பெரியாழ்வார் அருளிச்செய்த
ஐந்தாம் பத்து – மூன்றாம் திருமொழி – துக்கச்சுழலையை
(திருமாலிருஞ்சோலை எம்பெருமானைப் போகவொட்டேனென்று தடுத்தல்)
| 453 | துக்கச்சுழலையைச்சூழ்ந்துகிடந்த வலையைஅறப்பறித்து புக்கினில்புக்குன்னைக்கண்டுகொண்டேன் இனிப்போகவிடுவதுண்டோ ? மக்களறுவரைக்கல்லிடைமோத இழந்தவள்தன்வயிற்றில் சிக்கெனவந்துபிறந்துநின்றாய். திருமாலிருஞ்சோலையெந்தாய். |
1 |
| 454 | வளைத்துவைத்தேன்இனிப்போகலொட்டேன் உந்தனிந்திரஞாலங்களால் ஒளித்திடில்நின்திருவாணைகண்டாய் நீஒருவர்க்கும்மெய்யனல்லை அளித்தெங்கும்நாடும்நகரமும் தம்முடைத்தீவினைதீர்க்கலுற்று தெளித்துவலஞ்செய்யும்தீர்த்தமுடைத் திருமாலிருஞ்சோலையெந்தாய். |
2 |
| 455 | உனக்குப்பணிசெய்திருக்கும்தவமுடையேன், இனிப்போய்ஒருவன் தனக்குப்பணிந்து கடைத்தலைநிற்கை நின்சாயையழிவுகண்டாய் புனத்தினைகிள்ளிப்புதுவவிகாட்டி உன்பொன்னடிவாழ்கவென்று இனக்குறவர்புதியதுண்ணும் எழில்திருமாலிருஞ்சோலையெந்தாய். |
3 |
| 456 | காதம்பலவும்திரிந்துழன்றேற்கு அங்கோர்நிழலில்லைநீரில்லை உன் பாதநிழலல்லால்மற்றோருயிர்ப்பிடம் நான்எங்கும்காண்கின்றிலேன் தூதுசென்றாய். குருபாண்டவர்க்காய் அங்கோர்பொய்சுற்றம்பேசிச்சென்று பேதஞ்செய்துஎங்கும்பிணம்படைத்தாய். திருமாலிருஞ்சோலையெந்தாய். |
4 |
| 457 | காலுமெழாகண்ணநீரும்நில்லா உடல்சோர்ந்துநடுங்கி குரல் மேலுமெழாமயிர்க்கூச்சுமறா எனதோள்களும்வீழ்வொழியா மாலுகளாநிற்கும்என்மனனே. உன்னைவாழத்தலைப்பெய்திட்டேன் சேலுகளாநிற்கும்நீள்சுனைசூழ் திருமாலிருஞ்சோலையெந்தாய். |
5 |
| 458 | எருத்துக்கொடியுடையானும் பிரமனும்இந்திரனும் மற்றும் ஒருத்தரும்இப்பிறவியென்னும்நோய்க்கு மருந்தறிவாருமில்லை மருத்துவனாய்நின்றமாமணிவண்ணா. மறுபிறவிதவிரத் திருத்தி உங்கோயிற்கடைப்புகப்பெய் திருமாலிருஞ்சோலையெந்தாய். |
6 |
| 459 | அக்கரையென்னுமனத்தக்கடலுளழுந்தி உன்பேரருளால் இக்கரையேறியிளைத்திருந்தேனை அஞ்சலென்றுகைகவியாய் சக்கரமும்தடக்கைகளும் கண்களும்பீதகவாடையொடும் செக்கர்நிறத்துச்சிவப்புடையாய். திருமாலிருஞ்சோலையெந்தாய். |
7 |
| 460 | எத்தனைகாலமும்எத்தனையூழியும் இன்றொடுநாளையென்றே இத்தனைகாலமும்போய்க்கிறிப்பட்டேன் இனிஉன்னைப்போகலொட்டேன் மைத்துனன்மார்களைவாழ்வித்து மாற்றலர்நூற்றுவரைக்கெடுத்தாய். சித்தம்நின்பாலதறிதியன்றே திருமாலிருஞ்சோலையெந்தாய். |
8 |
| 461 | அன்றுவயிற்றில்கிடந்திருந்தே அடிமைசெய்யலுற்றிருப்பன் இன்றுவந்துஇங்குஉன்னைக்கண்டுகொண்டேன் இனிப்போகவிடுவதுண்டே? சென்றங்குவாணனைஆயிரந்தோளும் திருச்சக்கரமதனால் தென்றித்திசைதிசைவீழச்செற்றாய். திருமாலிருஞ்சோலையெந்தாய். |
9 |
| 462 | சென்றுலகம்குடைந்தாடும்சுனைத் திருமாலிருஞ்சோலைதன்னுள் நின்றபிரான் அடிமேல்அடிமைத்திறம் நேர்படவிண்ணப்பஞ்செய் பொன்திகழ்மாடம்பொலிந்துதோன்றும் புதுவைக்கோன்விட்டுசித்தன் ஒன்றினோடொன்பதும்பாடவல்லார் உலகமளந்தான்தமரே. |
10 |

