ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
பெரிய திருமொழி – நான்காம் பத்து – ஒன்றாம் திருமொழி
| 1248 | போதலர்ந்த பொழில்சோலைப் புறமெங்கும் பொருதிரைகள் தாதுதிர வந்தலைக்கும் தடமண்ணித் தென்கரைமேல் மாதவன்றா னுறையுமிடம் வயல்நாங்கை வரிவண்டு தேதெனவென் றிசைபாடும் திருத்தேவ னார்தொகையே |
1.1 |
| 1249 | யாவருமா யாவையுமா யெழில்வேதப் பொருள்களுமாய் மூவருமாய் முதலாய மூர்த்தியமர்ந் துறையுமிடம், மாவரும்திண் படைமன்னை வென்றிகொள்வார் மன்னுநாங்கை தேவரும்சென் றிறைஞ்சுபொழில் திருத்தேவ னார்தொகையே |
1.2 |
| 1250 | வானாடும் மண்ணாடும் மற்றுள்ள பல்லுயிரும் தானாய வெம்பெருமான் தலைவனமர்ந் துறையுமிடம், ஆனாத பெருஞ்செல்வத் தருமறையோர் நாங்கைதன்னுள் தேனாரு மலர்பொழில்சூழ் திருத்தேவ னார்தொகையே |
1.3 |
| 1251 | இந்திரனு மிமையவரும் முனிவர்களும் எழிலமைந்த சந்தமலர்ச் சதுமுகனும் கதிரவனும் சந்திரனும், எந்தையெமக் கருள், எனநின் றருளுமிடம் எழில்நாங்கை சுந்தரநல் பொழில்புடைசூழ் திருத்தேவ னார்தொகையே |
1.4 |
| 1252 | அண்டமுமிவ் வலைகடலு மவனிகளும் குலவரையும் உண்டபிரா னுறையுமிடம் ஓளிமணிசந் தகில்கனகம், தெண்டிரைகள் வரத்திரட்டும் திகழ்மண்ணித் தென்கரைமேல், திண்திறலார் பயில்நாங்கைத் திருத்தேவ னார்தொகையே |
1.5 |
| 1253 | ஞாலமெல்லா மமுதுசெய்து நான்மறையும் தொடராத பாலகனா யாலிலையில் பள்ளிகொள்ளும் பரமனிடம், சாலிவளம் பெருகிவரும் தடமண்ணித் தென்கரைமேல் சேலுகளும் வயல்நாங்கைத் திருத்தேவ னார்தொகையே |
1.6 |
| 1254 | ஓடாத வாளரியி னுருவாகி யிரணியனை வாடாத வள்ளுகிரால் பிளந்தளைந்த மாலதிடம், ஏடேறு பெருஞ்செல்வத் தெழில்மறையோர் நாங்கைதன்னுள், சேடேறு பொழில்தழுவு திருத்தேவ னார்தொகையே |
1.7 |
| 1255 | வாராரு மிளங்கொங்கை மைதிலியை மணம்புணர்வான், காரார்திண் சிலையிறுத்த தனிக்காளை கருதுமிடம் ஏராரும் பெருஞ்செல்வத் தெழில்மறையோர் நாங்கைதன்னுள், சீராரும் மலர்பொழில்சூழ் திருத்தேவ னார்தொகையே |
1.8 |
| 1256 | கும்பமிகு மதயானை பாகனொடும் குலைந்துவிழ கொம்பதனைப் பறித்தெறிந்த கூத்தனமர்ந் துறையுமிடம், வம்பவிழும் செண்பகத்தின் மணங்கமழும் நாங்கைதன்னுள், செம்பொன்மதிள் பொழில்புடைசூழ் திருத்தேவ னார்தொகையே |
1.9 |
| 1257 | காரார்ந்த திருமேனிக் கண்ணனமர்ந் துறையுமிடம், சீரார்ந்த பொழில்நாங்கைத் திருத்தேவ னார்தொகைமேல் கூரார்ந்த வேற்கலியன் கூறுதமிழ் பத்தும்வல்லார் எரார்ந்த வைகுந்தத் திமையவரோ டிருப்பாரே |
1.10 |
ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!

