5. மன்னு பெரும்புகழ்
| 545 | மன்னு பெரும்புகழ் மாதவன் மாமணி வண்ணன் மணிமுடி மைந்தன் தன்னை, உகந்தது காரணமாக என் சங்கிழக் கும்வழக் குண்டே, புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப் பொதும்பினில் வாழும் குயிலே, பன்னியெப் போது மிருந்து விரைந்தென் பவளவா யன்வரக் கூவாய். |
1 |
| 546 | வெள்ளை விளிசங் கிடங்கையிற் கொண்ட விமல னெனக்குருக் காட்டான், உள்ளம் புகுந்தென்னை நைவித்து நாளும் உயிர்பெய்து கூத்தாட்டுக் காணும், கள்ளவிழ் செண்பகப் பூமலர் கோதிக் களித்திசை பாடுங் குயிலே, மெள்ள விருந்து மிழற்றி மிழற்றாதென் வேங்கட வன்வரக் கூவாய். |
2 |
| 547 | மாதலி தேர்முன்பு கோல்கொள்ள மாயன் இராவணன் மேல்,சர மாரி தாய்தலை யற்றற்று வீழத் தொடுத்த தலைவன் வரவெங்குங் காணேன், போதலர் காவில் புதுமணம் நாறப் பொறிவண்டின் காமரங் கேட்டு,உன் காதலி யோடுடன் வாழ்குயி லே.என் கருமாணிக் கம்வரக் கூவாய். |
3 |
| 548 | என்புரு கியின வேல்நெடுங் கண்கள் இமைபொருந் தாபல நாளும், துன்பக் கடல்புக்கு வைகுந்த னென்பதோர் தோணி பெறாதுழல் கின்றேன், அன்புடை யாரைப் பிரிவுறு நோயது நீயு மறிதி குயிலே, பொன்புரை மேனிக் கருளக் கொடியுடைப் புண்ணிய னைவரக் கூவாய். |
4 |
| 549 | மென்னடை யன்னம் பரந்துவிளையாடும் வில்லிபுத் தூருறை வான்றன், பொன்னடி காண்பதோ ராசயி னாலென் பொருகயற் கண்ணிணை துஞ்சா, இன்னடி சிலோடு பாலமு தூட்டி எடுத்தவென் கோலக் கிளியை, உன்னொடு தோழமை கொள்வன் குயிலே. உலகளந் தான்வரக் கூவாய். |
5 |
| 550 | எத்திசை யுமம ரர்பணிந் தேத்தும் இருடீகே சன்வலி செய்ய, முத்தன்ன வெண்முறு வற்செய்ய வாயும் முலயு மழகழிந் தேன்நான், கொத்தலர் காவில் மணித்தடம் கண்படை கொள்ளு மிளங்குயி லே,என் தத்துவ னைவரக் கூகிற்றி யாகில் தலையல்லால் கைம்மாறி லேனே. |
6 |
| 551 | பொங்கிய பாற்கடல் பள்ளிகொள் வானைப் புணர்வதோ ராசயி னால்,என் கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித் தாவியை யாகுலஞ் செய்யும், அங்குயி லே.உனக் கென்ன மறைந்துறைவு ஆழியும் சங்குமொண் தண்டும், தங்கிய கையவ னைவரக் கூவில்நீ, சாலத் தருமம் பெறுதி. |
7 |
| 552 | சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச் சதுரன் பொருத்த முடையன், நாங்களெம் மில்லிருந் தொட்டிய கச்சங்கம் நானு மவனு மறிதும், தேங்கனி மாம்பொழில் செந்தளிர் கோதும் சிறுகுயி லே,திரு மாலை ஆங்கு விரைந்தொல்லை கூகிற்றி யாகில் அவனைநான் செய்வன காணே. |
8 |
| 553 | பைங்கிளி வண்ணன் சிரீதர னென்பதோர் பாசத் தகப்பட்டி ருந்தேன், பொங்கொளி வண்டிரைக் கும்பொழில் வாழ்குயி லே.குறிக் கொண்டிது நீகேள், சங்கொடு சக்கரத் தான்வரக் கூவுதல் பொன்வளை கொண்டு தருதல், இங்குள்ள காவினில் வாழக் கருதில் இரண்டத்தொன் றேல்திண்ணம் வேண்டும். |
9 |
| 554 | அன்றுல கம்மளந் தானை யுகந்தடி- மைக்கண வன்வலி செய்ய, தென்றலுந் திங்களு மூடறுத் தென்னை நலியும் முறைமை யறியேன், என்றுமிக் காவி லிருந்திருந் தென்னைத் தகர்த்தாதே நீயும் குயிலே, இன்றுநா ராயண னைவரக் கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன். |
10 |
| 555 | விண்ணுற நீண்டடி தாவிய மைந்தனை வேற்கண் மடந்தை விரும்பி, கண்ணுற வென்கடல் வண்ணனைக் கூவு கருங்குயி லே.என்ற மாற்றம், பண்ணுற நான்மறை யோர்புது வைமன்னன் பட்டர்பி ரான்கோதை சொன்ன, நண்ணுறு வாசக மாலைவல் லார்நமோ- நாராய ணாயவென் பாரே. |
11 |

