7. கருப்பூரம் நாறுமோ
| 567 | கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ, திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்கும்மோ, மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும், விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே. |
1 |
| 568 | கடலில் பிறந்து கருதாது, பஞ்சசனன் உடலில் வளர்ந்துபோ யூழியான் கைத்தலத் திடரில் குடியேறித் தீய வசுரர், நடலைப் படமுழங்கும் தோற்றத்தாய் நற்சங்கே. |
2 |
| 569 | தடவரை யின்மீதே சரற்கால சந்திரன், இடையுவா வில்வந்தெ ழுந்தாலே போல்,நீயும் வடமதுரை யார்மன்னன் வாசுதே வன்கையில், குடியேறி வீற்றிருந்தாய் கோலப்பெ ருஞ்சங்கெ. |
3 |
| 570 | சந்திர மண்டலம்போல் தாமோத ரன்கையில், அந்தர மொன்றின்றி யேறி யவஞ்செவியில், மந்திரம் கொள்வாயே போலும் வலம்புரியே, இந்திரனு முன்னோடு செல்வத்துக் கேலானே. |
4 |
| 571 | உன்னோ டுடனே யொருகடலில் வாழ்வாரை, இன்னா ரினையாரென் றெண்ணுவா ரில்லைகாண், மன்னாகி நின்ற மதுசூதன் வாயமுதம், பன்னாளு முண்கின்றாய் பாஞ்சசன் னியமே. |
5 |
| 572 | போய்த்தீர்த்த மாடாதே நின்ற புணர்மருதம், சாய்த்தீர்த்தான் கைத்தலத்தே யேறிக் குடிகொண்டு சேய்த்தீர்த மாய்நின்ற செங்கண்மால் தன்னுடய வாய்த்தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய் வலம்புரியே. |
| 573 | செங்கமல நாண்மலர்மேல் தேனுகரு மன்னம்போல் செங்கட் கருமேனி வாசுதே வனுடய, அங்கைத் தலமேறி அன்ன வசஞ்செய்யும், சங்கரையா. உஞ்செல்வம் சாலவ ழகியதே. |
7 |
| 574 | உண்பது சொல்லி லுலகளந்தான் வாயமுதம், கண்படை கொள்ளில் கடல்வண்ணன் கைத்தலத்தே, பெண்படை யாருன்மேல் பெரும்பூசல் சாற்றுகின்றார், பண்பல செய்கின்றாய் பாஞ்சசன் னியமே. |
8 |
| 575 | பதினாறா மாயிரவர் தேவிமார் பார்த்திருப்ப, மதுவாயில் கொண்டாற்போல் மாதவன்றன் வாயமுதம், பொதுவாக வுண்பதனைப் புக்குநீ யுண்டக்கால், சிதையாரோ வுன்னோடு செல்வப்பெ ருஞ்சங்கே. |
9 |
| 576 | பாஞ்சசன் னியத்தைப் பற்பநா பனோடும், வாய்ந்தபெ ருஞ்சுற்ற மாக்கிய வண்புதுவை, ஏய்ந்தபுகழ்ப் பட்டர்பிரான் கோதைதமி ழீரைந்தும், ஆய்ந்தேத்த வல்லா ரவரு மணுக்கரே. |
10 |

