனி _கர்ந்துதன்
குருளையைத் தழுவிப்போய்,
மந்தி மாம்பணை மேல்வைகு நாங்கூர்
வண்புரு டோத்தமமே
2.9

 

1267 மண்ணு ளார்புகழ் வேதியர் நாங்கூர்
வண்புரு டோத்தமத்துள்,
அண்ணல் சேவடிக் கீழடைந் துய்ந்தவன்
ஆலிமன் அருள்மாரி,
பண்ணு ளார்தரப் பாடிய பாடலிப்
பத்தும்வல் லார்,உலகில்
எண்ணி லாதபே ரின்பமுற் றிமையவ
ரோடும் கூடுவரே
2.10

ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!