ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
பெரிய திருமொழி – முதல் பத்து – பத்தாம் திருமொழி
| 1038 | கண்ணார்க்கடல்சூழ் இலங்கைக்கிறைவந்தன், திண்ணாகம்பிளக்கச் சரம்செலவுய்த்தாய்., விண்ணோர்த்தொழும் வேங்கடமாமலைமேய, அண்ணா. அடியேன் இடரைக்களையாயே. |
10.1 |
| 1039 | இலங்கைப்பதிக்கு அன்றீறையாய, அரக்கர் குலம்கெட்டவர்மாளக் கொடிப்புள்திரித்தாய்., விலங்கல்குடுமித் திருவேங்கடம்மேய, அலங்கல்துளபமுடியாய். அருளாயே. |
10.2 |
| 1040 | நீரார்க்கடலும் நிலனும்முழுதுண்டு, ஏராலமிளந்தளிர்மேல் துயிலெந்தாய்., சீரார் திருவேங்கடமாமலைமேய, ஆராவமுதே. அடியேற்கருளாயே. |
10.3 |
| 1041 | உண்டாயுறிமேல் நறுனெய்யமுதாக, கொண்டாய்குறளாய் நிலமீரடியாலே, விண்தோய்சிகரத் திருவேங்கடம்மேய, அண்டா. அடியேனுக்கு அருள்புரியாயே. |
10.4 |
| 1042 | தூணாயதனூடு அரியாய்வந்துதோன்றி, பேணாவவுணனுடலம் பிளந்திட்டாய்., சேணார் திருவேங்கடமாமலைமேய, கோணாகணையாய். குறிக்கொள்ளெனைநீயே. |
10.5 |
| 1043 | மன்னா இம்மனிசப்பிறவியைநீக்கி, தன்னாகித் தன்னினருள்செய்யும்தலைவன், மின்னார்முகில்சேர் திருவேங்கடம்மேய, என்னானையென்னப்பன் என்னெஞ்சிலுளானே. |
10.6 |
| 1044 | மானேய்மடநோக்கிதிறத்து எதிர்வந்த, ஆனேழ்விடைசெற்ற அணிவரைத்தோளா., தேனே. திருவேங்கடமாமலைமேய, கோனே. என்மனம் குடிகொண்டிருந்தாயே. |
10.7 |
| 1045 | சேயனணியன் எனசிந்தையுள்நின்ற மாயன், மணிவாளொளி வெண்டரளங்கள், வேய்விண்டுதிர் வேங்கடமாமலைமேய, ஆயனடியல்லது மற்றறையேனே. |
10.8 |
| 1046 | வந்தாயென்மனம்புகுந்தாய் மன்னிநின்றாய், நந்தாதகொழுஞ்சுடரே யெங்கள் நம்பீ., சிந்தாமணியே திருவேங்கடம்மேய எந்தாய்., இனியானுன்னை யென்றும் விடேனே. |
10.9 |
| 1047 | வில்லார்மலி வேங்கடமாமலைமேய, மல்லார்த்திரடோள் மணிவண்ணனம்மானை, கல்லார்த்திரடோள் கலியன்சொன்னமாலை, வல்லாரவர் வானவராகுவர்த்தாமே. |
10.10 |
ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!

